சிதறல்கள்

பங்கு இந்த தமிழ்ராக்கர்ஸ் எப்படி புது படங்களை எல்லாம் உடனே ஒளிபரப்பிவிடுகின்றார்கள்?

இந்த வீடியொ ஆடியோ ஸ்பெஷலிஸ்ட் தினகரன்- வெற்றிவேல் கோஷ்டிக்கும் அவனுகளுக்கும் லிங்க் இருக்கும் போல , விசாரிப்போம்

[ November 5, 2018 ]

============================================================================

ஆமாடா. அவர் என்ன சாதின்னு கண்டுபிடிக்கிறோம் அதற்கு பின்புதான் சர்ச்சார் படத்தை ஓடவிடுறோம், தியேட்டர் கதவையே திறக்குறோம்

அந்த தமிழ்ராக்கர்ஸ்க்கும் சொல்லிருங்க டா, இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணும் ஆமா..

(ஆனால் ஒரு பயலும் சங்கவியில் இருந்து கீர்த்தி சுரேஷ் வரை என்ன சாதி என ஆராயவே மாட்டான், ஆக நடிகைக்கு சாதி முக்கியமில்லை என்பது தமிழக நியதி..)

[ November 5, 2018 ]
Image may contain: text
============================================================================

பெரியார் அதை சொன்னார் இதை சொன்னார், பகுத்தறிவினை சொன்னார் என முழங்குவார்கள், அவர் சிலையினை தொட்டாலே முறைப்பார்கள்

ஆனால் அந்த பிரபலங்களின் டிவியில் தீபாவளிக்கு பெரியார் திரைபடத்தினை ஒளிபரப்புவார்களா என்றால் இல்லை , செய்யவே மாட்டார்கள்

அட அதுதான் இல்லை இந்த ராமாமிர்தம் அம்மையார், ரெட்டை மலை சீனிவானிசன் வாழ்க்கையினையாவது சீரியலாக கொடுப்பார்களா என்றால் அங்கே புராண கதைகளும் நவீன கொடூர கதைகளும் ஓடிகொண்டிருக்கின்றது

கொள்கை வேறு, சம்பாத்தியம் வேறு என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள் பகுத்தறிவு சிங்கங்கள்

[ November 6, 2018 ]

============================================================================

தீபாவளி பரிசுகளை யாரும் யாருக்கு கொடுத்து மகிழுங்கள், ஆனால் இத்தேசத்திற்கு மிகபெரும் தீபாவளி பரிசு விஞ்ஞானிகளால் கொடுக்கபட்டிருக்கின்றது

ஆம், அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலான அரிஹந்த் வெற்றிகரமாக சோதிக்கபட்டிருக்கின்றது, மிகபெரும் சாதனை அது

நீர்முழ்கி கப்பல் என்பது கடல் யுத்தத்தில் முக்கிய பங்கு வகிக்க கூடியது, இதுவரை இந்தியாவிடம் உண்டு எனினும் அணுசக்தியில் இயங்கும் கலன் கிடையாது

ஆம் மற்றவகை நீர்மூழ்கிகள் அடிக்கடி எரிபொருளுக்காக வெளிவரும், சிக்கிகொள்ளும் ஆனால் அணுசக்தி நீர்மூழ்கிகள் அது போக்கில் இயங்கலாம் ஒரு வருடம் கூட தாங்கும்

நீர்முழ்கிகளில் இரு பெரும் அனுகூலம் உண்டு

ஓரு உளவு விமானம் பறந்தால் தெரியும், ஒரு உளவாளி நடமாடினால் தெரியும் , ஏன் உளவு செயற்கை கோளை கூட கண்டறியலாம்

ஆனால் உளவு நீர்முழ்கிகளை கண்டறிவது மகா சிரமம், இன்றும் அமெரிக்க நீர்மூழ்கிகள் உலகெல்லாம் சுற்றி திரிவது ஒன்றும் ரகசியமல்ல‌

