சிதறல்கள்
வைகுண்டராஜன் அண்ணாச்சி, உங்களுக்கே இது அடுக்குமா?சிரிப்பு வரவில்லையா?
திருச்செந்தூர் முருகன் மேல் சத்தியமாக சொல்லுங்கள்??

என்னை கையினை பிடிச்சி இழுத்தியா என்ற சீரியலில் இதுவரை பெண்கள்தான் புகார் அளித்தார்கள்
முதன் முதலில் ஒரு ஆண் ஒரு ஆண் மேல் சொல்லும் புகார் கிளம்புகின்றது, அதுவும் ஆன்மீக பேச்சாளர் சுகி சிவம் மேல் திரும்புகின்றது.
தமிழகத்திற்கு இது புதிதான குற்றசாட்டு.
அவரும் பதில் சொன்னதாக தெரியவில்லை, பிரச்சினையினை கிளறுபவர் பிரபல பத்திரிகையாளர்
இது எளிதில் கடந்து செல்லும் விஷயம் அல்ல, பற்றி எரிய போகும் விஷயம்
சுகி.சிவம் ஏன் இப்படி சிக்குகின்றார், மனிதர் சிவபெருமான் மோகினி வடிவில் வந்த விஷ்ணுவிடம் மயங்கியது போல மயங்கிவிட்டாரோ என்னமோ?
ஓவர் பக்தி போலிருக்கின்றது
எப்படியும் சுகி.சிவம் கோர்ட்டுக்கு செல்வார், விரைவில் இந்த மிடூ இம்சைகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கபடும் போல் தெரிகின்றது
[ October 23, 2018 ]

அமைச்சர் ஜெயக்குமாரின் டீரீம் கேர்ள், அதாவது கனவில் அவர் கழுத்தை பிடித்து ஆட்டும் பெண்ணுக்கு வட சென்னையாம்
ஆக இந்த வாரம் இரு “வட சென்னை” படங்கள் ரிலீஸ்….
[ October 23, 2018 ]
============================================================================
பண்டிகை என்றால் பட்டாசுகள் தான் நினைவுக்கு வரும், அது எப்படியோ இந்த கலாச்சாரத்தில் கலந்துவிட்டது
இனி அது இல்லா பண்டிகைகளை நினைத்துபார்க்க முடியாது
பட்டாசு புகை மாசு என்பதெல்லாம் போலி வாதங்கள். நிலக்கரி ரயில், நிலக்கரி எரிக்கபடும் அணல் மின் நிலையங்கள், புகைவிடும் வாகனம், தொழிற்சாலை புகை என அனுதினமும் 24 மணிநேரமும் புகை வாழும் நாடு இது
அரசு பேருந்துகள் விடும் புகை கணக்கென்ன? யாராவது கேட்பார்களா?
இதில் வருடத்தில் ஒருநாள் மக்கள் குதூகலமாக கொண்டாடும் நாளில் பட்டாசு வெடிக்க கூடாது என்பதெல்லாம் அவர்கள் மகிழ்ச்சியினை கெடுப்பதற்காகவே சொல்லபடுபவை
எல்லா வகை காசு மாசையும் தடுத்தபின்புதான் பட்டாசு பக்கம் வரவேண்டுமே தவிர, ஒரே காரணம் பட்டாசு அல்ல.
மக்களின் நியாயமான சந்தோஷங்களை கெடுப்பது சரி அல்ல, ஏற்றுகொள்ள கூடியதும் அல்ல
குறிப்பாக குழந்தைகள் அந்த பட்டாசுகளை மிக ரசிப்பவர்கள். தீபாவளியினை அவர்கள் எதிர்பார்ப்பதே அந்த குதூகலத்திற்குத்தான், அதற்காகத்தான்
அந்த மனதை நோகடித்துவிட்டு, அவர்களை ஏமாற்றிவிட்டு யாருக்காக இச்சமூகம் தீபாவளி கொண்டாட போகின்றது
வரவர இத்தேசத்தில் ஒரு பண்டிகை கூட நிம்மதியாக மக்கள் கொண்டாட கூடாது என சிலர் நினைப்பார்கள் போல
எல்லா பண்டிகைக்கும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி கிளம்பிவிடும் கூட்டம் அதிகரிக்கின்றது
இப்படிபட்டவர்களை அனுமதிப்பது சரியல்ல
தீபாவளி அதனின் உற்சாகத்தோடு கொண்டாடபட பட்டாசுகள் அவசியம் தேவை. ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் இந்நாடு ஒன்றும் அழிந்துவிடாது.
குழந்தைகளின் மகிழ்விற்காக அந்த பட்டாசு அனுமதிக்கபட்டே தீரவேண்டும்.
குழந்தைகளை கூட மகிழ்ச்சியாய் இருக்க விடாத சமூகம் எப்படி உருப்படும்?
மத்தாப்பும், சக்கரமும் இன்ன பிற விஷயங்களும் குழந்தைகள் விளையாட்டு உரிமை. ஆண்டுக்கு ஒருமுறை விளையாடுகின்றன
அவற்றை தடுப்பதில் யாருக்கு உரிமை இருக்கின்றது?
