சிதறல்கள்

இஸ்ரேலில் அயன்லேடி கோல்டா மேயர் இருந்தார் அவருக்கு பின் அவரின் ஆற்றலில் பெண்கள் யாரும் இஸ்ரேலில் இல்லை

இங்கிலாந்தில் தாட்சர் இருந்தார் அவருக்குபின் அதிரடி தலைவிகள் அங்கு யாருமில்லை

இந்தியாவில் இந்திரா இருந்தார், அவரின் இடம் இன்றும் வெற்றிடம் அதை நிரப்புவார் யாருமிலர் என உலகம் சொல்லிகொண்டிருந்த உலகம் இப்பொழுது இந்திராவின் இடத்தினை ஒரு பெண் நிரப்ப கூடும் என சொல்கின்றது.

ஆம் இந்திராவிற்கு பெண் இரும்புபெண் ஒருவர் வரமுடியுமென்றால் அது தலைவி குஷ்பு என்கின்றது வெளிநாட்டு செய்திகள்

இரண்டாம் இந்திரா தலைவி குஷ்பு இந்நாட்டை ஒருநாளில் நிச்சயம் வழிநடத்துவார் என சங்கம் உலகிற்கு சொல்லி கொள்கின்றது

ஏ காலிஸ்தான் கும்பலே, ஒரு இந்திராவினைத்தான் நீங்கள் ஒழிக்க முடிந்தது, இரண்டாம் இந்திராவினை உங்களால் நெருங்கவே முடியாது,.

[ October 31, 2018 ]

Image may contain: 1 person, smiling
============================================================================

ஹரப்பாவில் மொகஞ்சதாரோவில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்

குமரிகண்டத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்

மெசபடோமியா என்பது தமிழர் கலாச்சாரம்

மாயன்கள் தமிழர்கள்

ஆப்ரிக்கர்கள் தமிழர்கள்

இப்பொழுது எகிப்தில் வாழ்ந்தவர்களும் தமிழர்களாம், ஆதாரம் காட்டுகின்றார்களாம், இது யாரென பார்த்தால் தும்பிகள் இம்சை

ஆக உலகம் எல்லாம் தமிழன் ஒருவனுக்கே என்பது இவர்களின் ஆய்வின் முடிவு

தமிழன் என்றைக்கு கோதுமை உண்டான்? சங்ககாலத்தில் எங்கே அது இருந்தது என கேட்டால் சொல்ல மாட்டார்கள்

நைல்நதி பக்கம் என்றைக்கு அரிசி விளைந்தது என கேட்டால் தெரியாது

இப்பக்கம் அரிசியும், கேழ்வரகும், கேப்பையும், பனங்கள்ளும் தமிழர் உணவு என கூப்பாடு போடுவது

அங்கே கோதுமையும, திராட்சையும் விளையுமிடம் தமிழரின் ஆதிபூமி என உளறுவது

இன்னும் தும்பிகள் தமிழர் பூமி என சொல்லாத இடம் சீனாவின் மஞ்சளாற்று கரை மற்றும் செவ்வாய் கிரகம்

விரைவில் சொல்வார்கள் [ October 31, 2018 ]

Image may contain: text
============================================================================

கலைஞர் கண்ணதாசனின் “மாங்கனி” காவியத்தை தன் நாடகத்தில் பயன்படுத்தினார் என்பது நாம் சொன்னதல்ல‌

கண்ணதாசனே தன் வனவாசத்தில் சொன்னது

உடனே உபிக்கள் வந்து குதிக்கின்றன, “வனவாசம்” என்பது பொய்யாம்

ஆனால் “நெஞ்சுக்கு நீதி” என கலைஞர் எழுதியது மட்டும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாம்.

1987க்கு பிந்தைய இளையராஜாவின் இசைகளில் ரகுமானுக்கும் பங்கிருந்தது

சொன்னால் அவன் புல்லாங்குழல் வாசித்தான், இவன் நாதஸ்வரம் வாசித்தான் அதெல்லாம் என்ன வகை என சில கேள்விகள்?

புல்லாங்குழல் வாசித்தவனை எல்லாம் மணிரத்னம் அழைத்து வாய்ப்பு கொடுக்கவில்லை

பகல் நிலவு முதல் தளபதி வரை இளையராஜாவுடன் பணியாற்றிய மணிரத்தினத்திற்கு பல விஷயம் புரிந்துதான் அவர் ரகுமானை அழைத்து வந்தார்

இதை சொன்னால் இளையராஜாவின் ரசிகர்களுக்கு பொறுக்கவில்லை

[ October 31, 2018 ]

============================================================================

இந்தோனேஷிய லயன் ஏர் விமானம் விபத்துக்குள்ளாகி 190 பேர் இறந்த சோக நிகழ்வு உலகை உலுக்கியுள்ளது

அது புத்தம் புது போயிங் ரக விமானம் என்கின்றார்கள், விபத்தின் சில தரவுகளை வைத்து பார்க்கும்பொழுது தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே அது கடலில் விழுந்தது உறுதியாயிற்று

ஆனால் இவ்விஷயம் வெளிவருமா என்றால் சந்தேகம் காரணம் வியாபாரம்

உலக அளவில் பயணிகள் விமானத்தை செய்து குவிப்பது ஏர்பஸ், மற்றும் போயிங் நிறுவணங்கள் மட்டுமே. வேறு எந்த நிறுவணமும் செய்யவில்லை

ஜப்பான் முதல் வளைகுடா நாடுகள், அமெரிக்கா வரை இவர்களிடம் தான் வாங்கி எத்தியாட், கல்ப் ஏர், ஜப்பான் ஏர், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என பெயின்ட் அடிக்க வேண்டும்

