சிதறல்கள்

தங்கள் “செக்க சிவந்த வானம்” படத்தின் பிரமோஷனுக்காக மணிரத்னமும் அவரின் மனைவியும் நீண்ட காத்திருப்புக்கு பின் தலைவியினை கண்டனர்

தலைவியின் ஆதரவிற்காக தவித்து நிற்பவர்களில் மணிரத்னம் குடும்பமும் உண்டு என்பதில் சங்கம் பெருமை அடைகின்றது..

தலைவி ஆதரவின்றி இளைஞர்களின் அபிமானத்தை பெறுவது சாத்தியமில்லை என் உணர்ந்துவிட்ட மணிரத்தினத்திற்கு நன்றி

[ October 15, 2018 ]
Image may contain: 3 people, people smiling, closeup and indoor
============================================================================

ஏம்மா சின்மயி நீர் நாயக்க சாதி என்கின்றார்களே அப்படியா?

அங்கிள் சைமன் வைரமுத்துவிற்கு மிக கடுமையாக அதாவது வைரமுத்து கையபிடிச்சி இழுத்தாலும் ஆதரிப்பேன் என வக்கலாத்து வாங்குவதில் சந்தேகம் அதிகரிக்கின்றது [ October 15, 2018 ]

============================================================================

சாதி ஆராய்ச்சி முற்றிபோய் அய்யப்பன் செட்டியார் என்றொரு கோஷ்டி கிளம்பி இருக்கின்றது

இனி பகவதி அம்மன் நாயராகவும் அடையாளபடுத்தபடலாம்

இந்த விஷ்ணு என்பவர் நீல வண்ணம் என்பதால் அவரும் தலித் ஆகலாம் இல்லை பாற்கடல் மேல் இருப்பதால் கோனார் ஆகலாம்

பிரம்மன் என்பவர் சந்தேகமில்லாமல் பிள்ளைமார் சாதி ஆகலாம், எப்பொழுதும் எழுதிகொண்டே இருக்கின்றார்

பாவம் சிவபெருமான் என்பவர்தான், அவரை எந்த சாதியில் சேர்க்க போகின்றார்களோ தெரியாது, மிக சிக்கலான நிலை அவருடையது

[ October 15, 2018 ]

============================================================================

இந்த அய்யப்பன் செட்டியார் என்பதை யார் எழுப்பினார் என்றால் விஷயம் திருமாளவன் மேல் வந்து நிற்கின்றது

அன்னாரின் பேட்டி ஒன்றில் பொளந்து கட்டுகின்றார், அதாவது புத்த சமண மதத்தாரை பிராமணர் தீண்டதகாதவர்களாக விலக்கினார்களாம்

தீண்டதகாத கூட்டம் இப்படி உருவாகிற்றாம், அந்த பொல்லாத பார்ப்பணியம் சிலரை வர்ணாசிரம தத்துவபடி கடவுளாக்கிற்றாம், அதில் செட்டியாரான ஐயப்பன் கடவுளாகிவிட்டாராம்

ஏன் ஐயப்பன் செட்டியார் என்றால் சாத்தன் என்பது தலைவன் என பொருளாம், சாத்தன் சாத்தனார் என்பதெல்லாம் சிலப்பதிகாரத்தில் வரும் சமணபெயராம் அது மருவி சாஸ்தா ஆயிற்றாம்

இந்த கண்டுபிடிப்பிற்காக உடனே திருமாவிற்கு பெரும் டாக்டர், அல்லது மா டாக்டர் என்றொரு பட்டம் கொடுக்க வேண்டும்

எப்படி எல்லாம் குழப்புகின்றார் திருமா?

சாத்தன் எனும் சொல்லுக்கு பெரியவர் என்றும் பொருள், சாத்து எனும் சொல் சேர்ந்திருக்கும் கூட்டம் எனும் பொருளிலும் வரும்

சாஸ்தா எனும் சொல்லுக்கு மூலவர் என பொருள், ஆற்றங்கரையிலும் நீர்நிலை அருகிலும் அத்தெய்வம் அமர்ந்திருக்கும்

சித்தூர் சாஸ்தாவின் சாயலும் சபரிமலை ஐயப்பன் சாயலும் ஒரே போன்றிருக்கும் இரண்டும் பழமையானவை

சாஸ்தா என்பவர் காவல்தெய்வம், குறிப்பாக நீர் நிலைகளின் அருகில் அவருக்கு ஆலயம் அமைக்கபட்டிருக்கும், சில உபதேவதைகளோடு அமர்ந்திருப்பார். அவரவர் வலிமைக்கு தக்கபடி 1008 தேவதை, 108 தேவதை அல்லது ஆக கடைசியாக 21 உபதேவதை கொண்ட சாஸ்தாக்கள் உண்டு.

