சிதறல்கள்

மத்திய அமைச்சர் அக்பர் மேல் பாலியல் குற்றசாட்டை ஒரு பத்திகையாளர் சொன்னார், அவர் பதவி விலக வேண்டும் என்றார்கள் அவரும் விலகினார்

ஆனால் உரிய தண்டனை கிடைத்ததா என்றால் இல்லை, எந்த பத்திரிகையாளரும் அதுபற்றி பேசவே இல்லை. அவர் இப்பொழுதும் எம்பி

ஆனால் எஸ்வீ சேகருக்கு என்றால் மொத்தமாக பொங்கி அடித்தார்கள், மனிதரை காணவே இல்லை

இத்தனைக்கும் அவர் இன்னொருவர் பதிவினைத்தான் காப்பி செய்திருந்தார்

ஆக சுயநல அரசியல் என்பது பத்திரிகை உலகத்திலும் படுபயங்கரமாக இருக்கின்றது

[ November 2, 2018 ]

============================================================================

16 வயதினிலே படத்திற்காக கேமரா முன் கோவணத்தோடு நின்றவர் கமலஹாசன், அதற்காக அவர் மகளும் அப்படி முயற்சித்து பார்ப்பது சரி அல்ல‌

அம்மணி தனியாக தன் செல்போன் கேமராவில் முயற்சித்திருகின்றது, எப்படியோ காட்சிகள் லீக் ஆகிவிட்டன‌

அம்மணி முன்பே சிவகுமாரோடு செல்பி எடுத்தால் இந்த விபரீதம் நடந்திருக்காது

(படம் எல்லாம் இங்கு கிடைக்காது அதற்கு Babu Rao JaiGanesh S Nadar என சில கோஷ்டிகள் இருக்கின்றன‌..) [ November 2, 2018 ]

============================================================================

பிராமண பெண் சுவாதி கொல்லபட்டால் விவகாரம் பற்றி எரிகின்றது, கொலையாளி சிறையில் இருந்தாலும் செத்து போகின்றான்

ஆனால் தாழ்த்தபட்ட சிறுமி ஆதிலட்சுமி கொடூரமாக கொல்லபட்டிருக்கின்றாள் ஒரு சத்தமுமில்லை

பிறந்தால் பிராமண பெண்ணாக பிறக்க வேண்டும், அப்படி பிறந்து வெட்டுபட்டு செத்தாலும் சென்னையில் சாக வேண்டும் என்பது தமிழக விதி

பெரும் ஊடகங்களை விடுங்கள், தாழ்த்தபட்டவர்களை தாங்கி பிடிக்க வந்ததாக சொல்லும் ஒரு அரசியல்வாதியினையும் காணோம்

அனிதா வீட்டுக்கு ஆளுக்கு முன் சென்றவர்களை எல்லாம் ராஜலட்சுமி விவகாரத்தில் காணவே இல்லை

ஏன் என்றால் அனிதாவினை கொண்டு பாஜவிடம் அரசியல் செய்யலாம் , ராஜலட்சுமியினை கொண்டு யாரிடம் அரசியல் செய்யமுடியும்?

[ November 2, 2018 ]

============================================================================

ஒரு கோஷ்டி கிளம்பி இருக்கின்றது , பறைதான் தமிழர் இசை என்றும், பறை ஒன்றே தமிழரின் அடையாளம் என்றும் இன்னும் பலவிதமான அழிச்சாட்டியங்களுடனும் கிளம்பிவிட்டது

அதற்கு பயிற்சி எல்லாம் உண்டாம்

உண்மையில் டண்டனக்கா என தொடங்கிவைத்தவர் டி.ஆர் என்பவர்தான் என்றாலும் இவர்களின் பறை அழிச்சாட்டியம் எல்லை மீறி, தமிழர் அடையாளம் பறை என்ற அளவு போகின்றது

உண்மையில் தமிழரின் அடையாள இசை எது?

