சிதறல்கள்

எதுநியூஸ்7 செயதியா?

அண்ணாச்சி மேல் அடுத்த ரைடு நடந்தால் , 100% மக்களும் மோடியினை வணங்கி கையினை பிடித்து பிரதமர் பதவிக்கு மறுபடியும் இழுப்பது போல் செய்தி வரும்

இந்த ரெய்டுகள் எல்லாம் என்ன சும்மாவா?

இதற்குத்தான் சும்மா இருக்க வேண்டும் என்பது, மா “அண்ணாச்சி யார் தெரிமாலா 10 எம்பி, 40 எம்.எல்.ஏ உருவாக்கி கையில வச்சி அரசாங்கத்த ஆட்டுறர்ல ..” என தூத்துகுடி பக்கம் சவுடால் விட்டால் என்னாகும்?

இப்படித்தான் ஆகும்

ஆனால் எவனோ விட்ட சவுடாலை நம்பி, அண்ணாச்சி நினைத்தால் 40 எம்.எல்.ஏ , 10 எம்பி உருவாக்குவார் என நம்பி அவரை ரெய்டு என மிரட்டி தன் வழிக்கு கொண்டுவரும் பாஜகவினை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கின்றது..

[ November 3, 2018 ]

============================================================================

பாஜகவினை ஒழிக்க மாநில கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரள வேண்டும் : முக ஸ்டாலின்

ஆனால் பழனிச்சாமி ஆட்சியினை ஒழிக்க தமிழக கட்சிகளை ஓரணியில் இவர் திரட்டவே மாட்டார் என்பது வேறு விஷயம்

[ November 3, 2018 ]

============================================================================

59 வினாடியில் ஒரு கோடி வரை கடன் பெறலாம் : மத்திய அரசு அறிவிப்பு

ஆக விமான டிக்கெட் எல்லாம் எடுத்து தப்பி ஓட தயாராக இருந்து கொண்டு வங்கி கடன் வாங்கியவுடன் வெளிநாட்டுக்கு ஓடிவிடலாம்

[ November 3, 2018 ]

============================================================================

என்னதான் சிங்கம் என்றாலும் சில யானைகள் ஒன்று கூடினால் அஞ்சத்தான் செய்யும், அப்படி பின் வாங்கி இருகின்றது அமெரிக்கா

ஈரானிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை கண்டுகொள்ளமாட்டோம் என அழுது கொண்டே கம்மிய குரலில் அது சொல்லிவிட்டது

நிச்சயம் இது இந்தியாவிற்கு நல்ல விஷயம், டாலருக்கு எதிராக பணம் சரிந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த சிக்கலும் வந்திருந்தால் பலத்த நெருக்கடி ஏற்பட்டிருக்கும்

காரணம் ஈரான் நமக்கு சலுகை விலையில் எண்ணெய் தரும் நாடு, அது நிறுத்தபட்டால் இந்தியாவிற்கு பாதகமே

சீனாவினை கட்டம் கட்டியே தீருவது என்ற முடிவிற்கு வந்துவிட்ட அமெரிக்கா, இந்தியாவினை பகைவனாக்கி அப்படியே ஆசிய மாபெரும் கூட்டணி என இந்தியாவும் சீனாவும் இணைந்துவிட கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றது

அப்படித்தான் முன்பு சீனாவிடம் எஸ் 400 சிஸ்டம் இருக்கும் நிலையில் இந்தியாவிடமும் இருந்துவிட்டு போகட்டும் என சமநிலைக்கு வழிவிட்டது

இப்பொழுது பல கணக்குகளை போட்டு இந்தியாவினை பகைக்க வேண்டாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டார் டிரம்ப் அல்லது இப்போது உள்ள சூழலில் இந்தியாவினை அமெரிக்கா முழுக்க பகைக்க முடியாது

இப்படி நல்ல விஷயங்கள் நடந்தால் சரி

[ November 3, 2018 ]

============================================================================

என்னதான் சமத்துவம் மனித உரிமை அது இது என கடவுள் போல பேசினாலும் வெள்ளையர் மனது என்பது சுயநல சாத்தானின் கூடம்

இனி அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டு குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை இல்லை என டிரம்ப் சொல்லி இருப்பது அதைத்தான் காட்டுகின்றது

இந்த விஷயத்தை பிரிட்டனோ, பிரான்ஸோ இல்லை வேறு நாடுகளோ சொன்னால் ஏற்கலாம் ஆனால் அமெரிக்கா சொல்வது சரி அல்ல‌

காரணம் அமெரிக்கா என்பது செவ்விந்தியர் பூமி, வெள்ளையர் கருப்பர் என எல்லோரும் அங்கு குடியேறியவர்களே, யாருக்கும் சொந்தமான பூமி அல்ல அது எல்லோருக்கும் சமமான பூமி

ஆனால் ஐரோப்பிய மேலாதிக்க மனப்பான்மை அதை வெள்ளையருக்கான தேசமாக மாற்றிவிட்டது, இப்பொழுது டிரம்ப் ஏன் அஞ்சுகின்றார்?

