சிதறல்கள்

“என்ன கைய பிடிச்சி இழுத்தியா?” போட்டியில் வைரமுத்து வெற்றி அடைந்தார், சின்மயி அவுட்்

ஆம், சின்மயியும் அவர் தாயாரும் சொல்லும் குற்றசாட்டுக்கள் அடிப்படை ஆதாரம் கூட இல்லாததாயிற்று

வைரமுத்து நேரடியாக சின்மயிடம் தவறாக பேசவில்லை, சின்மயி விரலை கூட தொடவில்லை, சம்பவம் நடந்ததாக சின்மயி சொல்வது சுவிஸில் அதுவும் இன்னொருவர் மூலமாக வைரமுத்து தன்னை அணுகினார் என்றார்

சென்னையில் அனுதினமும் பார்க்க கூடிய, ஏன் நல்லவிதமான தொழில் உறவில் இருந்தும் கூட சின்மயியிடம் தன் விருப்பத்தை தெரிவிக்கா வைரமுத்து சுவிஸில் அதுவும் யார் மூலமாகவோ தெரிவித்தார் என்பது ஏற்புடையது அல்ல‌

அந்த சுவிஸ் நபரும் வைரமுத்து அப்படி சொல்லவில்லை என சொல்லிவிட்டதால் சின்மயி விக்கெட் வீழ்ந்தது

சின்மயி கோர்ட்டுக்கு போனாலும் நிரூபிக்க முடியா விவகாரம் இது.

இப்பொழுது அடுத்த சுற்றில் தியாகராஜனும், அர்ஜூனும் சிக்கி இருக்கின்றார்கள்

ஆச்சரியமாக மனைவி பிரிந்து வாழும் பிரசாந்த் சிக்காத பொழுது தியாகராஜன் சிக்கி இருக்கின்றார்

வைரமுத்து வெளிவந்தது போல் இவர்கள் வருவார்களா? இல்லை குற்றம் நிரூபிக்கபடுமா என தெரியவில்லை

சுருக்கமாக சொல்ல போனால் செத்துபோன நடிகர்கள் எல்லாம் பாக்கியவான்கள்

[October 22, 2018 ]

============================================================================

 

நான் யாருக்காக வாழ்கின்றேன், எதற்கு வாழ்கின்றேன் என எனக்கே தெரியவில்லை ஆனால் எனக்காக வாழ்பவர் என் தாய்க்கு பின் என் மனைவி, அதாவது பாகம்பிரியாள்

அன்னாருக்கு இன்று பிறந்தநாள், என்னையும் ஒருத்தி கட்டி அழவேண்டும் என்பதற்க்காகவே தியாக பிறப்பொன்று பிறந்த நாள்.

காரணம் என்னோடு வாழ்வதென்பது உலகின் மிக கடினமான காரியம், அதுவும் மனைவியாக வாழ்வதென்பது மிக மிக கொடுமையான விஷயம்.

உதாரணம், அழகிய கார்கள் அணிவகுத்துவரும்பொழுது அதானை காட்டி பார்த்தீர்களா என்பாள், இந்த 100 கார்களுக்கு எவ்வளவு பெட்ரோல் வேண்டும், அப்படியானால் உலகெல்லாம் எவ்வளவு வேண்டும், எத்தனைஆயிரம் லிட்டர்கள் நொடிக்கு காலியாகும், அரபுசிக்கலுக்கு அதுதான் காரணம் என்பேன் தலையில் அடித்த்து கொள்வாள்

பட்டுசேலைகளை காட்டி, எப்படி அழகு என்பாள், உனக்கு பட்டின் வரலாறு தெரியுமா?, பட்டு சாலை தெரியுமா? அதனால் வந்த சிலுவை போர் தெரியுமா?, இந்த காஞ்சிபுரம் பட்டு நெசவாளர்கள் பிரச்சினை கூட படமாக வந்தது என்றால் அப்படியே நகர்ந்துகொள்வாள்

அழகான கட்டங்களை காட்டி எப்படி இருக்கிறது என்பாள், இதன் அழகிற்காக எத்தனை ஆயிரம் மலைகள் உடைக்கபட்டிருக்கும், எவ்வளவு செம்மண் அழகபட்டிருக்கும் அவை எல்ல்லாம் அழிந்து இது உருவாகி இருக்கிறது என்பேன், பேசாமல் திரும்பிகொள்வாள்

காரணம் நான் அப்படித்தான், அவளும் தண்ணீர் தெளித்துவிட்டாள்.

குஷ்பு படம் ஓடும்பொழுது சேனலை திருப்புவதை தவிர வேறு ஒரு குறையும் அவளிடம் காணமுடியாது.

