சிதறல்கள்
தன்னை கொல்ல இந்திய உளவுதுறையான ரா திட்டமிட்டிருப்பதாக பகிரங்கமாக இலங்கை அதிபர் சொல்லி இருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கின்றது
இலங்கையில் இந்திய தலையீடு உண்டு, ராஜபக்சே சீனா பக்கம் சரிந்ததால் அவரை தோற்கடித்ததில் இந்தியா உதவி உண்டு என ராஜபக்சேவே சொல்லி இருந்தார்
இப்பொழுது காட்சிகள் மாறுகின்றன, இந்திய எதிர்ப்பையும் மீறி ஹம்பாந்தோட்டாவினை சீனாவிற்கு தாரை வார்த்ததிலும் இன்னும் பல விஷயங்களிலும் சிறீசேனாவிற்கும் இந்தியாவிற்கும் உரசிற்று
சந்தடி சாக்கில் ராஜபக்சே டெல்லி எல்லாம் வந்து ஒரு மாதிரி காட்சிகளை நடத்தினார்
தேர்தல் வேறு வரும் நேரம், இலங்கை பொருளாதாரம் அதள பாதாளத்தில் கிடக்கின்றது
(சீனாவிடம் கையேந்தினால் அப்படித்தான் ஆகும்)
இதனால் ரா தன்னை கொல்லபோவதாக பெரும் அனுதாபத்தினை தேடுகின்றார் சிரீசேனா
ரா என்பது ஆனானபட்ட ஜெயவர்த்தனேவினையே கொல்லவில்லை எனும்பொழுது இந்த சிறீசேனாவினை எல்லாம் கொல்லும் அவசியம் இருக்காது
இதெல்லாம் அரசியல் கணக்கு
ஆனால் எந்த வழியில் ரா தன்னை கொல்ல திட்டமிட்டது என்பதை சிரீசேனா சொல்ல மறுத்துவிட்டார்
அணல் அடிக்கின்றது விஷயம்
விரைவில் தமிழகத்து சீமான் , வைகோ மூலம் புலிகளை மீள இணைத்து தன்னை கொல்ல சதி என சிரிசேனா சொன்னாலும் சொல்லலாம்
சொன்னால் என்னாகும்?
அங்கிள் சைமன் இந்திய உளவுதுறை ஆளா? என்ற கேள்வி எழும், அங்கிளோ இல்லை உறவே இல்லை, நான் இந்திய அடியாள் இல்லை என சொல்லிவிட்டு பறந்தேவிடுவார்
ஆம் இந்திய உளவுதுறையின் இயக்கம் சீமான் என்றால் அங்களுக்கு மகா ஆபத்து
இதனால் சிறீசேனா சீமான் எனும் புலி அபிமானி மூலம் என்னை சொல்ல ரா சதி என சொன்னால் அடுத்த காட்சிகள் மகா சுவாரஸ்யமாக இருக்கும்
[ October 17, 2018 ]


அடுத்தமாதம் மோடி இலங்கை செல்லவுள்ள நிலையில் என்னை கொல்ல ரா சதி என சிறீசேனா அலறியது கொந்தளிப்பினை ஏற்படுத்திய நிலையில் இப்பொழுது இலங்கை அடக்கி வாசிக்கின்றது
நாங்கள் அப்படி சொல்லவே இல்லை என எச்.ராசா ஸ்டைலில் இலங்கை அரசு பல்டி அடிக்கின்றது
உண்மை நிலவரம் என்னவென்றால் இலங்கையில் ரா ஆப்பரேஷன் உண்டு, அதில் ஒரு உளவாளி பிடிபட்டிருக்கின்றான்
பொதுவாக உளவாளிகள் பல வேடங்களில் அலைவார்கள் என்பதால் சந்தேகத்தின் பேரில் பிடிபடுவது சாதாரண விஷயம்
ஆனால் இந்த உளவாளி புதியவர் போலிருக்கின்றது, என்னமோ சொல்லிவிட்டார்
அவன் என்ன உளறினானோ தெரியாது விஷயம் இந்த அளவு பெரிதாகிவிட்டது
ஆக இந்த சலசலப்பு வர உளவாளிகளை சரிவர பயிற்சியளிக்காதா ரா வே காரணம் என்கின்றன செய்திகள்
பின்னே?
அங்கிள் சைமனை பார்த்தாலே தெரியவில்லையா ரா வின் தற்போதைய பயிற்சி எப்படி இருக்கும் என்று? [ October 17, 2018 ]
============================================================================
தலைவி குஷ்பு ஆரியா, சித்தார்த்துடன் எல்லாம் செல்பி எடுக்கும் காட்சிகள் நிறைய வருகின்றன
இதன் பிண்ணணி பற்றி விசாரிக்கும் பொழுது பலத்த அதிர்ச்சி வருகின்றது
தேர்தல் நெருங்கும் நேரத்தில் தலைவி தென்சென்னையில் போட்டியிட்டு வெல்ல போகும் நேரத்தில் அவரின் பெயரினையும் புகழையும் கெடுக்க எதிர்கோஷ்டி செய்யும் பெரும் பழிபரப்பும் காரியம் என இது அறியபடுகின்றது
சங்கம் தன் தீவிர விசாரணையில் இதனை உறுதிபடுத்துகின்றது
தலைவி மிக பொறுப்பான கட்சி பதவியில் இருப்பவர், வருங்கால மத்திய அமைச்சர்
அவரின் வளர்ச்சி பொறுக்காமலும், அவரின் நற்பெயருக்கும் புகழுக்கும் இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் இந்த போட்டோஷாப் படங்கள் வந்திருகின்றன
இப்படங்களை சங்கம் புறக்கணிக்கின்றது, தலைவியின் பெயருக்கும் புகழுக்கும் வந்திருக்கும் இந்த மோசடியினை எப்படி தடுப்பது என சங்கம் தீவிர ஆலோசனையில் இருக்கின்றது
ஆக இவை எல்லாம் போட்டோசாப் படங்கள், யாரும் நம்ப வேண்டாம்
இதனை செய்த சதிகார கும்பலின் முகத்திரை விரைவில் கிழிக்கபடும் என ராகுல்காந்திக்கே சங்கம் சொல்லி கொள்கின்றது
[ October 17, 2018 ]


