சிதறல்கள்

நாகர்கோவிலை மாநகராட்சியாக்கும் பணிகள் தீவிரம் : செய்தி

சும்மாவே 2 தென்னை மரத்தை வைத்து கொண்டு பல கோடி மதிப்புள்ள தோப்பு என கதை விடும் ஏரியா அது, இனி மாநகராட்சி வேறு

கிட்டதட்ட நியூயார்க் அளவுக்கு அங்கு இனி நில மதிப்பு விலையினை சொல்வார்கள், நாடு தாங்காது. [ October 23, 2018 ]

============================================================================

சபரிமலை கோவில் தமிழனுக்கானது உறவே, நாம் தமிழர் ஆட்சியில் அதை மீட்போம்ன்னு இந்த தை மாசம் கத்தலாம்னு இருந்தேன்

அதுக்கும் வச்சிட்டானுக ஆப்பு…

[ October 23, 2018 ]
Image may contain: 1 person, sitting
============================================================================

சின்மயிக்கு ஆதரவாக மாதர் சங்கம் பொங்கி எழுகின்றது

ஏம்மா மாதரசிகளா, அந்த சிந்து எனும் பெண்ணுக்கு ஆதரவாக எல்லாம் பொங்க மாட்டீர்களா?

அந்த சிந்து என்பவர் என்ன வெளிநாட்டு பெண்ணா?

அமைச்சருக்கு எதிராக கொஞ்சம் பேசினால்தான் என்ன? [ October 23, 2018 ]

============================================================================

ஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல – வழக்கு தொடருவேன்: அமைச்சர் ஜெயக்குமார்

ஆடியோவினை விடுங்கள் அமைச்சரே, டி.என்.ஏ டெஸ்டுக்கு அழைத்தால் என்ன செய்வீர்கள்? [ October 23, 2018 ]

============================================================================

இன்னொரு நபர் என்றால் இந்த பத்திரிகைகள் காட்டும் புலனாய்வு, கவர் ஸ்டோரி இன்னபிற அட்டகாசங்கள் என்ன?

தேடிபிடித்து அமர வைத்து இந்த டிவிக்கள் செய்யும் அழிச்சாட்டியம் என்ன?

ஒருவேளை அவன் திமுகவாக இருந்துவிட்டால் பலர் செய்யும் அலப்பறைகள் என்ன?

ஆனால் ஒரு அமைச்சர் சிக்கி இருக்கின்றார், எல்லோரும் அனந்த புத்தர் கோலத்தில் கனத்த அமைதி

பத்திரிகை, டிவி எல்லாம் ஆழ்ந்த யோக நிலையில் குண்டனி சக்தி பெற தவமிருக்கின்றன‌

ஒரு சத்தம், ஒரு செய்தி இல்லை

அட பாதிக்கபட்ட பெண் யாரென கூட இந்த புலிகள் காட்ட அஞ்சி நிற்கின்றன‌

இனி எவனாவது பத்திரிகை சுதந்திரம் , பெண் பாதுகாப்பு, பெண் உரிமை, பெரியார் கொடுத்த பெண் சுதந்திரம், எழுத்துரிமை, கருத்துரிமை, ஊடக தர்மம் அது இது என கிளம்பட்டும் , அன்று இருக்கின்றது.. [ October 23, 2018 ]

============================================================================

இலங்கையில் தமிழ்பெண்கள் கற்பழிக்கபட்டார்கள் ஏ இந்திய அரசே தடுத்தாயா? திமுக தடுத்ததா? காங்கிரஸ் தடுத்ததா என கிளம்பிய ஒரு பயலையும் ஜெயக்குமாரால் பாதிக்கபட்ட தமிழக பெண் விவகாரத்தில் காணவே இல்லை

ஏம்ம ஈழ அல்ட்ராசிட்டிஸ், கடல் தாண்டிய கற்பழிப்பு என்றால் கொதிப்பீர்களா? காலடியில் தமிழச்சிக்கு அவமானம் என்றால் பொத்திகொண்டிருப்பீர்களா?