அப்படி சுற்றி திரிய வேண்டுமானால் அணுசக்தி அவசியம் இல்லாவிட்டால் எரிபொருளுக்காக வெளிவந்தால் லபக்கென்று அமுக்கிவிடுவார்கள்

அடுத்த அனுகூலம் ஏவுகனைகளை ஏவுவது, திடீரென கடலில் இருந்து புறப்படும் டார்பிடோ ஏவுகனைகள் பயங்கரமானவை, கூடவே பெரும் போர்கப்பல்களை தகர்க்க இது அவசியம்

இன்னொன்று நமது போர்கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் தேவை

சுருக்க்கமாக சொன்னால் இந்த செயற்கை சுறாக்கள் கடற்படைக்கு பெரும் வலுவூட்ட கூடியவை

1971 வங்க போரில் பாகிஸ்தான் வைத்திருந்த நீர்மூழ்கிக்கு நாம் பட்ட சிரமம் கொஞ்சமல்ல‌

இப்பொழுது சொந்தமாக செய்துவிட்டோம். உலகில் அணுசக்தி நீர்மூழ்கி வைத்திருக்கும் மிக சில நாடுகளில் நாமும் இடம்பிடித்துவிட்டோம்

இப்படியே சொந்தமாக போர்விமானங்களையும் செய்துவிட்டால், பட்ஜெட்டும் மிச்சம் பலமும் அதிகரிக்கும்

இந்த தீபாவளிக்கு நாட்டுக்கு கிடைத்திருக்கும் அந்த மிக சிறந்த பரிசுக்காக அந்த விஞ்ஞானிகளை வாழ்த்துவோம்

இந்தியா இன்னும் பலம் பெறட்டும் , ஜெய்ஹிந்த்

[ November 6, 2018 ]

Image may contain: ocean, sky, outdoor, text and water
=========================================================================

எதிர்கட்சி எம்பிக்களை கடத்த முயன்றாரா ராஜபக்சே? இலங்கையில் பரபரப்பு

தன் மெஜாரிட்டியினை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ராஜபக்சே அங்கும் கூவத்தூர் காரியங்களை செய்ய ஆரம்பித்துவிட்டார்

ஆக அங்கும் ஒரு “தியாக தலைவன்” கிடைத்தாயிற்று.

இலங்கை என்ன வெகுதூரமா? இங்கு வீசும் காற்று அங்கும் வீசாதா? அதில் அரசியல் கலக்காதா?

[ November 6, 2018 ]

============================================================================

அர்ரே பழ்னிச்சாமி சாப், நல்லநாள் அதுவுமா மனுஷன காளான் சாப்ட்ற விடுறீங்களா? என்ன மேன் இது

எதுங்க அய்யா? இங்க பட்டாசு வெடிக்கிறவங்கள எல்லாம் ஓட ஓட பிடிக்கிறோமுங்க அய்யா ,யாரும் கமலாலயம் முன்னால வெடிபோட்டுட்டானா அய்யா?, அது தினகரன் கோஷ்டியாத்தான் இருக்கும்யா, இப்போ பிடிச்சி தொங்கவிடுறேன் பாருங்க

அது இல்ல மேன், சர்க்கார் சரி இல்லண்ணு தமிழ்நாடு பூரா சொல்றாங்ளாம், அமெரிக்காவே நம்ம சர்க்கார் பார்த்து அலறுது மேன், ஆனா டமில்நாட்லே நம்ம சர்க்கார் நல்லா இல்லன்னு சொல்றாங்கண்ணா, யார் மேன் காரணம்? நம்மிள் பேரை நிம்பிள் கெடுக்குறான் மேன்

அய்யோ இல்லீங்க, இங்க சர்க்கார்னு ஒரு படமுங்க, அதபத்தி சொல்றாங்கங்க வேணும்னா தமிழிசைகிட்ட வேணும்னா கேட்டுகோங்க‌