சாத்து எனும் தமிழ்சொல்லுக்கு சேர்ந்து இருப்பது என பொருள், பெரும்பாலும் ரத,கஜ, நாக, துதி பரிவாராங்களுடன் அமர்ந்திருப்பார். மிக கண்டிப்பாக நீர் ஆதாரங்களின் கரையில் மட்டும் இருப்பார்.

சும்மா யாரோ குழப்பவாதிகள் பேசியவதை வைத்து கொண்டு தன் சாதிய கண்ணோட்டத்தை புகுத்தி திருமா பேசிகொண்டிருப்பது பெரும் அயோக்கியதனம்

சமணரும் பவுத்தரும் சைவ உணவாளிகள், அசைவம் உண்போர் பக்கம் அவர்கள் தள்ளியே இருந்தனர்

பிராமணரும் அதையே பின்பற்றினரே தவிர புதிதாக எதுவும் அல்ல‌

இது தெரிந்தும் திருமா வம்புக்கு ஐயப்பன் செட்டியார் என வந்து நிற்பது பெரும் குழப்பம் விளைவிக்கும் செயலாகும்

சாஸ்தா வழிபாடு என்பது இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் முக்கியமானது, ஆதிகாலத்தில் இருந்தே தொடர்ந்திருக்கின்றது

புதிய சீழ்தலை சாத்தனாராக உதித்து கட்டுகதைகளை விடும் திருமா தன் சீழ்பிடித்த சிந்தனையினை நிறுத்துவது நல்லது

ஒரு அடிப்படை தத்துவம் கூட தெரியாமல் கொடிபிடிக்கும் திருமாவினையும் அவரின் அடிப்பொடிகளையும் நினைத்தால் பரிதாபமே மிஞ்சுகின்றது

[ October 15, 2018 ]

============================================================================

நாம் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனாலும் இதை ஆதரிக்கின்றோம்

கேட்டால் வடக்கே இருந்து வரும் டிரைவர்களுக்கு தமிழ் தெரியாதாம், ஆங்கிலம் தெரியாதாம் அதனால் இந்தியில் எழுதவேண்டுமாம்

சரி, தமிழகத்திலிருந்து வடக்கே செல்லும் டிரைவர்களுக்கு இந்தி தெரியுமா? ஆங்கிலம் தெரியுமா?

வடக்கே முதலில் தமிழில் எழுதிவிட்டு தெற்கே இந்தியில் எழுதட்டும்

இந்தி தெரிந்தவர்களுக்கு நாட்டின் எல்லா இடத்திலும் வசதி, இந்தி தெரியாதோருக்கு ஒரு வசதியும் இல்லை அவர்கள் படாதபாடு படட்டும் என்பதெல்ல்லாம் என்ன வகை நியாயம்?

முதலில் வடக்கே மைல்கற்களில் தென்னக மொழிகள் வரட்டும், அதன் பின் இங்கே இந்தியில் எழுதி ஹை ஹை என குதிரை ஓட்டலாம்

[ October 15, 2018 ]

Image may contain: outdoor
===========================================================================

கடும் பிரச்சினைகளும் சர்ச்சைகளும் வரும்பொழுது இந்த பாரதிராஜாவினை எங்கே என தேடினால் மனிதர் என்ன செய்திருகின்றார் தெரியுமா?

ஈழம் சென்று கிளிநொச்சியில் பல்லிளித்து கொண்டிருக்கின்றார்

எந்த பாரதிராஜா?

இலங்கைக்கு யாரும் செல்ல கூடாது, ரஜினி செல்லவே கூடாது என கொடிபிடித்த அதே பாரதிராஜா

ஏம்பா திருமாவளவரே,

ரஜினி என்றால் செல்ல கூடாது, பாரதிராஜா சென்றால் சத்தம் காட்டாமல் இருப்பீரா? கொஞ்சம் கத்தினால்தான் என்ன?