ஒரு பயலையும் காணோம். [ October 23, 2018 ]

============================================================================

எப்ப்பா.. என்னதெல்லாம் செய்றாங்கடா இந்த மன்னார்குடி கோஷ்டி

ஆத்தா ஏன் அனாதையா மர்மமா செத்துச்சுண்ணு இப்பதான் புரியுது…

நமக்கே இந்தபாடுன்னா நம்ம ஆத்தா எவ்வளவு பட்டிருக்கும்?

[ October 23, 2018 ]
Image may contain: 1 person, eyeglasses and closeup
==========================================================================

“அந்த ஆளு சிக்கினது கூட கவலை இல்ல பங்காளி, ஆனா நீங்க‌ பிடல் நான் சேகுவாரேன்னு சொல்லிட்டு சிக்கிட்டாரு பாத்தீங்க‌ளா, அதுதான் வலிக்குது

இனி உலகம் உங்கள ஆட்டோ சங்கருன்னும் என்னை பிரேமான்ந்தான்னும் நினைச்சிராது, அதுதான் தாங்க முடியலை பங்காளி” [ October 23, 2018 ]

============================================================================

இப்போதைக்கு சமூக அக்கறையும், தமிழக நலனும், பெண்கள் பாதுகாப்பும் பற்றி கவலைபடும் ஒரே தொலைகாட்சி ஜெயா தொலைகாட்சி மட்டுமே

விரைவில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அதன் தைரியம் பேசபடலாம், மிக சிறந்த மக்கள் நேய தொலைகாட்சி என அதற்கு விருதுகளும் தரபடலாம்

[ October 23, 2018 ]

============================================================================

பெண்களை பாலுணர்வுடன் பார்த்தால் அவர்கள் உள்ளுணர்வு இரும்பாக மாறும் – தமிழிசை சவுந்தரராஜன்

அக்கோவ், எதற்கெடுத்தாலும் திமுக ஸ்டாலின் என கத்தும் நீங்கள், அட வைரமுத்து விஷயத்தில் கூட ஸ்டாலினை இழுத்த நீங்கள் ஜெயக்குமார் விஷயத்தில் மட்டும் பூசி மெழுகுவது ஏன்?

சொல்லுங்கள் அக்கா சொல்லுங்கள், ஒரு பெண்ணாக இருந்தும் கண்டிக்க தயக்கம் ஏன்? தடுமாற்றம் ஏன் அக்கா?

அவரை ஏதும் சொன்னால் தாமரை மலராது என அச்சமா?

[ October 23, 2018 ]

============================================================================

மொகலாயர் சம்பந்தபட்ட அனைத்து பெயர்களையும் மாற்ற வேண்டும் : பாஜக எம்பி

பிரியாணி எனும் அற்புத சொல்லையும் கூட்டாஞ்ச்சோறு என மாற்றி தொலைத்துவிடாதீர்கள்…. [ October 23, 2018 ]

============================================================================

எச்.ராசா மன்னிப்பு கோரினார். சாவர்க்கர், ஹோவேல்கர் எல்லாம் பிரிட்டானியர் விசுவாசிகளாக இருந்தார்கள் என பலர் சொல்லிகொண்டே இருக்கின்றனர்

சொல்பவர்கள் யாரென பார்த்தால் திராவிட சிகாமணிகள்

சுதந்திர நாள் துக்க நாள் என்றும், வெள்ளையன் சென்றுவிட்டால் நாம் வாழமுடியாது என்றெல்லாம் சொன்ன அந்த 
பெரியாரின் சீடர்கள்

பெரியாரும் வெள்ளையனுக்கு பகிரங்கமான ஆதரவாளராகத்தான் இருந்தார், அதை பற்றி எல்லாம் யாரும் சொல்லமாட்டார்கள்

[ October 23, 2018 ]