அதெல்லாம் தெர்யாது மேன், நம்பிள் சினிமா எல்லாம் பார்க்க மாட்டான், அதெல்லாம் உங்க கட்சி விஷயம், எப்படியோ சர்க்கார் நல்ல சர்க்கார்னு மக்கள் சொல்லணும் புரியுதா

அதுபத்தி தமிழிசைகிட்ட பேசுறேன்ங்க , போன தடவை இப்படித்தான் மெர்சல்னு ஒரு மொக்கை படத்தை அவங்க ஹிட் பண்ண ஹெல்ப் பண்ணாங்க, இதுக்கும் அவங்க உதவி கேட்க போறேங்க..

2 நாளையில சர்க்கார் நல்ல சர்க்கார்னு மக்கள் சொல்றாங்கன்னு பொன்னார கிட்ட இருந்து செய்தி வர்ணும் மேன்”

[ November 6, 2018 ]

Image may contain: 1 person, sitting and closeup
============================================================================

கடல் படத்தில் மணிரத்தினத்தை கல்லை கட்டி கடலில் போட்டவர் ஜெயமோகன், அதிலிருந்து வெளிவர மணிசார் படும்பாடு கொஞ்சமல்ல‌

இப்பொழுது ஜெயமோகன் என்றால் மணிசார் தூக்கத்தில் கூட அலறுவதாக சொல்கின்றார்கள், முன்பு தன் வீட்டு குண்டு வீசியவர்களை கூட மன்னிக்க தயாரானாலும் ஜெயமோகன் என்றால் மணிரத்னம் துப்பாக்கி தூக்குவார் என்கின்றார்கள்

அவரை சர்க்கார் படத்திற்கு வைத்தால் என்னாகும்? இப்படித்தான் ஆகும்

அடுத்தது யார்?

எந்திரன் 2.0 படத்தை பார்த்து ஜனகராஜ் ஸ்டைலில் சிரிக்க வேண்டியதுதான்

“ஷங்கர் சார் நீங்க 3வது…..” [ November 6, 2018 ]

============================================================================

ஸ்ரீராமர் பிறந்த இடமான அயோத்தியில் தீபாவளி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது : செய்தி

காலத்தால் நடக்கும் பல விஷயங்களை தடுக்க முடியாது, 2000 ஆண்டுகளாக உலகெல்லாம் அடிபட்ட யூத இனம் இன்று ஜெருசலேமினை யூதமயமாக்கி கொண்டிருக்கின்றது

செங்கிஸ்கான் காலத்தில் விரட்டபட்ட கிறிஸ்தவமும் இஸ்லாமும் அவன் காலத்திற்கு பின் அரேபியாவிலும் ஐரோப்பாவிலும் தளைத்தது

யாரால் தடுக்க முடிகின்றது? தடுப்பார் யாருமில்லை

வெள்ளையனுக்கு பின் பர்மாவும் இலங்கையும் தீவிர பவுத்த நாடாயின தடுப்பார் யார் உண்டு?

இதோ இந்தியாவும் முழு இந்துத்வா நாடாக மாறிகொண்டிருக்கின்றது, 80% இந்துமக்கள் கொண்ட நாட்டில் அது சாத்தியமே

காலசக்கரம் என்பது இதுதான், விரட்டபட ஒரு காலமுண்டு என்றால் விரட்டி அடிக்கவும் ஒரு காலமுண்டு

ஆனால் யூதர்களை போல காலத்தால் மேம்பட்ட விஞ்ஞான இந்துத்வ நாடாக இருந்தால் சிக்கல் இல்லை ஆனால் ஆப்கன் தாலிபன் போல் ஆகிவிட்டால் மகா சிக்கல்

இந்த கோஷ்டியால் இந்தியா ஆப்கன் போல் ஆகும் என்றுதான் தெரிகின்றது

பாரம்பரியங்களை காப்பது வேறு, காலத்திற்கேற்ப மாறி உலகோடு ஒட்டுவது என்பது வேறு

மத இறுக்கத்தில் இருக்கும் நாடுகளில் அரபுநாடு தவிர எதுவும் உருப்பட்டதில்லை, காரணம் எண்ணெய்