அஞ்சுவது டிரம்ப் மட்டுமல்ல வெள்ளை இனமே அஞ்சுகின்றது இதனால்தான் டிரம்பின் அறிவிப்பிற்கு எதிர்ப்பே இல்லை

ஆம், இப்படியே விட்டால் எதிர்காலத்தில் அந்நிய நாட்டினர் அதிகமாகிவிடுவர் வருங்காலத்தில் வெள்ளையர் எண்ணிக்கை குறைந்து அவர்கள் சிறுபான்மை ஆகிவிடுவர் எனும் தொலை நோக்கு கணக்கின் அரசியல் அறிவிப்பு இது

இப்படி செய்துவிட்டால் இனி வெளிநாட்டவர் அங்கு அதிக காலம் தங்கவும் முடியாது, ஆதிக்கம் செலுத்தவும் முடியாது

கன்டா நாடு இப்பொழுது மனிதவளத்திற்காக சில சலுகைகளை செய்கின்றது இதைத்தான் 100 வருடத்திற்கு முன் அமெரிக்காவும் செய்தது

பின்னொரு நாளில் கனடாவும் மாறலாம், இப்போழுதே ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் முணுமுணுக்கின்றன விரைவில் இக்கட்டுப்பாடுகள் அங்கும் வரலாம்

ஆனால் இவை எல்லாம் எந்த இனத்திற்கும் சொந்தமான நாடு அல்ல‌

உலக நாடுகள் எல்லாம் இப்படி தங்கள் நாட்டு வளம் தங்களுக்கு என்றும், தங்கள் நாட்டு குழந்தைகள் எதிர்காலத்திற்கு எதெல்லாம் பாதிப்பு என இப்பொழுதே கணக்கிட்டு விழிப்பாய் பல காரியங்களை செய்கின்றன‌

அருமை இந்தியாவிலோ வங்கதேசத்தவர் பல்லாயிரம் இருக்கின்றனர், இன்னும் பல நாட்டினர் இருந்து இந்த ஜன நெருக்கடி மிகுந்த நாட்டில் இந்தியருக்கான நலன்களை உறிஞ்சுகின்றனர் என நடவடிக்கை எடுக்க தொடங்கினால் பல சக்திகள் விடுவதே இல்லை

இங்கு நிலமை அப்படி [ November 3, 2018 ]

============================================================================

எம்பிபிஎஸ் இன்னும் பல மருத்துவ படிப்பு படித்த மருத்துவ சிகாமணிகள், வைத்திய கலாநிதிகள் எல்லாம் அரசிடம் பல ஆயிரம் லட்சம் எல்லாம் சம்பளமாக வாங்கி கொண்டு இப்பொழுது எப்படி போஸ் கொடுக்கின்றார்கள் தெரியுமா?

“நிலவேம்பு கசாயம் குடியுங்கள், பப்பாளி சாறு குடியுங்கள்..”

கிராமத்து திண்ணையில் அமர்ந்திருக்கும் கிழவி இதை சொல்லமாட்டாளா? இவர்களுக்கு எதற்கு எம்பிபிஎஸ் பட்டம்?

இதில் இவர்களுக்கு சம்பளம் போதாது என முணகல் வேறு

[ November 3, 2018 ]

============================================================================

வழக்கம் போல சொல்லி கொண்டே இருகின்றார்கள், பீகார் ஒரிசா, மபி உபியினை விட தமிழகம் வளரவில்லையா? ஒரே காரணம் பெரியார், திராவிடம் இன்னபிற‌

நாமும் சொல்வதை சொல்லி வைப்போம்

இந்த நாட்டை வெள்ளையன் எப்படி ஆண்டான் என்றால் சில இடங்களில் அவனின் நேரடி ஆட்சி இருந்தது. பிரசிடன்ஸி என அதற்கு பெயர் அதை நிர்வகிப்பவர் கவர்ணர். இவர் லண்டனில் இருந்து நேரடியாக நியமிக்கபடுவார்