எனக்கு நன்றாக தெரியும், அவளால் நான் சஞ்சரிக்கும் உலகில் வரமுடியாது, என்னால் அவளின் சராசரி வாழ்வோடு ஒட்ட முடியாது

ஆயினும் சாகச பயணம் தொடர்கின்றது

எனக்காக அவளின் தவ வாழ்வு தொடர்கிறது, அவள் புதுபடங்களை வைத்தால் நான் சிவாஜியில் மூழ்கிவிடுவேன், பொறுக்கமுடியாமல் சிலநேரம் அழுதே விடுவாள், நான் வியட்நாம் வீடு பார்த்து பத்மினிக்காக அழுதுகொண்டிருப்பேன்.

இப்படியாக தியாக வாழ்க்கை ஒன்றை அவள் வாழ்ந்துகொண்டிருக்கின்றாள், யாருக்காக? நிச்சயம் எனக்க்காக…..

நல்ல தாயும், நல்ல மனைவியும் ஆண்டவன் கொடுக்கும் வரம் என்பார்கள், நிரம்ப பெற்றிருக்கின்றேன்

ஒருவனுக்கு சொத்து, வீடு இன்னபிற வசதிகள் பெற்றோர் கொடுக்கலாம், ஆனால் நல்ல மனைவி தெய்வத்தால் மட்டுமே கொடுக்கபடுவாள் என்கிறது பைபிள்

அப்படி கொடுத்த தெய்வம் , அவளை ஆசீர்வதிக்கட்டும், அவள் பல்லாண்டு வாழட்டும்

காரணம் அவள் வாழ வாழத்தான் நானும் வாழமுடியும்.

அவ்வையார் அன்றே அழகாக சொன்னார்

“இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்”

அவளே சகலமும், அவளே எல்லாமும். பாகம்பிரியாள் என சொல்வதில் மிகை ஏதுமில்லை

அந்த தியாகியினை வல்ல இறைவன் ஆசீர்வதிக்கட்டும், அவளின்றி அமையாது வாழ்வு

[ October 22, 2018 ]

============================================================================

காலா வெற்றிவிழா ஏன் நடத்தவில்லை என யாராவது கேட்டுவிடுவார்களோ என்று பயமாக இருந்தது நல்ல வேளையாக கேட்கவில்லை

கட்சி எல்லாம் இப்போ ஏன் தொடங்கணும்? , “நான் விரும்பும் தமிழகம்”னு ஏற்கனவே உயில் எழுதி வச்சிட்டேன், காலம் வரும்போது வக்கீல் வாசிப்பார்.

அப்பொழுது ரசிகர்கள் கட்சி தொடங்கி நடத்தினா போதாதா?

“உண்மையான ரசிகனா இருந்தா என் கனவினை நிறைவேற்றுன்னு…” உயில்ல்ல‌ நாலுவரி இருக்கு அது போதும். [ October 22, 2018 ]

============================================================================

ராவணன் ராமர் பக்கம் யாரையும் கொல்லவில்லை அவன் நல்லவன். ராமனே ராவணின் தம்பியரை கொன்றார், ராவணன் குடும்பத்தை கொன்றான் என ஒரு கோஷ்டி கிளம்பி இருக்கின்றது

ராமன் எனும் நல்லவனை நம்பிய யாரும் சாகவில்லை, ஆனால் ராவணன் பக்கம் தவறே இருந்தும் அவனுடன் வீம்புக்கு நின்றவர்களே கொல்லபட்டனர்

நியாயம் இருந்த இடத்தில் தெய்வம் இருக்கும், அது ராவணால் கொல்லபடாதவகையில் ராமனையும் அவனுடன் இருந்தவர்களையும் காத்தது

மகாபாரதத்திலும் இதுவேதான் நடந்தது

ராமன் முதலில் தூதுவிட்டான், சீதையினை ஒப்படைக்க சொன்னான், ஆனால் போரை துவக்கியது ராவணன்

அத்தனை அழிவினையும் தேடியது ராவணனே அன்றி வேறுயாரும் அல்ல‌

அயோக்கியனுடன் சென்ற யாரும் நிலைக்கவில்லை, ராமனை நம்பியதால் குரங்குக்கு கூட இங்கு கோயில் வந்தது

ராமாயண தத்துவம் அதுதான். [ October 22, 2018 ]

===========================================================================

துருக்கி சவுதி ஊடகவியலாளர் ஜமால் கொல்லபட்ட சர்ச்சை இன்னும் தீரவில்லை, இப்போது டிரம்பும் சீற்றத்தை குறைத்து ஒரு மாதிரி மழுப்பி கொண்டிருக்கும் பொழுது அடுத்த அதிர்ச்சி நடந்திருக்கின்றது