[ October 15, 2018 ]
Image may contain: one or more people and people standing
=========================================================================

ரஜினி யாழ்பாணம் செல்ல முயன்றபொழுது மிக கடுமையாக எதிர்த்த திருமாவளவன் எனும் போலி ஈழஅபிமானி இப்பொழுது பாரதிராஜா யாழ்பாணம் சென்றிருக்கும் பொழுது சத்தமே இல்லை

திருமா எனும் ஈழவியாபாரியினை வன்மையாக கண்டிக்கின்றோம்,

அவரோடு சேர்ந்து ரஜினியினை எதிர்த்த அத்தனை ஈழவிஷ போராளிகளையும் இப்பொழுது சத்தமே இல்லை என்பதால் அனைவரையும் கண்டிக்கின்றோம்

கண்டிக்க நினைப்பவர்கள் எம்மோடு சேர்ந்து கண்டிக்கலாம்

[ October 16, 2018 ]

============================================================================

திமுகவின் செய்தி தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் நீக்கபட்டுவிட்டாராம்

காரணம் கலைஞர் சிலை திறப்பு தொடர்பாக ஏதோ சொல்லிவிட்டாராம்

இளங்கோவனின் தந்தை டிகேசீனிவாசகம் திமுகவின் தத்துவ மேதை என கலைஞரால் கொண்டாடபட்டவர், அக்குடும்பமே திமுகவிற்காக உழைத்த குடும்பம், அப்படிபட்ட இளங்கோவன் பதவியில் இருந்து நீக்கபட்டிருகின்றார்

ஸ்டாலின் ஜெயலலிதா ஆகிவருவதும், திமுக ஜெயா காலத்து அதிமுக போல் ஆகிவிட்டதும் தெரிகின்றது

அதிமுக இப்பொழுது என்ன ஆனது என எல்லோருக்கும் தெரியும்

ஜெயா எம்ஜிஆர் விசுவாசிகளை பழிவாங்கியது போல ஸ்டாலின் கலைஞரின் விசுவாசிகளை குறிவைத்திருப்பது புரிகின்றது

இன்னொரு பக்கம் இந்த கனிமொழி அமெரிக்காவில் ஐ.நா மாநாட்டில் முழங்கிகொண்டிருக்கின்றார், அவர் ஜாமீன் வாங்கியதற்கே சென்னையினை முன்பு அதிர வைத்த திமுக அமைதி காக்கின்றது

அவரை வாழ்த்த கூட யாருமில்லை, கலைஞர் இருந்தால் இப்படி நிச்சயம் இருக்காது, பெரியார் சொன்ன பெண்விடுதலை என கிளம்பி இருப்பார்கள்

திமுகவில் நடப்பது எதுவும் சரியாகபடவில்லை, இது கட்சிக்கு நல்லதுமில்லை

[ October 16, 2018 ]

============================================================================

இந்த மோடி அரசு என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருக்கின்றது, அதாவது இவர்கள் ஆயிரம் சொல்லலாம் ஆனால் சம்பந்தபட்ட நாடுகள் ஏற்றுகொள்ளுமா?

இந்திய ஓட்டுநர் உரிமம் பல நாடுகளில் செல்லும் என அறிவித்தார்கள், ஆனால் சம்பந்த நாடுகளோ சிரித்துகொண்டு அதை காதில் வாங்கவே இல்லை

இது எங்கள்நாடு, நாங்கள் வைத்ததுதான் வாகன சட்டம் என அவர்கள் போக்கில் இருக்கின்றார்கள்

இப்பொழுது கச்சா எண்ணெய்க்கு இந்திய பணத்தை டாலருக்கு பதிலாக ஏற்றுமதி நாடுகள் பெறவேண்டும் என்கின்றது இந்தியா, ஒரு நாடும் கண்டுகொள்ளவில்லை

இந்தியா எண்ணெயினை மிகபெரும் அளவில் இறக்குமதி செய்யும் நாடு, டாலரில் நடைபெறுவதால் அமெரிக்காவின் வருமானம் அதிகம்

எக்காரணம் கொண்டும் அதை எளிதில் விடாது அமெரிக்கா, சதாம் உசேன் வீழ முதல் காரணமே வணிகத்தில் டாலரை மாற்றியதுதான்

எண்ணெய் வளநாடுகள் முழுக்க அமெரிக்கா கையில் இருக்க, டாலரை விரட்டும் சாத்தியம் மிக குறைவு

இவர்களாக ஆயிரம் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள், உலக நாடுகள் எதுவும் கண்டுகொள்வதாக தெரியவில்லை

[ October 16, 2018 ]