சிதறல்கள்
நரகாசுரர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கை வைத்தவர்கள் தான் நரகாசுரர்கள் : அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சரே சிவன் தலையில் கை வைக்க சென்றது பஸ்மாசுரன், நரகாசுரன் அல்ல
இன்னொரு செய்தி, அது நரகாசுரனோ, பஸ்மாசுரனோ இல்லை துரியதனனோ அவர்கள் மட்டுமல்ல அவர்களை கொன்ற அவதாரங்களும் அழிந்துதான் போயின [ November 4, 2018 ]
============================================================================
இந்த விக்கி லீக்ஸ், டிரம்ப் லீக்ஸ் இன்னபிற லீக்ஸ்களை எல்லாம் தூக்கி விழுங்கிகொண்டிருக்கிறது Sex Island லீக்ஸ் எனும் செய்திகள்
உலகில் சில கிளுகிளுப்பான சமாச்சாரங்களுக்கு சில ஏரியாக்கள் உண்டு, தாய்லாந்து மக்காவ் என பல ஏரியாக்கள் பிரசித்தி
இதில் இந்த இடங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி அதிரடி காட்டி இருக்கின்றது கொலம்பிய அருகிலிலுள்ள மிக சிறிய தீவான Sex Island.
அங்கு சென்றவுடன் ஒரு ஆணுக்கு இரு பெண்கள் தருகின்றார்களாம், அது 15 பெண்கள் வரை நீட்டிக்கபடுமாம்
இந்த போதை போதாதென்று போதை மருந்துகளும் உண்டாம், கடலை போல டாஸ்மாக் அலையாக அடிக்க்குமாம்
இந்த பெண் சரியில்லை என்றால் நம்ம ஊர் ரெஸ்டாரண்டில் சர்வர் ஓடிவந்து இலையினை மாற்றி போடுவது போல மாற்றியும் கொடுக்கின்றார்களாம்
இப்படி பல செய்திகள் வந்து அசரடிக்கின்றன, இன்னும் பல பல செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன
இனி தாய்லாந்து எல்லாம் செல்வாக்கு இழந்துவிடும் கொலம்பியா தீவுதான் இனி பெஸ்ட்
ஆனாலும். உடனே செல்லும் தொலைவிலா உள்ளது? இந்தியாவில் பிறந்தால் இப்படி இன்னும் எவ்வளவு விஷயங்களை இழக்க போகின்றோமோ தெரியாது
“எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?” என வானத்தை பார்த்துவிட்டு கண்களை துடைக்க வேண்டியதுதான்
இங்கெல்லாம் ராமர் கோவில் அவரின் தத்துவம் போதனை என சொல்வார்களே தவிர, அவரின் தந்தை போல வாழவேண்டும் என ஒரு பயலும் சொல்லவும் மாட்டான், போதிக்கவும் மாட்டான்
ஆனால் அத்தீவில் தசரதனாய் வாழ்கின்றார்கள், அவர்கள்தான் உண்மையான காவி கோஷ்டிகள்
ராமரை விடுங்கள், தசரதனுக்குத்தான் இங்கு முதலில் கோவில் எழுப்ப வேண்டும். வாழ்வினை கொண்டாடியது அவனே
[ November 4, 2018 ]
============================================================================
ஜெயாடிவியின் பங்குதாரர் வைகுண்டராஜன், அதனால் அவரை கலைஞர் பழிவாங்க துடிக்கின்றார் என ஒரு காலத்தில் பகிரங்கமாக சொல்லியவர் ஜெயலலிதா
அதே வைகுண்டராஜனை இன்று போட்டு சாத்துகின்றார்கள், ஜெயா டிவியோ படுபயங்கர குத்தாட்டங்களை ஆடிகொண்டிருக்கின்றது
நன்றிகெட்ட உலமிது மனிதா.. [ November 5, 2018 ]
============================================================================
1971 வங்கப்போர் இந்திய வரலாற்றில் மாபெரும் வெற்றி, அதற்கு முக்கிய காரணமானவர்கள் மானெகக்ஷா, கடற்படை தளபதிகள் மனோகர் பிரஹலாத் அவாதி, மற்றும் கிருஷ்ணன்
அந்த போரில் தரைவழி தாக்குதலை திறமையாக நடத்தினார் மானெக்ஷா, ஆனால் கடற்படையே பிரதான ஆயுதமாக ஆடியது
குறிப்பாக அமெரிக்க தயாரிப்பான ஹாஜி நீர்மூழ்கி கப்பல் இந்தியாவினை மிரட்டியது கொஞ்சமல்ல
சென்னை, விசாகபட்டினம், கல்கத்தா ஆகிய நகரங்களை நிர்மூலமாக்கும் கொடூரதிட்டத்துடனே அது அனுப்பபட்டது, கூடவே அதன் பெரும் குறி ஐ.என்.எஸ் விக்ராந்த்
கடலில் எங்கிருக்கின்றது என தெரியாமல் மறைந்திருக்கும் ஹாஜி, திடீரென தாக்கிவிட்டு மறைந்தால் என்ன செய்ய முடியும்?
