சிதறல்கள்

டைட்டானிக் கப்பலை யாரும் மறக்கமுடியாது, அந்த சோகத்தை காவியமாக்கி எல்லோர் மனதிலும் இடம்பெற செய்தார் அந்த ஜேம்ஸ் காமரூன்

இப்பொழுது டைட்டானிக் கப்பலை அச்சு அசலாக செய்து அது சென்ற பாதையிலே பயணிக்க வைத்து அமெரிக்காவிற்கு அனுப்ப போகின்றார்கள்

இப்பொழுது உள்ள கப்பல் போல் அல்லாமல், 100 வருடத்திற்கு முந்தைய பர்னிச்சர் முதல் அமைப்பு வரை எல்லாம் அச்சு அசலாக உண்டாம், இன்சின் மட்டும் வேறாம்

அதில் பயணிக்க கடும் போட்டி நிலவுகின்றது

ஆக அவர்கள் மூழ்கிவிட்ட கப்பலை மறுபிரதி எடுக்கின்றார்கள்

சங்கமும் சின்னதம்பி, வருஷம் 16 போன்ற படங்களை மறுவெளியீடு செய்யும் திட்டத்தில் இருக்கின்றது

இந்த புது டைட்டானிக் வசூலை விட அது அதிகமாக வசூலிக்கும் என அந்த கப்பல் கம்பெனிக்கு சங்கம் சவால் விடுகின்றது

[ October 25, 2018 ]

============================================================================

விவி மினரல்ஸ் அலுவலகங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை

தானுண்டு தன் தாதுமணல் உண்டு என்றிருந்த வைகுண்டராஜனை முதன் முதலில் சோதனை இட்டது கலைஞர் அரசு.

அன்றே ஒரு முடிவுக்கு வந்திருந்தார் அண்ணாச்சி , சோதனை என்றால் எப்படி இருக்கும் என அன்றே அறிந்துகொண்டார்.

இப்பொழுது சோதனையில் அரை கிலோ இலுமினைட், கார்னெட் போன்ற தாதுக்கள் கிடைத்தாலே பெரும் விஷயம்

தாதுக்களை விடுங்கள், பிய்ந்த செருப்பு கூட கிடைக்காது, அண்ணாச்சி செருப்பும் அணிவதில்லை..

(இப்பொழுது மனதிற்குள் நன்றி கலைஞரே நன்றி என சொல்லிகொண்டேதான் இருப்பார் அண்ணாச்சி..) [ October 25, 2018 ]

============================================================================

“அட போங்க தம்பி, மோடியினை வெண்தாடி வேந்தர்னு கூட நம்ம டிவில சொல்லியாச்சி

பழனிச்சாமி இரும்பு மனிதர்னு கூட ஒரு கதை நம்ம டிவில வந்தாச்சி, ஆனாலும் ரெய்டு நடக்குது?

இனி என்ன செய்ய சொல்லுதிய?

வருமானவரிதுறை பற்றி நல்லதா 4 விஷயம் நம்ம டிவில சொல்ல சொல்லிருக்கேன்,

தாது மணல் தொழில் நடக்கும்பொழுதெல்லாம் விட்டுபுட்டு இப்போ குவாரி மூடுன பிறவு ரெய்டுன்னா என்ன சொல்லுதிய?

சொல்லுங்க, என்ன சொல்லுவிய?

அதைத்தான் நானும் சொல்றேன் தம்பி, தொழில் நடக்கும் பொழுது விடுவாவளாம், நம்ம கம்பெனிக்கு டெல்லில விருது எல்லாம் தருவாவளாம்

ஆனா கம்பெனி மூடி கிடக்கும் போது ரெய்டாம் தம்பி

மூடி கிடக்குற குவாரில என்ன வருமானம்? அதுக்கு என்ன வரி தம்பி??.

எப்படி இருக்கு பாத்தியளா, வருமான வரிதுறை லட்சணம்?”

