சிதறும் செய்திகள்….
பிரிட்டன் மகராணி எலிசபெத்திற்கு உடல்நலம் முதுமை காரணமாக ஒத்துழைக்கவில்லையாம்
வயதும் அதிகம் என்பதால் அடுத்த ராணி யார்? என்ற கேள்வி இப்பொழுது பரபரப்பாக விவாதிக்கபடுகின்றது
அது நிச்சயம் அரண்மனை பணிபெண்ணாக இருக்கமுடியாது என்பதில் திருப்திகொள்கின்றனர் பிரிட்டன் மக்கள்.
பிரிட்டன் என்ன தமிழ்நாடா?
கொஞ்சகாலமாக பிரான்ஸ்க்கு சனி, அதுவும் அஷ்டம சனி
தீவிரவாத தாக்குதல், கொள்ளையர் அட்டகாசம் வரிசையில் அணுவுலையும் சேர்ந்துகொண்டது,
பிரான்ஸ் அணுவுலை கசிவு என செய்திகள் வருகின்றன, ஆபத்தில்லா கசிவு என ஒரு பக்கம் சொல்லிகொண்டிருக்கின்றனர்
அதிமுகவில் ஏது நல்லவர் கெட்டவர்? தீயில் ஏது நல்ல தீ கெட்ட தீ? அணுவில் ஏது நல்ல கசிவு , கெட்ட கசிவு?
கொஞ்ச நாளைக்கு முன் பிரான்ஸ் அணுவளாகம் மீது ஆளில்லா பொம்மை விமானம் பறந்ததும், அது தீவிரவாதிகள் வேலையா என்ற விசாரணையும் நடந்தது குறிப்பிடதக்கது
ஏதோ நடந்திருக்கின்றது , அதனால் வேகமாக மறைக்கின்றார்கள்
அணுவுலை என்பது இன்றைய உலகில் பெரும் அரசியல் பாவம், அதனால் மறைத்தே வைப்ப்பார்கள்.
ஒ.பி.எஸ். திறம்பட செயல்பட்டு வந்தார்: சசிகலா பதவிஏற்க அவசரப்படுவது ஏன்? நடிகை லதா கேள்வி
ஜெயலலிதா தோழி நான் அதனால் அதிமுகவில் எனக்கு முழு உரிமை உண்டு என சசிகலா சொல்லும் பொழுது, எம்ஜிஆரின் தோழி நான் எனக்கு அதிமுகவில் உரிமை உண்டு என சொல்ல லதாவால் முடியாதா?
தோழிகளும், தோழர்களும் தான் தங்கள் நண்பருக்கு பின் அதிகாரத்திற்கு வரமுடிய்மென்றால், எம்ஜிஆருக்கு பின் நம்பியாரும், நாகேஷீம், தேங்காய் சீனிவாசனும் தான் தமிழக முதல்வராகியிருக்க முடியும்.
ஏன்? லதா கூட சபாநாயகராக ஆகியிருக்கலாம்.
அப்படித்தானே லதா மேடம்???
தமிழகத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை-திருநாவுக்கரசர்
தமிழகத்தில் முதல்வரே என்னை மிரட்டினார்கள் என அழுகின்றார், 131 எம் எல் ஏக்கள் கடத்தபட்டதாக அதிரடி செய்திகள் வருகின்றன
இவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத தமிழகத்தில், தலித் மக்களுக்கு மட்டும் பாதுகாப்பில்லை என திருநாவுக்கரசர் கண்டுபிடித்துவிட்டாராம்
இங்கு யாருக்கு அய்யா பாதுகாப்பு இருக்கின்றது?
ஜெயலலிதாவிற்கு தோழி என்ற ஒரு தகுதியில் ஒரு அம்மணி தமிழக அரியணை வேண்டுமென்று அடம் பிடிக்கின்றாராம், அவருக்கும் சிலர் வடம் பிடிக்கின்றார்களாம்
அப்படியானால் எம்ஜிஆருக்கு 40 ஆண்டுகால நண்பரான, அவருடன் ஓரிலையில் உண்ட, அவரை புரட்சி நடிகனாக்கிய, அவரை அரசியல்வாதியாக உருவாக்கிய அந்த கருணாநிதி அல்லவா முதல்வருக்கு மிக பொருத்தமானவர்?
அதிமுக தலமையின் தோழமைதான் தகுதி என்றால் கலைஞரை விட பெரும் தகுதி யாருக்கு இருக்கின்றது? வாருங்கள், அவரையே முதல்வராக்கலாம்