தமிழரின் தனிபட்ட இசைகருவி யாழ், பண்டைய தமிழ் இலக்கியம் அதனைத்தான் சொல்கின்றது

அவற்றை எல்லாம் இசைக்க மாட்டார்கள், ஏனென்றால் யாழும் தெரியாது, அதனை இசைக்கவும் தெரியாது, வரலாறும் தெரியாது

சும்மா எதனையாவது போட்டு அடித்து இதுதான் தமிழர் இசை, நடனம் என சொல்லி ஏதாவது செய்ய வேண்டியது

முதலில் கருப்பு சட்டையே தமிழர் பண்பாடு கிடையாடு,

தமிழரின் தனிபெரும் இசைகருவி யாழ், முன்பொரு காலத்தில் தமிழன் அதில் திறமைபெற்றிருந்ததால் அந்த ஊர் யாழ்பாணம் என்றே அழைக்கபட்டது

உலகில் இசைகருவி பெயரால் அமைந்த மிகசில ஊர்களில் அதுவும் ஒன்று, யாழ்பாணம் என்பது தமிழரின் பெருமை மட்டுமல்ல, தமிழர் இசையில் வல்லவர்கள் அங்கு வசித்திருக்கின்றார்கள் என்ற பெருமை தாங்கி நிற்கும் ஊர்.

இந்த யாழில் பல வகை உண்டு, கீசக யாழ், மகர யாழ் என ஏராள வகை உண்டு

அவை எல்லாம் லண்டன் மியூசியத்தில் பத்திரமாக இருக்கின்றது, எந்த தமிழனும் அதை வாசித்ததாக தெரியவில்லை

புகழ்பெற்ற எந்த தமிழ் இசையமைப்பாளரும் அதனை பயன்படுத்தியதாகவும் தெரியவில்லை, அது கொஞ்சம் சிரமானது என்கின்றார்கள்

அந்த யாழில் சில வகைகள் இன்றும் வெள்ளையரால் வாசிக்கபடுகின்றன, சில சீன தேவதைகளும் வாசிக்கின்றன, அவை எல்லாம் யாழ் என்பதன் வேறு வடிவங்கள் (harp).

தமிழனின் யாழ் என்ற நரம்பிசை கருவியில் இருந்து பிறந்ததே வீணை, கிட்டார், வயலின் இன்னபிற‌

அக்காலத்தில் இங்குதான் வாசிகபட்டது பின் மேற்காசியாவில் பரவியது பின் ஐரோப்பாவிற்கு சென்றது, இன்று அதனை சிறிய வடிவமாக்கி வாசிக்கின்றார்கள்

தமிழக பண்டைய யாழ்களில் 1000 நரம்புகள் வரை எல்லாம் இருந்ததாக ஆய்வுகள் சொல்கின்றன.

அந்த யாழினை திறம்பட வாசிக்க இங்கு தமிழன் இல்லை, அப்படி ஒன்று இருந்ததையே மறந்துவிட்டுத்தான் தமிழன் இசை டண்டனக்கா என கிளம்புகின்றான்

முடிந்தால் வெள்ளையனின் பியாணோ, கிட்டார் முதல் எல்லாவற்றையும் தூர எறிந்துவிட்டு யாழ் வாசித்து காட்டுங்கள், தமிழனின் இசை கருவியினை மீட்டெடுத்த விஷயமாக இருக்கட்டும்

தமிழக இலக்கியங்களில் முரசரைந்த காட்சி உண்டே தவிர பறையடித்த காட்சிகள் மிக குறைவு.

ஆக பறை இசை மட்டும் தமிழர் இசை மற்றது எல்லாம் அடுத்தவன் இசை என்பதெல்லாம் அபத்தம்.

முடிந்தால் யாழினை படியுங்கள், அதுதான் தமிழரின் தனிபெரும் இசை கருவி

[ November 2, 2018 ]

No automatic alt text available.
Image may contain: shoes and outdoor
============================================================================

தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா.

விரட்டியாச்சா.