ஆனால் மிக தந்திரமாக அதை விசாகபட்டினம் பக்கம் வரவைத்த இந்திய கடற்படை அங்கயே மண்டையிலும் போட்டது
அந்த ஹாஜியினை வீழ்த்தியதில் மிக முக்கிய பங்கு வகித்து , மாபெரும் வெற்றியினை தேடி கொடுத்தார் தளபதி மனோகர் பிரஹலாத் அவாதி
அந்த மாவீரர் இன்று காலமானார், வங்க போரும் அதில் இத்தேசம் வெற்ற மாபெரும் வெற்ற வரலாறும் இருக்கும் வரை அவர் வாழ்வார்
அந்த கடல்வீரனுக்கு தேசத்தின் மாபெரும் அஞ்சலிகள், சென்னை மக்கள் அவருக்கு நன்றி செலுத்த கடமைபட்டவர்கள்
ஆம், ஹாஜி வங்கம் செல்லும் வழியில் சென்னையினை நொறுக்கும் திட்டத்திலேதான் வந்தது, ஆனால் ஐ.என்.எஸ் விக்ராந்த விசாகபட்டினத்தில் இருப்பதாக தவறான தகவலை பரப்பி ஹாஜியினை அப்பக்கம் இழுத்தது இவர்தான்
இல்லை என்றால் 10 டார்பிடோ கனைகளை ஹாஜி பாய்ச்சி இருக்கும், சென்னையில் பாதி பலத்த சேதத்தை சந்தித்திருக்கும்
அந்த பெரும் இக்கட்டிலிருந்து சென்னையினை காத்த அந்த கடமை வீரனுக்கு, தளபதிக்கு கூடுதல் அஞ்சலிகளை செலுத்த நாம் கடமைபட்டிருக்கின்றோம்.
ஜெய்ஹிந்த், வந்தே மாதரம்
(தளபதி என்றால் இப்படிபட்டவர்கள்தான் தளபதி, இங்கோ அதற்கான அர்த்தத்தையே மாற்றி லைத்திருக்கின்றார்கள் திராவிட இம்சைகள்: )
[ November 5, 2018 ]

நெல்லையனாக மிகுந்த பெருமை அடைகின்றோம்.
இந்த கோரிக்கையினை வைத்தவர்களுக்கு சங்கம் தன் முழு ஆதரவினை தெரிவிக்கின்றது,
இன்னும் காங்கிரஸ் தலமை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதே பூட்டை அந்த மாவட்ட நிர்வாகி வரும்பொழுது அலுவலகத்திற்கு போடும்படி சங்கம் தீர்மானம் நிறைவேற்றுகின்றது
தலைவி குஷ்புவிற்கு அவர்கள் ஒரு பூட்டு போட்டால், நாங்கள் அந்த மாவட்ட தலைவனுக்கு நூறு பூட்டு போடுவோம் என சங்கம் மறுபடியும் எச்சரிக்கின்றது

பரிதாபத்திற்குரியவர்கள் இந்த காவல்துறையினரும் சில அரசு அலுவலர்களும்
குடும்பத்தோடு அவர்கள் இருக்கும் நேரமே குறைவு, அதுவும் தீபாவளி அதுவுமாக யார் எல்லாம் பட்டாசு வெடிக்கின்றார்கள் என பார்க்கவும் வேண்டுமாம்
என்ன கொடுமை இது, நல்ல நாள் அதுவுமாக கறிசோறு கூட உண்ணவிடாமல் என்ன கடமை இது?
காவல்துறையும் இன்னும் சிலரும் தீபாவளி அன்று தர்மயுத்தமோ இல்லை வேலை நிறுத்த போராட்டமோ செய்யலாம்
[ November 5, 2018 ]
============================================================================
நேற்றுவரை பெரியார் , பெரியாரிஸம் அம்பேத்கரிசம் நாத்திகம் இந்துத்வ எதிர்ப்பு என கடும் அழிச்சாட்டியம் செய்தவன் எல்லாம் இன்று ஹேப்பி தீபாவளி மோடுக்கு திரும்பியாயிற்று
ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு சத்தம் போல..