இன்னும் சில இடங்களில் சுல்தான்கள்,நவாப்கள், அரசர்கள் இருந்தார்கள் அவர்கள்தான் ஆள்வார்கள் அங்கிருந்து வெள்ளையருக்கு வரி செல்லும்

சுருக்கமாக சொன்னால் வெள்ளையன் வரும்பொழுது எப்படி முகலாய சாம்ராஜ்யம் இருந்ததோ அந்த இடத்தில் வெள்ளையன் இருந்தான் இவர்கள் வரிகட்டினார்கள்

மொத்த இந்தியா இப்படித்தான் ஆளபட்டது, இதில் கவர்ணர் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களில் வெள்ளையர் விருப்படி ஆளலாம், நல திட்டம் பள்ளி கல்லூரி சாலை என அவன் விரும்பியதை செய்யலாம்

ஆனால் சுல்தான்கள் அல்லது அரசர்கள் ஆட்சிக்குட்பட பகுதிக்குள் அவனால் செல்ல முடியாது அதற்கு பல காரணங்கள் அங்கு சமஸ்தான மன்னன் முடிவே முடிவு

இதில் தமிழகம் மெட்ராஸ் பிரசிடென்ஸி என வெள்ளையனின் நேரடி நிர்வாகத்தில் வந்தது

(மும்பை கல்கத்தா எல்லாம் இப்படியே)

தன் நேரடி ஆட்சியில் இருந்த தமிழகத்தை அன்றே முன்னேற்றி அடித்தளமும் அமைத்தான் வெள்ளையன், சென்னையினை உருவாக்கினான், தமிழகமெங்கும் கல்வி உட்பட பல விஷயங்களுக்கு அவன் உதவி செய்தான்

இங்கு மிஷினிரிகள் கல்விபணி ஆற்ற அவனுக்கு தடை இல்லை, ஆனால் மன்னர்கள் ஆண்ட இடங்களில் அந்த கல்விக்கு அனுமதி இல்லை இன்னும் பல விஷயங்களுக்கு அனுமதி இல்லை

இதில்தான் பல வட மாநிலங்கள் இன்னும் பின் தங்கி கிடகின்றன அவை எல்லாம் அரசர்களால் ஆளபட்டவை

அதன் பின் என்னாயிற்று என்றால் அரச வம்சத்தினர் அல்லது மிராசுகள் எல்லாம் காங்கிரஸில் இருந்து வடக்கே அந்நாளைய அரசர்கள் செய்ததை செய்தனர், வளர்ச்சி இல்லை

இப்பொழுது சாமியார் கும்பல் கையில் அப்பகுதி சிக்கிவிட்டது நிலமை இன்னும் மோசம்

தமிழகம் அப்படி அல்ல வெள்ளையன், காமராஜர் என அதன் அஸ்திவாரம் பலமானது, கலைஞர் காலமும் நிச்சயம் போற்ற கூடியது

ஆனால் வடக்கே சாமியார் கும்பல் போல இப்பொழுது இங்கு சிலரிடம் தமிழகம் சிக்கிவிட்டது, அதிலிருந்து மீளுமா இல்லையா என்பது இனிதான் தெரியும்

[ November 3, 2018 ]

============================================================================

//நீங்கள் உளவுத்துறையில் இருந்தவர் என்கிற முறையில் இங்கு முகநூலில் உலவும் யாரை எல்லாம் அரசாங்க உளவுத்துறை என்று நினைக்கிறீர்கள். ஸ்டான்லி ராஜன் , அந்தோணி பெர்னாண்டோ , அண்டஸ் ராஜ் பெர்னாண்டோ,சீனி.மாணிக்கவாசகம், சிம்ம சுந்தரம், வைஷாலி நாயுடு ,புல்புல் இசபெல்லா போன்ற குழப்பம் விளைவிக்கும் நபர்கள் உளவுத்துறை ஆட்களா ? இவர்களை போன்ற உளவுத்துறையா என்ற சந்தேகத்துக்குரிய நபர்களை எப்படி அறிந்துகொள்வது ..//