அடுத்தால என்ன கதை திருட்டு அமோகமா நடக்குமா? நடக்கட்டும் நடக்கட்டும்

ஆனால் சினிமாவில் ஊழலை ஒழிப்பேன், கிழிப்பேன்னு எவனாவது வசனம் பேசட்டும் அப்புறம் தெரியும்.. [ November 2, 2018 ]

============================================================================

பலர் மறைமுகமாக வந்து தாங்களும் குஷ்பு ரசிகர் என சொல்லிவிட்டு சங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றார்கள்

இதெல்லாம் சங்கத்தின் பலத்தை காட்டுவதாக அமையவில்லை

யாராக இருந்தாலும் Periya Samy என்பவர் முன்னியிலையில் தலைவி படத்திற்கு முன்புதான் சங்கத்தில் இணைய வேண்டும் என சங்கம் புதிய விதி வகுத்திருத்திருக்கின்றது [ November 2, 2018 ]

============================================================================

அது மருத்துவ கல்லூரியாக இருந்தால் பின்னாளில் அன்னாரின் வசூலுக்கு வசதியாக இருக்கும்

(அன்னார் அமைச்சராக இருந்த காலத்தில் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் செய்த ஊழல் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கின்றது)

 [ November 2, 2018 ]
Image may contain: 2 people
============================================================================

தீபாவளியினை எதிர்த்தால் பகுத்தறிவாம், காரணம் நரகாசுரன் தமிழனாம் மாவீரனாம்

இவர்கள் பகுத்தறிவாளர்களாம் புராணம் எல்லாம் பொய்யாம் ஆனால் நரகாசுரன் உண்மையாக இருந்தானாம் அவன் தமிழனாம்

ஏதாவது புரிகின்றதா? இதுதான் பகுத்தறிவு

இன்னொரு கோஷ்டி இருக்கின்றது, அது அங்கிள் சைமன் கோஷ்டி, முப்பாட்டன் முருகனாம்

ஆனால் சூரபத்மன் என்பவன் என்ன ரகம்? அவன் முப்பாட்டன் இல்லையா?

ஏற்கனவே முருகனை முப்பாட்டன் ஆக்கியாயிற்று, இதில் சூரமபத்மனும் முப்பாட்டன் என்றால் தமிழகத்தில் அடித்து கொன்றே விடுவார்களே? என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருக்கின்றது அந்த குழப்ப கோஷ்டி

இதனால் சூரசம்ஹாரத்திற்கு வீரவணக்கம் செலுத்த முடியாமல் கம்மென்று இருக்கின்றார்கள்.

இதில் கவனிக்கவேண்டியது ஒன்றுதான், அசுரர்கள் எல்லாம் நம்மவர்கள் என சொல்லிகொண்டிருந்தது பகுத்தறிவு கோஷ்டி, வீரமணி எல்லாம் அந்த வகை

அந்த கோஷ்டி என்ன செய்யும்? கடவுள் இல்லை என சொல்லும், ஆனால் பெரும் ஆலயம் பக்கம் விடுதி கட்டி சம்பாதிக்கும்

கடவுளே இல்லை என்றால் அசுரர்கள் எப்படி உங்கள் முப்பாட்டன் ஆனார்கள் என கேட்டால் பதில் வராது, அது பகுத்தறிவு.

இதில் புதிதாக வந்து முருகனும் முப்பாட்டன் என சொல்லி குழப்பியது அங்கிள் சைமன். அவர் யாருடைய ஸ்லீப்பிங் செல்லாக இருந்தால் இப்படி செய்திருப்பார் என்பதை நீங்களே யூகித்துகொள்ளுங்கள்.

ஆக பகுத்தறிவு கோஷ்டி, சைமனை வதம் செய்யும் கோபத்தில் இருக்கலாம்

அடித்து சாவுங்கள், இரண்டில் எது ஒழிந்தாலும் தமிழகத்திற்கு நல்லதே.

(பேசபோவது மதிமாறனாம், ஆதிக்க சாதி அச்சுமுறுக்கும் அதிரசமும் எப்படி இருக்கும், தாழ்தபட்ட சாதியின் அதிரசமும் பலகாரமும் எப்படி இருக்கும் என்பதை அட்டகாசமாக விளக்குவார் என எதிர்பார்க்கபடுகின்றது)

[ November 2, 2018 ]

Image may contain: 2 people