அவர்களிடம் எண்ணெய் இருக்கின்றது, இந்தியாவிடம் என்ன இருக்கின்றது

இஸ்ரேலில் யூத குருமார்கள் பாரம்பரிய பபூன் உடையில் அலைவார்கள் ஆனால் அரசியலுக்குள் வரமாட்டார்கள், அங்கு கோட் சூட் அணிந்த நாகரிக யூதர்கள் இருப்பார்கள்

இந்து இந்தியா என்பது அப்படி இருந்தால் நல்லது மாறாக காவிகளை முன்னிறுதினால் இந்நாடு ஆப்கனை விட அவலமாக மாறும்

அதிலிருந்து இந்நாட்டை காக்கும் பொறுப்பு இந்துக்களுக்கு அதிகம் இருக்கின்றது

[ November 8, 2018 ]

============================================================================

ஒரிஜினல் கோமளவல்லி இருந்தபொழுது , தலைவா படத்திற்காக விஜயண்ணா “அம்மா.. பிளீஸ்மா ..படத்தை வெளியிட உதவுங்கம்மா..” என இந்த கோலத்தில்தான் கைகட்டி வாய்பொத்தி நின்றார்

எங்கே முடிந்தால் தட்சனா மூர்த்தி (கலைஞர்) அல்லது தியாகராஜன் (முரசொலி மாறனின் பெயர்) என ஒரு வில்லன் பெயரை வைத்துவிடட்டும் பார்க்கலாம்

இறந்தும் கிலி கொடுப்பவர் கலைஞர், உண்மையான தொண்டர்களை அவர்தான் சம்பாதித்திருக்கின்றார்.

[ November 8, 2018 ]
Image may contain: 1 person, standing and beard
============================================================================

பொதுபணிதுறை மிக ஒழுக்கமாக கட்டுபாடாக இருக்கும் மலேசியாவிலும் டெங்கு உண்டு, சிங்கப்பூரில் அன்றாடம் உண்டு,

ஆண்டுதோறும் பலிகளும் உண்டு

மலேசியா வெளியில் சொல்லும் , சிங்கப்பூர் சொல்லாது டெங்குவில் செத்தவனையும் ஈரல் நோயால் செத்தான் என ரிப்போர்ட்டை எழுதிவிட்டு அமைதியாகிவிடும்

பொதுபணிதுறைக்கும் டெங்குவிற்கும் என்ன சம்பந்தம்? பொறுப்பு மக்களுக்கும் உண்டு

கதையினை திருடி, கனவில் வசனம் எழுதினால் இப்படித்தான் ஆகும்

[ November 8, 2018 ]

============================================================================

1966ல் இதே நாளில்தான் டெல்லியில் காமராஜர் இருந்த வீடு தீபிடித்து எரிந்தது , காமராஜரை கொல்ல சதி என்றெல்லாம் பெரும் செய்திகள் வந்தன‌

உண்மையில் அது திட்டமிட்ட சதி அல்ல, மாறாக கலவர சூழல்

அப்பொழுது மிக தீவிரமான பசுவதை தடுப்பு போராட்டம் நடந்தது, வட இந்தியா போர்களமானது , அப்பொழுது டெல்லியில் பல வீடுகள் எரிக்கபட்டன, துரதிருஷ்ட வசமாக காமராஜரும் அங்கு சிக்கி கொண்டார், உயிர் தப்பினார்

ஆனால் அதை அரசியலக்வோ அனுதாபம் தேடவோ அந்த அப்பாவி மனிதனுக்கு தெரியவில்லை, தீயில் எரிந்த தியாக தலைவன் என்றெல்லாம் தனக்கு தானே பட்டம் கொடுக்கவும் அவருக்கு விருப்பமில்லை

இன்று காமராஜரை டெல்லியில் கொல்ல இந்துத்வா வெறியர்கள் முயன்றார்கள் என பெரும் சீற்றம் சீறுபவர் எல்லாம் யார் தெரியுமா?