[ October 25, 2018 ]

Image may contain: 1 person, closeup
===========================================================================

என்னது அண்ணாச்சி ஆபிஸ்ல இருந்து போனா?

ரெய்டை கண்டித்து அறிக்கை விடனுமா?

நான் ஊர்ல இல்லணு சொல்லிட்டு போனை வச்சிரு, அவர் நம்ம கல்யாணத்துக்கு வந்திருக்கலாம், பல அன்பளிப்பு கொடுத்திருக்கலாம்

அதுக்காக இந்த ஆட்சியில போய்…. அடிபட்டு சாகவா? திருமுருகன் காந்தியிய பார்த்தல்ல, நானும் அப்படி ஆகணுமா?

முக ஸ்டாலின் எல்லாம் வந்து பார்த்தா நான் உயிரோட இருப்பேன்னு நினைக்கிறியா?

[ October 25, 2018 ]
Image may contain: 4 people, people smiling, people sitting
============================================================================

இந்த ஏ.ஆர் முருகதாஸ் திருட்டித்தான் கதை எடுக்கின்றார் எந்த சர்ச்சை தொடர்கின்றது

அது உண்மை என்றும் ஆகிவிட்டது

இப்பொழுது சர்க்கார் படத்திற்கும் வந்தாயிற்று, படம் ஏன் அவசர அவசரமாக திரைக்கு வருகின்றது என்ற மர்மத்தை விளக்குகின்றார் Anthanan Shanmugam

[October 25, 2018 ]
NEWTAMILCINEMA.IN
வழுக்கை தலையில் முடி நடுவதுதான் பேஷன் என்றால், வறண்ட தலைக்குள் இரவல் சிந்தனைகளை நட்டு வாழ்க்கை நடத்துவதும் கூ….
============================================================================

பத்திரிகையாளர் ஜமால் கொலையில் சவுதி இளவரசர் சல்மான் இருந்தாலும் இருக்கலாம் என பகிரங்கமாக சொல்லிகின்றார் டிரம்ப்

டிரம்ப் ஆதாரம் இல்லாமல் பேசமுடியாது என்பதால் உலகம் அரண்டு பார்க்கின்றது, நிச்சயம் சவுதி இளவரசர் பெயரை சொல்வது பெரும் அதிர்ச்சி

இதுபற்றி தான் பலமுறை சவுதியிடம் பேசினேன் என சொல்லிகொண்டிருந்த டிரம்ப் இப்பொழுது இப்படி அதிர்ச்சி கொடுக்கின்றார்

ஏதோ சவுதிக்கு எச்சரிக்கை கொடுக்கின்றது அமெரிக்கா, ஏதோ ஒரு முடிவுக்காக சவுதியினை கார்னர் செய்கின்றது அமெரிக்கா

இந்நிலையில் அமெரிக்க ஆதரவு ஜோர்டானிய உளவுதுறை தலைவர் சுட்டு கொல்லபட்டிருப்பது இன்னொரு சலசலப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது

விரைவில் அடுத்த புயல் கிளம்பலாம்

அல்லது தன் ஆதரவாளர் சுட்டு கொல்லபட்ட விஷயத்தினை தொடர்ந்து டிரம்ப் கடுப்பாகியிருக்கலாம்

அதிர்ச்சியான மோதல்கள் அரேபியாவில் தொடங்கிவிட்டன‌

[October 25, 2018 ]

============================================================================

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று காலை தீர்ப்பு

எல்லா தரப்புமே எதிர்பார்க்கும் தீர்ப்பு இது

இதனால்தான் தினகரன் அந்த 18 பேரையும் குற்றாலத்தில் அடைத்து வைத்து குறவஞ்சி பாடிகொண்டிருக்கின்றார்

தீர்ப்பு எதுவானாலும் அவர்களுக்கு பின்புதான் தெரியவரும் அல்லது தெரிய வரவே வராது

அவர்கள் நிலமை அவ்வளவு பரிதாபம் [October 25, 2018 ]

============================================================================