இன்னொரு கும்பல் ஒலிமாசு என கிளம்புகின்றது, தமிழக அரசியல்வாதிகளின் கூச்சலை விட என்ன ஒலிமாசு வந்துவிட்டது? முதலில் அதை தடுங்கள் பார்க்கலாம்..
(தேர்தல் வெற்றி, பிரச்சாரம், தலைவர்கள் வருகை , பட ரிலீஸ் போன்றவற்றில் போடபடும் பட்டாசுகளை தடை செய்வது பற்றி எவனும் பேசுவதாக தெரியவில்லை)
8 10 மணிவரைதான் பட்டாசு வெடிக்கலாம் என்பதெல்லாம் யாரும் மதிக்கபோவதாக தெரியவில்லை, அப்படி சட்டமீறல் என கிளம்பினால் 100 கோடிபேரை தண்டிக்க வேண்டி இருக்கும், சாத்தியமே இல்லை
எச்.ராசா இப்பொழுதுதான் கோர்ட்டாவது மயிராவது என சொல்லியிருக்க வேண்டும், ஆதரவு பெருகியிருக்கும்
ஆனால் மனிதர் முந்திகொண்டார்
அதற்கென்ன தீபாவளியென்று நாள் முழுக்க வெடி வெடிக்கும் ஒவ்வொருவரும் எச்.ராசா சொன்னதைத்தான் சொல்ல போகின்றார்கள்
மக்கள் நீதிபதி வீட்டுமுன்னாலே வெடிக்கத்தான் போகின்றார்கள் அவரும் பார்த்து சிரித்துவிட்டு போகத்தான் போகின்றார்
[ October 23, 2018 ]
=========================================================================
பதவி, பணத்தை விரும்பினால் விலகி விடுங்கள்: ரசிகர்களுக்கு ரஜினி அறிவுறுத்தல்
இதற்கு கட்சி தொடங்கவே மாட்டேன் என நேரடியாகவே அறிவித்துவிடலாம் அய்யா
பிழைக்கவிடவில்லை என்பதற்காக காமராஜரையே விரட்டிய கட்சிக்காரர்கள் வாழ்ந்த தமிழகம் இது, அள்ளி எடுக்கலாம் என்பதற்காக பழனிச்சாமி கொலுவீற்றிருக்கும் பூமி இது
இங்கு போய் இப்படி பேசினால் எடுபடுமா?
அரசியலில் விருப்பமில்லை என்றால் நேரடியாக சொல்லுங்கள் அய்யா..
(ஆனால் கனத்த தொகையில் டிக்கெட் வாங்கும் ரசிகன், சொந்த செலவில் பேனர் கட்டி பால் ஊற்றும் ரசிகன் பற்றி எல்லாம் ரஜினி பேசமாட்டார்
எங்கே, அதிக டிக்கெட் கொடுத்து என் படம் பார்க்காதீர்கள், போஸ்டர் அடிக்காதீர்கள், வீண் செலவு செய்யாதீர்கள் என சொல்லட்டும் பார்க்கலாம்..
என் படத்தினை அதிக பணம் செலவழித்து பார்க்காதீர்கள் என சொல்வாரா என்றால் ஹாஹாஹாஹா) [ October 24, 2018 ]
============================================================================
சிவகங்கை மாவட்டத்தில் தடை உத்தரவாம்
எதற்கு?
மருதிருவர் குருபூஜை, தேவர் குருபூஜை உட்பட பல விழாக்கள் கொண்டாடபடுவதால் அசம்பாவித நடவடிக்கைகள் தடுக்க தடையாம்
மருது பாண்டியர் நாட்டின் சுதந்திரத்திற்காய் உயிர்விட்டவர்கள், பசும்பொன் தேவர் நேதாஜியின் படைக்கு தமிழகத்திலிருந்து ஆள் அனுப்பி இறுதிவரை நேதாஜியின் தூணாக நின்றவர்.
அப்படிபட்ட தேசாபிமானிகளின் விழாக்கள் இவை.
மாபெரும் சுதந்திர வீரர்களின் நினைவு அஞ்சலிகளை கூட தடை போட்டு அனுசரிக்கும் அளவிற்கு ஜாதிவெறி மிக்க சமூகத்தை இந்த சுதந்திர இந்தியா உருவாக்கிவிட்டதை எண்ணி நாண வேண்டியிருக்கின்றது.
அடிமை இந்தியாவில் அன்று நாட்டுபற்றை வளர்த்தார்கள், சுதந்திர இந்தியாவோ சாதி பற்றை வளர்க்கின்றது
நாட்டுபற்றை ஒரு பயலும் வளர்த்ததாக தெரியவில்லை, பாஜகவினர் மார்தட்டுவார்கள் அது சுத்த இந்துமத பற்று அன்றி நாட்டுபற்று அல்லவே அல்ல.
நாட்டுபற்று எனும் பொதுநலத்தை வளர்த்தால், இந்த சாதி , மதம் எனும் மிக குறுகிய மனப்பான்மை கொடுமை கொஞ்சம் கொஞ்சமாக ஒழியும்.
அடுத்த தலைமுறையாவது திருந்தட்டும், [ October 24, 2018 ]
==========================================================================