இந்திரா காந்தியினை இரத்தம் வரும்வரை அடித்த தமிழகத்தார், ஆம் சமீபத்தில் மோடியினை கருப்பு கொடி காட்டி ஓட விரட்டிய அதே தமிழகத்தார்

இந்திரா மேல் கல் எறிந்தால் அது தமிழக புரட்சி, திராவிட எழுச்சி

ஆனால் காமராஜர் இருந்த வீடு எரிந்தால் அது இந்துத்வ வெறி, கொலைமுயற்சி

ராஜிவ் இங்கு கொல்லபட்டாலே அது புலிகளின் நுட்பமான தற்கொடை போர் என்பார்கள், அப்படிபட்ட தமிழகம் இது

இங்கு இப்படித்தான் வரலாறு எழுதபட்டிருக்கின்றது

அய்யகோ காமராஜரை இந்துத்வா வெறியர்கள் கொல்ல முயன்றார்கள் என்பதும், இங்கே ராஜிவினை கொன்றவர்களை விடுவி என்பது என்ன மாதிரி அரசியலோ தெரியவில்லை

காமராஜருக்கு இந்த இந்துத்வா கோஷ்டிகளை விட திராவிட அழிச்சாட்டிய கும்பல் செய்த விஷயங்களே ரணமானவை, கண்ணீரை வரவைக்கும் கொடூரமானவை. [ November 8, 2018 ]

============================================================================

அந்த கொலம்பியா தீவு விவகாரம் வெளிவந்ததில் அச்சபட்டதோ என்னமோ தாய்லாந்து பல சலுகைகளில் இறங்கிவிட்டது

இருமாதத்திற்கு விசா கட்டணம் இல்லையாம், இலவச விசாவாம், அவர்கள் சுற்றுலாவினை ஊக்குவிக்க இந்த அறிவிப்பாம்

அப்படியே இலவச விமானம், இலவச கப்பல் என தாய்லாந்து அறிவித்தால் எப்படி இருக்கும்,

அதாவது அவர்கள் சுற்றுலா வளரும் அல்லவா? அதைத்தான் சொன்னோம், வேறு ஒன்றுமல்ல‌  [ November 8, 2018 ]

========================================================================================================================================================

ஞாயிறு மாலை சென்னை விமான நிலையத்தில் ஒரு இன்டிகோ விமானம் தரையிறங்க தத்தளித்திருக்கின்றது, மக்கள் கண்டுகொள்ளவில்லை ஆனால் பாதுகாப்பு விஷயங்களில் உள்ளவர்கள் கண்டறிந்திருக்கின்றார்கள்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் அது, ஆனால் வரும் வழியில் ஒரு இஞ்சின் செயல்படவில்லை என்பது பின்புதான் தெரிந்திருகின்றது

ஒரு புற இஞ்சினை கொண்டு மறுபடியும் பறந்திருக்கின்றார்கள், வலப்புற இஞ்சினை மீண்டும் இயக்க முயன்றார்கள் முடியவில்லை

பின்பு ஊரெல்லாம் சுற்றிவிட்டு மறுபடி இறங்கி இருக்கின்றார்கள்

என்ன கோளாறு என்றால் விஷயம் மகா சிக்கலாது

ஆம், அந்த எஞ்சினில் ஆயில் குறைவாம், அது பறக்கும் பொழுது ஏற்பட்ட கோளாறா அல்லது ஒழுங்காக புறப்படும் முன்பே சோதிக்கவில்லையா என்பது இனிதான் தெரியும்

அதாவது விமான தவறா விமானியின் தவறா இல்லை சோதிக்கும் என்சினியர் தவறா என்பது இனிதான் தெரியும்

[ November 8, 2018 ]

===========================================================================