[ November 5, 2018 ]
============================================================================
7 தமிழர்களை விடுவிக்காவிட்டால் நாம் தமிழர் கட்சியால் தமிழகம் போர்களமாகும், பெரும் புரட்சி வெடிக்கும் : சீமான்
அப்படி எத்தனை முறை தமிழகத்தை சைமன் போர்களமாக்கினார், அப்படி என்ன புரட்சி செய்து தமிழகத்தை பொங்க வைத்தார் என்றால் ஒன்றுமே இல்லை
மிஞ்சி போனால் அந்த 7 பேரின் அருகில் 8வதாக அமர்ந்திருப்பார், இதற்குத்தான் இவ்வளவு பில்டப் [ November 5, 2018 ]
============================================================================
TNPSC தேர்வு தமிழில் நடக்காது என அறிவித்திருப்பது மிகபெரும் அதிர்ச்சி என்கின்றார்கள்
இதில் என்ன அதிர்ச்சி வேண்டி இருக்கின்றது? ஒன்றுமில்லை ஆனால் நுட்பமான தந்திரம் இருக்கின்றது
அரசு இப்பொழுது நிதி நெருக்கடியில் இருக்கின்றது, தடுமாறுகின்றது அதற்காக புதிதாக யாரையும் பணிக்கு சேர்க்க முடியாது என சொல்லமுடியுமா?
நிச்சயம் தமிழில் நடத்தினால் பலர் தேர்வாகிவிடுவார்கள், அவர்கள் நீதிமன்றம் சென்றால் சிக்கல்
(பின் நிர்வாகம் என்னாகும் என கேட்க கூடாது, அதுபற்றி எல்லாம் அரசே கவலைபடாதபொழுது மக்கள் எப்படி கவலைபடலாம்)
ஆக தேர்வும் நடத்த வேண்டும், யாரும் பாஸ் ஆகிவிட கூடாது இந்த சிக்கலை எப்படி தவிர்ப்பது?
ஆங்கிலத்தில் நடத்தினால் நெருக்கடியினை குறைக்கலாம், இவ்வளவு நாளும் தமிழில் படித்தவன் எப்படி ஆங்கிலத்தில் எழுதுவான்?
இதுதான் ராஜதந்திரம் என்பது
மோடி ஆலோசனையில் இயங்கும் தமிழக அரசு என்றால் சும்மாவா?
இனி என்ன செய்வார்கள்? ஆங்கிலத்தில் எழுத மக்கள் தயாரானால் சிங்களம், பாலி மொழி என அடுத்தடுத்த மொழிக்கு மாறி கொண்டே இருப்பார்கள், உலகில் மொழிக்கா பஞ்சம்
எடப்பாடி அரசா கொக்கா?.. [ November 5, 2018 ]
============================================================================
எங்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் மற்றும் அவரது குடும்பம் விளங்காமல் போகும் – தங்க தமிழ்ச்செல்வன்

ஒரு போகம் என்பது 3 முதல் 4 மாதங்களை கொண்டது, அக்காலத்திலே முப்போகம் விளைவதே பெரும்பாடு
6 போகம் என்றால் வருடத்திற்கு 800 நாட்கள் வேண்டும், காலண்டரை திருத்துவார்கள் போல, சனியன்களுக்கு போகம் என்றால் என்னவென்ற தெரியவில்லை
ஏண்டா ஆங்கிலம் படித்தால் தமிழகம் தாண்டி உலகில் எங்குமே வேலை கிடைக்காதா? படிக்காவிட்டால்தான் சிக்கல் அட பதர்களா
உலகம் முழுக்க தமிழ் ஒருமொழி என்ற நிலைக்கா கொண்டுவருவீர்கள்? ஆனானபட்ட நெப்போலியன் ஹிட்லரால் கூட முடியாத விஷயம் அது, இந்த ஆமைவாயானா செய்யபோகின்றான்?