இதில் சீனா சமீபத்தில் ஒரு பயணிகள் விமானம் செய்ததாக சொன்னது, உலகம் அதிசயமாக பார்த்தது அதன் பின் அந்த விமானம் பற்றிய செய்தியே இல்லை

இந்த போயிங் மற்றும் ஏர்பஸ் கம்பெனிகளின் ஏகபோகம் மற்றும் நம்மை விட்டால் யாருமில்லை என்ற அலட்சியத்திலே சில விபத்துக்கள் நடப்பதாக செய்திகள் சொல்கின்றன‌

இந்த இந்தோனேஷிய விமானமே பட்ஜெட் விமான நிறுவணத்திற்கு அதாவது குறைந்த எரிபொருள் போதுமான வகையாக செய்யபட்ட விமானம் என்கின்றார்கள்

சுருக்கமாக சொன்னால் படகு போன்ற கார் அதிகம் பெட்ரோல் எடுக்கும், சிறிய சோப்பு டப்பா கார் கொஞ்சமாக எடுக்கும் அல்லவா? அப்படி

இந்த வகை புதிய‌ விமானங்களை தயாரிப்பதில் நடந்த தொழில்நுட்ப கோளாறே விபத்திற்கு காரணம், அது 190 பேரை கொன்றும் விட்டது

இதுபற்றி பாஜக நண்பர் ஒருவரிடம் கேட்டால் இப்படி சொன்னார்

“அதான் ஜி, நம்மளும் போயிங், ஏர்பஸ் மாதிரி இந்தியாவிலும் பெரிய விமானம் எல்லாம் செய்யணும்ஜி, இங்க எப்படிஜி? மோடிஜி ரபேல் மாதிரி இங்க செய்யணும்னு அப்பானிஜியினை அழைத்தாலே விடமாட்டாங்கஜி

பின்ன எப்படிஜி நாம பெரிய விமானம் எல்லாம் செய்யமுடியும்ஜி, உருப்பட விடமாட்டாங்கஜி”

அவர் கவலை அவருக்கு

[ October 31, 2018 ]

Image may contain: airplane
============================================================================

பிராமணாள் திருவரங்க ஆலய வாசலில் வைத்தால் குங்குமம் என்பது உடனே களையபட வேண்டியது, அது மூடநம்பிக்கை

ஆனால் தேவர் சமுதாய மக்கள் வைத்தால் அக்குங்குமம் நெற்றியில் நிலைத்திருக்க வேண்டியது, ஏனென்றால் அது தமிழர் புறநானூற்றில் சொன்ன வெற்றி திலகம்

வாழ்க பகுத்தறிவு, வளர்க பெரியாரிசம்..

[ October 31, 2018 ]
Image may contain: 5 people, people standing
===========================================================================

ஆமாப்பா உங்கள் தளபதி செய்வதெல்லாம் சரிதான், இறந்தவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது தமிழர் மரபு

அப்படியே இந்த திருவையாறு தியாகராஜர் சமாதி, சில ஜீயர்களின் சமாதி எல்லாம் சென்று அஞ்சலி செலுத்தி தமிழர் மரபை காத்தால்தான் என்ன?

[ October 31, 2018 ]

============================================================================

“ஏன் தம்பி, பசும்பொன்ல மட்டும் விபூதி குங்குமத்தை அழிக்கலியாம் ஏன்?

அட நீங்க வேற, திருவரங்கம் பக்கம் அழிச்சா பிரச்சினை இல்ல பிராமண பயலுக கலிகாலம், அபச்சாரம்னு தலையில அடிச்சிட்டு போயிருவானுக, இங்க அப்படியா? அந்த இடத்திலே அரிவாள தூக்குவானுக..

பிழைக்க தெரிஞ்சபுள்ள தம்பி நீங்க..”

[ October 31, 2018 ]
Image may contain: 4 people, people smiling
============================================================================

“அவர் தேவர் சமாதிக்கு போறதுக்கு என்ன தகுதி இருக்கு?

உலகத்துக்கே தெரியுமுங்க, அங்க போற தகுதி எனக்குத்தான் இருக்குண்ணு திமுகவிலே ஒழுங்காக தேவர் வழியினை பின்பற்றுவது நான் ஒருவன் தான்

வேணும்னா அட்டாக் பாண்டிகிட்ட கேட்டு பாருங்க..”

[ October 31, 2018 ]
Image may contain: 3 people
============================================================================

கொத்தமங்கலம் சுப்பு என்பவர் ஆனந்தவிகடனில் தில்லான மோகனம்பாள் கதையினை எழுதினார்

பின்னாளில் அது சினிமா ஆயிற்று, அவர் பெயரும் அதில் வந்தது,

படம் சக்கை போடு போட்டது.

பின்னாளில் கங்கை அமரன் கோஷ்டி அந்த கதையினை நைசாக கரகாட்டகாரன் என படமாக்கியது

நிச்சயம் கரகாட்டகாரன் என்பது கங்கை அமரனின் சொந்த சரக்கு அல்ல, படம் முழுக்க முழுக்க தில்லானா மோகனம்பாள் காப்பி

இப்பொழுது கத்திபடத்து ஒரிஜினல் கதைக்கு சொந்தக்காரர் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருக்க போகின்றாராம்

கொத்தமங்கலம் சுப்புவின் வாரிசான Srinivasan Subbu என்பவர் உடனே கங்கை அமரன் வீட்டுமுன்னால் சென்றால் ஏதும் தேற்றிகொண்டு வரலாம்

சும்மா அல்ல, கரகட்டகாரன் 1 வருடம் ஓடி வசூலை குவித்தபடம்

[ October 31, 2018 ]

Image may contain: 1 person, text
Image may contain: 4 people, text