இப்படி ஒரு கேள்வியினை ஒருவன் சவுக்கு
சங்கரிடம் (Shankar A) கேட்கின்றான்

அதாவது நாம் குழப்பம் விளைவிப்பவராம், உளவுதுறை ஆளாக இருக்க கூடுமாம்

ஈழவிவகாரங்களை பற்றி பேச அன்றாட செய்திகளை 1986ல் இருந்து படித்தாலே போதும், ஒரே விஷயம் தமிழக செய்திதாள்களை படிக்க கூடாது குறிப்பாக தினதந்தி

நாம் ஒன்றும் அறிவாளியோ இல்லை சிந்தனையாளனோ அல்ல, உலகை தொடர்ந்து கவனித்துவருவபவன் அன்றி வேறல்ல‌

சொல்கின்றார் பாருங்கள், நாம் குழப்பம் விளைவிக்கும் கோஷ்டியாம்

குழப்பம் விளைவிக்க பெரியாரிஸ்ட் முதல் சைமன் வரை ஏகபட்ட பேர் உள்ள நாட்டில், என்னை பார்த்து எப்படியடா சொன்னாய் பதரே

நிச்சயம் முகநூலில் உளவுதுறை உண்டு, ஆனால் எப்படிபட்ட வேடத்தில் இருப்பார்கள் தெரியுமா? காதை கொடு சொல்கின்றேன்

கலைஞர் வாழ்க என கொடிபிடிதது திமுக அனுதாபி போல காட்டி கொள்பவன், இல்லை டிடிவி வாழ்க என கொடிபிடிப்பவன், சாதி போர்வை பதிவுகளை போடுபவன் என ஒரு முத்திரை குத்தபட்டு அலைவான் அல்லவா?

அவன் உளவுதுறை

இன்னும் நான் இங்கே உண்டேன், இங்கே பாத்ரூம் போனேன் என சொல்வான் அல்லவா? அவன் உளவுதுறை

இன்னும் பல வேடங்களில் அலைவார்கள், அவர்களுக்கு சில நேரம் கட்சி, சாதி அது இது என அடையாளமிருக்கும் சில நேரம் அடையாளமே இருக்காது

அவனே உளவுதுறை புரிகின்றதா

நானே சங்கம் வளர்த்து தலைவி குஷ்புவிற்கு பட்டினபாக்கம் கடற்கரையில் 4000 கோடியில் சிலைவைக்க வேண்டும் என படாத பாடுபடுகின்றேன், நான் குழப்பம் விளைவிக்கின்றேனாம் ரேஸ்கல்…

என்னை விடு அந்த Bulbul Isabella புள்ளையினை உளவுதுறை என்றால் உன் அறிவு எப்படி இருக்கும்? . அவர் எல்லாம் ரதி வகை, ஆம் மன்மதன் இன்றி தனியே ஆடும் ரதி

அந்த இலங்கையின் மர்லின் மேன்றோவினையுமா உளவுதுறை என்பாய் அயொகிய பயலே, அவர் எல்லாம் வேறு லெவல். முடிந்தால் ரசி இல்லை என்றால் ஓடிவிடு

அட ரசனை கெட்டவனே, இது கூட தெரியாதவன் எல்லாம் கேள்வி கேட்க அதுவும் உளவுதுறை பற்றி பேச வந்துவிட்டான்

[ November 3, 2018 ]

========================================================================

அண்ணே நீங்க சரியில்லை, ஒரு போராட்ட வரலாற்றை மறைக்கின்றீர்கள்

என்னடா அது?

இந்த இரட்டை குவளை முறை தெரியுமா? அந்த வலி தெரியுமா? தெரியுமா? தெரியுமா?

அட என்னடா சொல்லு

டீக்கடையில ஆதிக்க சாதிக்கு ஒரு கப், தாழ்த்தபட்டோருக்கு ஒரு கப் தெரியுமா?

அப்படியா? ஆமாண்ணே இதெல்லாம் பிராமண சதி , பிராமண துவேஷம், பெரியாரும் நாங்களும்தான் அத போராடி நீக்கிவிட்ட்டோம்

எங்கே?

தமிழகம் முழுக்க, நிறைய கிராமத்துல கூட‌

ஏண்டா டேய் தமிழகம் முழுக்க பிரமாணன் கடை வச்சிருந்தான்? டீ ஆத்திட்டு இருக்க ஒரு பிராமணன காட்டுடா பார்க்கலாம்

அண்ணே உங்களுக்கு தீபாவளிக்கு லம்பா ஆர்.எஸ்.எஸ்காரன் போனஸ் குடுத்திருக்கான், நல்லா வாங்கிட்டீங்கண்ணு தெரியுது.

[ November 3, 2018 ]

============================================================================