ஐடி தொழிலே உருமாறிவிட்டது , இப்பொழுது எல்லாம் தானாக புரோகிராம் எழுதும் நுட்பம் வந்தாயிற்று, ஒரு ராக்கெட் சயின்ஸ் என சொன்னாலும் பரவாயில்லை அதற்கெல்லாம் அறிவு வேண்டும் என்பதால் இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது
ஏண்டா இப்பொழுது அலங்கா நல்லூர் ஜல்லிகட்டு காலங்கள் கோலகலமாக இல்லையா? உங்களை எல்லாம் மாட்டு காலில் போட்டு மிதிக்க வேண்டும்
ஆடுமாடு மேய்ப்பவனுக்கு அரசு வேலை என்ன? அமெரிக்க ஜனாதிபதி வேலையே கொடுங்கள், எந்த பெண் கட்டுவாள் என பார்க்கலாம்
அடேய் ரேஷன் கடையே இனி இருக்காது எல்லாம் மானியம் என வழங்கபடும் காலத்தில் யார் ரேஷன் கார்டை பிடுங்குவீர்கள்
அதென்ன சைரன் வச்ச கார் வரிசையில் நிற்கும்? அவ்வளவு யோக்கியர் நடந்து செல்ல மாட்டாரா?
ஏம்பா உங்கள் ஆட்சியில் கச்சா எண்ணெய் 2 அடி ஆழத்தில் மதுரை பக்கம் கிடைக்காதா?
இப்படி எல்லாம் அந்த கும்பலை அடித்து அடித்து கேட்க வேண்டும் என்றால் கீழே கனவுதேசம் என முடித்துவிட்டான் படுபாவி
கனவு கண்டுகொண்டே இருப்பதும், அதை அப்படியே எழுதி வைத்து மகிழ்வதும் ஒரு வியாதி போல, தூக்கத்தில் எழுதும் வியாதி
ஆனாலும் 6 போகம் என அடித்து விட்டதற்கு மன்னிப்பே கிடையாது, மண்டையிலே போட வேண்டும், கழுதைகளுக்கு விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாது என்பது இப்பொழுதுதான் புரிகின்றது
கச்சதீவில் மீனா?
கச்சம் என்றால் ஆமை, அங்கு அதுதான் அதிகம்
மீன்கள் அங்கு கிடைக்காது , வலையினை உலர்த்தலாமே தவிர நல்ல குடிநீர் கூட கிடைக்காத இடம் அது
ஆமைகறி கும்பல்களுக்கு கச்சம் எனும் ஆமை அதிகம் புழங்கும் தீவு மேலே கண் இருப்பது ஒன்றும் ஆச்சரியம் அல்ல
[ November 5, 2018 ]

உடல் நிலை சரி இல்லாத பொழுதும் நடித்து கொடுத்தார் ரஜினி : இயக்குநர் ஷங்கர்
அய்யா, அவர் என்ன சும்மாவா நடித்தார்? அவர் சம்பளம் எவ்வளவு வாங்கிகொண்டு நடித்தார் என சொல்ல முடியுமா?
“30 ரூபாடா டேய்…. 30 ரூபா கொடுத்தா..” என்ற கவுண்டமணியின் வசனம் தெரியும் அல்லவா? [ November 5, 2018 ]
============================================================================
இப்படித்தான் கலைஞர் முக முத்துவிற்கு மன்றங்கள் திறந்து அவர் வாழ்வினையே பாழாக்கினார்.
அரசியல் குடும்பம் என்பது மட்டும் மக்கள் அபிமானம் பெற்ற நடிகனை உருவாக்கிவிட முடியாது என்பது கலைஞருக்கு தெரிந்தபொழுது நிலமை எல்லை மீறி சென்றிருந்தது
எதற்கும் பெரியப்பாவின் வரலாற்றை படித்துவிட்டு உதயநிதி என்பவர் மன்றங்களை திறக்கசொல்வது நல்லது, கலைஞருக்காவது 4 மகன்கள் இருந்தார்கள்
ஸ்டாலினுக்கு அப்படியா?

அப்புறம் தம்பி, நாளைக்கும் நம்ம டிவில விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிதானே
ஆமாண்ணே
ஆனா எதுக்கு விடுமுறைன்னு சொல்லமாட்டோம்ல
கண்டிப்பாண்ணே, நம்ம பகுத்தறிவு என்னாகுறது
ஆனா அந்த கொண்டாட்டத்துல சம்பாதிக்கலாம், அப்படித்தானே
டெபனட்லி….டெபனட்லி….. “ஆரிய கூத்தாடினாலும் தாண்டவ கோனே, காசு காரியத்தில் கண் வையடா தாண்டவ கோனே” அப்படின்னு பராசக்திலே பாட்டு வச்சவர்ணே அப்பா