இன்று அதிமுகவின் 47-வது ஆண்டு விழா: எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
ஆக தமிழகத்தை அக்கட்சி சீரழிக்க ஆரம்பித்து 47 வருடம் ஆகின்றது.
[ October 17, 2018 ]
============================================================================
“உன் இடையோ ஒரு உடுக்கை
உன் மார்போ ஒரு படுக்கை..”
அட.. அட.. அட
“இது கம்பன் காணாத சிந்தனை,
உன் காதோடு யார் சொன்னது….” [ October 17, 2018 ]
============================================================================
ஏம்பா சின்மயி புருஷா..
கையில் என்ன தட்டு நிறைய மிக்சரா?…
நிதானமாக நன்றாக மென்று உண்ணவும், உடலுக்கும் குடலுக்கும் நல்லது
[ October 17, 2018 ]
============================================================================
என்னோடு 35 ஆண்கள் பணிபுரிந்தார்கள், அவர்கள் மேல் எல்லாம் குற்றமா சொன்னேன்? : லீலா மணிமேகலை
ஆக 35 பேரின் நிம்மதியும் தூக்கமும் தொலைந்தே போனது, இனி 35 பேரும் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்பதை சொல்லியா தெரியவேண்டும்?
[ October 17, 2018 ]
============================================================================
தமிழகமே சின்மயி, லீலா மணிமேகலைன்னு திசைமாறி நிக்குது, ஆளாளுக்கு மி டூ இம்சைகள்
இந்த கேப்பில் இவர் ரகசியமாக தினகரனை பார்த்துவிட்டு வந்துவிடுவாரோ? விட கூடாது, ரகசிய காவல் சிசிடிவியோடு போட்டே தீர வேண்டும்

இந்த பாடகிகளும் நடிகைகளும் மி டூ என கிளம்பினால், இந்த சித்தார்த் என்பவருக்கு வியர்த்துவிடுகின்றது
பெண்களுக்கு நான் ஆதரவு என குறுக்கும் மறுக்குமாக ஓடிகொண்டே இருக்கின்றார்
மனிதரை பார்க்கும் பொழுது ஆடு களவெடுத்து பஞ்சாயத்தில் சிக்கும் வடிவேலு காமெடி நினைவுக்கு வருகின்றது
இனி அந்த சமந்தா புள்ள வராமல் இவர் அடங்குவதாக தெரியவில்லை
[ October 17, 2018 ]
===========================================================================
“வாழ்ந்தா ராமனா வாழனும் இல்லே ராவணனா வாழனும், அதில்லாம சும்மா இடையில நின்னு பொய்யா நடிக்கிறது எனக்கு பிடிக்காது..” என்றார் தலைவன் எம்.ஆர் ராதா
அப்படி கவிஞன் என்பவன் கண்ணதாசனாக வெளிப்படையாக இருக்க வேண்டும் இல்லை வாலி போல வைராக்கியத்தோடு இருக்க வேண்டும் என தமிழ் கூறும் திரையுலகம் அறிந்து கொண்டிருக்கின்றது [ October 17, 2018 ]
============================================================================
மறைந்த பரிதி இளம்வழுதியினை இந்திரஜித்தன், அபிமன்யு என புகழ்ந்தவர் கலைஞர்
என்னதான் நாத்திகராக இருந்தாலும், ராமனை அறவே நம்பாதவராக இருந்தாலும் அவர் தேவைக்கு ராமாயண, மகாபாரத பாத்திரங்களை பயன்படுத்திகொள்பவராகவே கலைஞர் இருந்திருக்கின்றார்
[ October 18, 2018 ]