சிதறல்கள்

சிபிஐ விசாரணைக்கு முதல்வர் பழனிச்சாமி சிக்கி இருப்பது மிகபெரும் விஷயம். நிச்சயம் அவர் பதவி விலகிவிட்டுத்தான் விசாரணையினை சந்திக்க வேண்டும்

அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கபட்டால் முதல்வராக தொடரலாம்

ஆனால் 18 வருடம் பெரும் சொத்துகுவிப்பு வழக்கினை இழுத்தடித்து பதவியில் நீடித்தவர் ஜெயலலிதா என்பது இவர்களுக்கு மிகபெரும் உதாரணம்

ஜெயா வழியில் போராடுவோம் என அவர்கள் போக்கில் இருப்பார்கள்

பால் கமிஷன், ரே கமிஷனில் எல்லாம் சிக்கியவர் ராமசந்திரன், பெரும் வழக்குகளில் தண்டனை எல்லாம் பெற்றும் பதவியில் இருந்தே செத்தவர் ஜெயலலிதா

அந்த கட்சியில் பழனிச்சாமி மட்டும் பதவி விலகுவாரா என்ன?

[ October 13, 2018 ]

============================================================================

இருவருடமாக அங்காராவிற்கும் வாஷிங்டன்னுக்கும் இடையே பெரும் தகறாறு ஏற்பட காரணமான அந்த அமெரிக்க போதகர் புரூசன் விடுவிக்கபட்டுவிட்டார்

துருக்கி நீதிமன்றம் அவரை விடுவிக்க உத்தரவிட்ட நிலையில் அமெரிக்கா கடும் உற்சாகத்தில் இருக்கின்றது

இந்தியாவில் பாபா ராம்தேவ், ஜக்கி சாமிகளுக்கு பாஜக ஆதரவு என்பது போல அமெரிக்காவில் டிரம்ப் என்பவர் கிறிஸ்தவ பாதிரிகளுக்கு கடும் ஆதரவானவர்

அந்த கிறிஸ்தவ சக்திகள்தான் அவரை அதிபரும் ஆக்கின‌

கிறிஸ்தவ போதகர் விடுவிக்கபட்ட நிலையில் டிரம்பிற்கு கடும் உற்சாகம்

[ October 13, 2018 ]

============================================================================

பரிதி மறைந்துவிட்டார் எனும் செய்தி நெஞ்சில் குருதியாய் கொட்டுகின்றது

அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி, திமுக இருக்கும் வரை அவர் பெயரும் இருக்கும்

[ October 13, 2018 ]

============================================================================

முதலாளித்துவ ஆதரவு நிலைப்பாடு கொண்டது பாஜக: மாயாவதி விமர்சனம்

உபி முழுக்க பல நூறு கோடியில் சொந்த சிலைகளை வைத்தது எல்லாம் எந்த வகை என அம்மணியிடம் யாரும் கேட்க கூடாது

[ October 14, 2018 ]

============================================================================

வழக்கமாக திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் உடமைக்கும் பர்சுக்கும்தான் ஆபத்து வரும், இப்பொழுது உயிருக்கும் ஆபத்து வந்தாயிற்று

துபாய்க்கு சென்ற விமானம் சுற்றுசுவர் ஆண்டெனா எல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு பறந்ததில் பெரும் கேள்விகள் எல்லாம் எழுகின்றன, விசாரணை தீவிரமாக நடக்கின்றது

நிச்சயம் 130 பேரும் தப்பியது மிகபெரும் விஷயம், நடந்திருக்கும் விஷயம் அவ்வளவு ஆபத்தானது

ஆனால் எதையும் கண்டுகொள்ளாத மோடி அரசு போல விமானி சுவர் இடிந்ததை கண்டு கொள்ளாமல் அவர் போக்கில் பறந்திருக்கின்றார், சுவரே இந்த பாடுபட்டால் விமானம் என்ன பாடுபட்டிருக்கும் என அஞ்சிய நிர்வாகம் பெங்களூர் நிலையம் ஊடாக விமானியினை தொடர்பு கொண்டு மும்பையில் அவசரமாக தரை இறக்கி இருகின்றார்கள்

அதுவரை விமானிக்கோ விமான பயணிகளுக்கோ ஏதும் தெரியவில்லை என்பதுதான் ஆச்சரியம்

(சுவரின் வெளிபகுதியில் பழனிச்சாமிக்கான விளம்பரம் இருந்திருகின்றது, ஒருவேளை விமானி தினகரன் ஆதரவாளரோ என்ற சந்தேகம் எல்லாம் வந்திருக்கலாம்)

தீவிர விசாரணையில் தெரிய வந்திருப்பது என்னவென்றால் விமானத்தில் சரக்கினை அதிகம் ஏற்றி இருக்கின்றார்கள் இதனால் குறிப்பிட்ட ஓடுபாதையில் ஓடியும் விமானம் எழவில்லை கொஞ்சம் அதிக தூரம் ஓட வேண்டி இருக்கின்றது

அதிக தூரம் ஓடி எழும்பியதால் சுவற்றில் லேசாக மோதிவிட்டு ஆண்டெனாவினை சரித்துவிட்டு சென்றிருக்கின்றது

