சித்தராமையா பெரும் சட்டமீறலுக்கு தயாராகின்றார்
கன்னட அரசு காவேரி தீர்ப்பு குறித்து, கண்காணிப்பு குழு அமைப்பது குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றது
இது இந்திய இறையாண்மைக்கும், நீதிமன்ற மாண்புக்கும் சவால் விடுகின்றது, இந்திய தேசியத்திற்கு சவால் விடுகின்றது
மறுபடியும் குட்டையினை குழப்ப அது ரகசிய திட்டம் தீட்டுவது தெரிகின்றது
தேசிய கட்சி என மார்தட்டும் காங்கிரசும், உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த சித்தராயமய்யா தயாராக வேண்டும் என சொல்லவில்லை
ஏன் என்றால் அரசியல் கணக்கு, இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். கன்னட காங்கிரஸ் என்பது ஏதோ இன்னொரு தேசத்து காங்கிரஸ் என்பதுபோல டெல்லி காங்கிரஸ் அமைதிகாப்பது சரியல்ல
சித்தராமையா பெரும் சட்டமீறலுக்கு தயாராகின்றார்
அதனால் அந்த அழிச்சாட்டியம் பிடித்த அரசை உடனே டிஸ்மிஸ் செய்து, குடியரசு தலைவர் ஆட்சியினை பிரகடனபடுத்தி, காவேரி கண்காணிப்பு குழுவினை அமைத்து , நீர் பங்கீட்டை உடனே தொடங்க வேண்டும்
ஒரு சொட்டு நீர் தரமாட்டோம் என ஒரு மாநிலம் சொல்லிகொண்டிருக்க, தேசிய நீரோட்டம் என பேசிகொண்டிருப்பது நியாயம் ஆகாது
சித்தாரமாயா அரசு மீது உச்சநீதிமன்ற அவமதிப்பு எனும் வகையில் நடவடிக்கை எடுத்தல் உடனே வேண்டும்