இம்முறை இஸ்தான்புல்லில் ஈரானிய டிவி நிறுவணர் கரிமீயன் என்பவர் கொல்லபட்டிருக்கின்றார்

அன்னார் டிவி என்ன செய்யும் என்றால் அது பாரசீக மொழி டிவி, மேல்நாட்டு டிவி காட்சிகளை பாரசீக மொழியில் மொழிபெயர்த்து அரபு பக்கம் டிவி நடத்திகொண்டிருந்தது

பொதுவாக மேல்நாட்டு கலாச்சாரத்தை விரும்பாத ஈரான் இதை சந்தேக கண்ணோடு பார்த்தது, சும்மாவே ரேடியோ முதல் டிவி வரை தன் நாட்டு மக்களிடம் அமெரிக்கா ஏதும் சொல்லி புரட்சி ஏற்படுத்துமோ என அஞ்சும் நாடு ஈரான்

இதனால் இந்த டிவியினை கைக்கூலி டிவியாக கண்டித்து இவருக்கு 6 வருட சிறை எல்லாம் விதித்தது

அவரோ துருக்கு இஸ்தான்புல்லில் இருந்து அமெரிக்கா செல்லும் முடிவில் இருந்தார்

இந்நிலையில் அவர் சுட்டுகொல்லபட்டிருக்கின்றார்

யார் சுட்டு கொன்றார்கள் என்பத்துதான் மில்லியன் டாலர் கேள்வி

ஈரான் இன்னும் வாய்திறக்கவில்லை, அதே நேரம் துருக்கிக்கும் ஈரானுக்குமான நல்லுறவை கெடுக்க நினைத்த சக்திகள் செய்த சதி எனும் கோணத்தையும் மறுக்க முடியாது

எப்படியோ ஜமாலை தொடர்ந்து கரீமியன் கொல்லபட்டதில் துருக்கி ஏகபட்ட அப்செட்டில் இருக்கின்றது

உளவுதுறை விளையாட்டுக்கள் எப்படி இருக்கும் என்றால் இப்படித்தான், துருக்கிக்கு தலைவலி கொடுத்தாயிற்று.

தமிழகம் இந்த அளவிற்கு எல்லாம் இல்லை, நிர்மலா விவகாரம் வந்தால் சின்மயி விவகாரம் வரும் , கொஞ்ச நாளில் யாவரும் நலம்

[ October 22, 2018 ]

=========================================================================

“சிந்து சிந்து” என பொதுவாக பாஜக கோஷ்டிதான் அலையும், சிந்து நதி இந்தியாவில் பாய வேண்டும், அகண்ட பாரதம் வேண்டும் என அந்த கோஷ்டிதான் சொல்லி கொண்டே இருக்கும்

இப்பொழுது தமிழகமும் “சிந்து சிந்து” என ஆரம்பித்துவிட்டது போல் தெரிகின்றது

அவர் அடிக்கடி பாடுவார் என்பது தெரியும், ஆனால் “நானொரு சிந்து காவடி சிந்து” என பாடியிருக்கின்றார் என்கின்றது செய்திகள்

என்னென்னவோ செய்திகள் கசிகின்றன‌

ஆனால் ஆதியும் புரியவில்லை , அந்தமும் தெரியவில்லை

புரியுது ஆனால் புரியவில்லை [ October 22, 2018 ]

============================================================================

இன்னும் அவரிடம் யாரும் இந்த “நாக் அவுட் ” பற்றி நேரடியாக கேட்கவில்லை, விஷயம் பெரிதாகவில்லை அல்லது பெரிதாக பலர் விரும்பவில்லை

நிச்சயம் அதிகம் பேசும் அவரிடம் கேட்கத்தான் வேண்டும் ஆனால் கேட்கமாட்டார்கள்

காரணம் , இவரிடம் அவர்கள் சீண்டினால் அவரோ 1968 சம்பவத்தை திருப்பி கேட்டுவிடுவார்

துருப்பு சீட்டு அவரிடமும் உண்டு என்பதால் எதிர்கோஷ்டி அமைதி

இவ்விவகாரத்தில் ரஜினி வாய்திறக்கமாட்டார் அவருக்கு யாருக்கும் பதில் சொல்லி பழக்கமில்லை

கமலோ வாய்திறக்கவே முடியாது

யாரும் ஏதும் சீண்டினால் திருப்பி அடிக்க அவர் களத்தில் கிளவுசும் கையுமாக இறுதி சுற்று மாதவன் போல நிற்பதால் கனத்த அமைதி..

[ October 22, 2018 ]

============================================================================