எப்படி அளவுக்கு அதிகமான சரக்கினை ஏற்றினார்கள் என கடும் விசாரணை நடக்கின்றது

நஷ்டத்தில் இருக்கும் ஏர் இந்தியா அளவுக்கு மீறி சரக்குகளை ஏற்றி ஆபத்தான விஷயங்களுடன் விளையாடுகின்றது என்ற சர்ச்சை இப்பொழுது வருகின்றது

விவகாரம் இன்னும் ஓயவில்லை, திருச்சி விமான நிலையம் பரபரப்பிலே இருக்கின்றது [ October 14, 2018 ]

Image may contain: airplane
============================================================================

கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சொந்த மகளின் காதல் திருமணத்தில் மணமகனை வெட்டிவிட்டு மகளை கடத்தி இருக்கின்றார்

நாம் தமிழர் கட்சியில் சாதி மத பேதமில்லை, தமிழர் யாவரும் சமம் என கத்தும் ஒரு பயலையும் காணவில்லை

“மணமகளும் தமிழச்சி, மணமகளும் தமிழன் பின் என்னய்யா சிக்கல் என் உறவே..” என அங்கிள் சைமனும் பொங்கவில்லை

திமுக கட்சிக்காரன் எங்காவது தேங்காய் உடைத்தால் கூட பொங்கும் எதிர்கட்சிகளும் , சைமன் கோஷ்டியும் இந்த விவகாரத்தில் சத்தமே இல்லை

[ October 14, 2018 ]

============================================================================

நெல்லை புஷ்கரணி விழாவில் சிறுவன் நீரில் மூழ்கி பலி

இதைத்தான் அப்பொழுதே சொன்னோம் தாமிரபரணி பார்க்கத்தான் அமைதியான நதி அதில் ஆபத்துக்கள் அதிகம் அதனால் பலத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றோம்

சிலர் குதியோ குதி என குதித்தார்கள், இதோ ஒரு உயிரே போய்விட்டது

தகுந்த எச்சரிக்கையும் முன்னேற்பாடும் செய்திருந்தால் இதை தடுத்திருக்க முடியும்.

தாமிரபரணியின் பல பகுதிகள் ஆபத்தானவை என்பது மறுபடியும் நிரூபணமாகி இருக்கின்றது

[ October 14, 2018 ]

============================================================================

இந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து என்பவருக்கு பாகிஸ்தானோ காலிஸ்தானோ வசியம் செய்துவிட்டார்கள், மனிதர் பாகிஸ்தான் கிறுக்கு பிடித்து அலைகின்றார்

நேற்று சர்ச்சையாக பேசி சிக்கி இருக்கின்றார்

என்ன பேசி இருகின்றார்? “பாகிஸ்தானின் பஞ்சாபில் பஞ்சாபி பேசுவார்கள் என்னால் அங்கு சென்று வாழமுடியும் ஆனால் தமிழகத்தில் என்னால் வாழமுடியுமா? இட்லி கூட எனக்கு சரிவராது

அதனால் இந்தியாவில் வாழ்வதை விட கலாச்சார ரீதியாக பொருந்தும் பாகிஸ்தானில் வாழ்வது எனக்கு எளிது”

மனிதர் காங்கிரஸ்காரராக இருந்து கொண்டு இப்படி பேசினால் விடுவார்களா? வரிந்து கட்டி அடிக்க தொடங்கி இருக்கின்றார்கள்

சொந்த நாட்டில் வாழமுடியாமல் பாகிஸ்தானில் வாழுவேன் என்ற அளவிற்கு சித்து பேசியிருப்பது கண்டிக்கதக்கது என்பதில் சந்தேகமில்லை

இந்த தமிழுணர்வாளர்கள், ஈழ அல்ட்ராசிட்டிகளுக்கு இந்த விஷயம் தெரியுமா இல்லையா என்பது தெரியவில்லை

தெரிந்தால் ஐதரபாத், மும்பை, கலகத்தா, டெல்லிவிட எங்களுக்கு யாழ்பாணத்தில் வாழ்வது எளிது, ஆமை கறி முதல் எல்லாம் கிடைக்கும் தமிழ்மொழி பேசுவார்கள் அதனால் அங்கு வாழ விரும்புகின்றோம் என கிளம்பலாம்

அங்கிள் சைமன் அப்படி பேசகூடியவர், ஆனால் அதற்கு காங்கிரசும் திமுகவும் ஆட்சியில் இருக்க வேண்டும்

அதிமுகவும் பாஜகவும் இருந்தால் அங்கிள் மகா மவுனமாகிவிடுவார்

[ October 14, 2018 ]

Image may contain: 1 person, beard and hat
=========================================================================

திமுகவுடன் கூட்டணி கிடையாது; ஆனால் காங்., கூட்டணியை பரிசீலிப்பேன்!‍ கமலஹாசன்

ஆக இவர் திமுகவினை எதிர்த்தே இறக்கபட்டவர் என்பது புரிகின்றது, திமுகவோடு நான் வரமாட்டேன் என இவர் சொல்லிவிட்டதால் திமுகவிற்கான ஆபத்து நீங்கியது

காங்கிரசோடு கூட்டணி என அன்னார் சொல்லி இருப்பதில் இருந்து இவர் குற்றுயிராக கிடக்கும் தமிழக காங்கிரசை சோலி முடிக்க அனுப்பட்டிருக்கும் ஸ்லீப்பர் செல் என்பது இன்னும் நன்றாக விளங்குகின்றது

[ October 15, 2018 ]