சிதறல்கள்

பயங்கரவாத தாக்குதலை அரசியலாக்க வேண்டாம் : மோடி

காங்கிரஸ் ஆட்சியில் தாக்குதல் நடந்தால் 56 இன்ஞ் மார்பு என கையில் அளவு நாடாவோடு சீறிவார் மோடி

ஆனால் இவர் ஆட்சியில் நடந்தால் 56 இன்ஞ் மார்பும் கிடையாது, சத்தமும் கிடையாதாம்

முன்பு இம்மாதிரி விஷயங்களில் காங்கிரசு அமைச்சருக்கு சேலை வளையல் எல்லாம் அனுப்புவார்கள் பாஜகவினர் என்பது குறிப்பிடதக்கது

இப்போது காங்கிரசார் வளையலும் சேலையும் அனுப்பினால் என்னாகும்? நிர்மலா சீத்தாராமன் சாவகாசமாக அள்ளி கொண்டு செல்வார் என்பது வேறுவிஷயம்

************************

நிச்சயம் இந்த தாக்குதல் கண்டிக்கதக்கது, அதற்காக போர் தொடுக்கவேண்டும் என பலர் கொக்கரிக்க தொடங்கியாயிற்று

போர் தொடங்கினால் என்னாகும்? எமர்ஜென்ஸி சட்டம் கொண்டுவந்து மோடி அட்டகாசமாக தொடர வழிசெய்யும்

ஆம், நாட்டுக்கு நெருக்கடி என எமர்ஜென்சியினை அறிவித்துவிட்டு அவர்போக்கில் இருப்பார் மோடி

எந்த முடிவினையும் அவர் எடுக்கலாம், கருப்பு கொடியினை எல்லாம் தூக்கி போட்டு மிதிக்கலாம் அனுதினமும் கருப்பு பணத்தை ஒழிக்கலாம்

என்னென்ன விளையாட்டு உண்டோ எல்லாம் அவர் ஆடலாம்

அதற்கா ஆசைபடுகின்றீர்கள்?

போர் தொடங்க இது நேரமல்ல, அடிக்க வேண்டிய நேரம் ஒன்று உண்டு அப்பொழுது நொறுக்கலாம்

இப்பொழுது தொடங்கினால் தேர்தலும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது, மோடிக்கு என்ட் கார்டே கிடையாது

இனி எவனும் போர் தொடங்கட்டும் என பேசுவான்?

******************

காஷ்மீர் தாக்குதலை கண்டித்து பாஜகவின் நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து செய்யபடுகின்றன என்கின்றது செய்திகள்

ஆனால் பாஜக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தமிழகம் வந்திருக்கின்றார் பலமான கூட்டணி அமைக்க போகின்றாராம்

ஒருவேளை இவர் பாஜகவில் இல்லையோ? அப்படி இருப்பதாக‌ பொய் சொல்லியிருப்பாரோ?

******************

அரசியல் பேச்சுக்கான நேரம் அல்ல’- புல்வாமா தாக்குதலால் முதல் பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்த பிரியங்கா

பொறுப்பு என்பது இதுதான், பக்குவம் என்பதுதான் இதுதான்

உடனே வந்து காங்கிரஸ் தலைவராக பதவிஏற்றுகொள்ளுங்கள் தாயே, பாரதம் காத்திருக்கின்றது