சித்திரை விஷூ வாழ்த்துக்கள்.

Image may contain: food

தமிழர் புத்தாண்டு அதுவுமாக தமிழருக்கு கோவிலுக்கு செல்ல வழியில்லை, எல்லா ஆலயங்களும் பூட்டியிருக்கின்றன‌

அதனால் என்ன? மரத்தடி பிள்ளையார் முதல் கல்லில் இருக்கும் கருப்பசாமி வரை ஏன் வீதியெல்லாம் ஆலயங்களை அமைத்தார்கள் என்பதன் பொருளை இந்துக்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றனர்

ஆலயம் பூட்டியே இருக்கட்டும், அட வீதியினை விட்டு வெளியே வர வேண்டாம், கூடி பிரார்த்திக்கும் அவசியமில்லை. மரத்தடி போதும் அதில் இருக்கும் பிள்ளையார் போதும் , கல் போதும். கையில் இருக்கும் சூடம் போதும் அதுவுமில்லை என்றால் கவலையே இல்லை

எந்த சூழலிலும் தன் வழிபாட்டை தொடருமாறு இந்துவுக்கு அம்மதம் ஏற்பாடு செய்திருக்கின்றது, வீதி மரத்தடி பிள்ளையாரும் ஆங்காங்கே இருக்கும் சாமிகளும் புத்தாண்டு ஆசி வழங்கி கொண்டிருக்கின்றன‌

“அர்ஜூனா எங்கெல்லாம் வழிபாடு நடக்கின்றதோ அவர்கள் எவ்வழியாயினும் அந்த பிரார்த்தனை என்னையே வந்து அடைகின்றது என அறிக” என கீதையில் சொல்கின்றார் பரமாத்மா

ஆம் சிறுதெய்வமோ பெருந்தெய்வமோ கல்லோ மரமோ எதை தொழுதாலும் அது பரமனையே அடைகின்றது, எல்லா ஆறும் கடலுக்கு செல்வது போல எல்லா பிரார்த்தனைகளும் அவனையே அடைகின்றன‌

ஊரடங்கு கட்டுப்பாடு எனும் நிலையிலும் புத்தாண்டு ஆசிகளை அள்ளி கொடுத்திருக்கின்றன ஆங்காங்கே இருக்கும் சிறுதெய்வங்கள் வழங்கி கொண்டிருக்கின்றன‌

வீதியெல்லாம் முக்கு முக்காக இருக்கும் பிள்ளையார் இன்னும் விஷேஷம், உண்மையில் இவ்வளவு பிள்ளையார்கள் முன்பு வீதியெல்லாம் இல்லை , இந்த ஈரோட்டு ராம்சாமி பிள்ளையார் சிலையினை உடைக்க வீதிக்கு வீதி பிள்ளையார் முளைத்தார்

வீதிக்கு வீதி பிள்ளையாரை வைத்து வணங்கி அவரை பழிவாங்கியது தமிழகம்

எல்லா அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்

தமிழர் கலாச்சாரமும் வாழ்வியலும் சூரியனை மையமாக கொண்டது, “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” என வாழ்ந்த சமூகம் இது

தமிழரின் நாள் என்பது சூரிய உதயம் தொடங்கியதில் இருந்தே கணக்கில் வரும், முழுக்க சூரியனை மையமாக வைத்த இனம் இது

தமிழனுக்கு ஞாயிற்றுகிழமைதான் வாரத்தின் தொடக்கமாக இருந்தது, ஏன் யூதனுக்கும் அப்படித்தான் இருந்தது, மேற்காசியாவில் இருந்தது

சனி நீராடு என்றால் குளித்து ஓய்வெடு என்பதே பொருள், ஞாயிறு வேலை தொடங்கும் நாள்

பின்னாளிலே எல்லாம் மாறிற்று

அந்த அளவில் சூரியனை கொண்டாடிய சமூகத்தின் கலாச்சாரபடி சித்திரை தொடக்கமே ஆண்டின் தொடக்கமாய் இருந்தது

பின்னாளில் சிலர் மாற்ற பார்த்தார்கள் முடியவில்லை, பழமை தன்னை மீட்டு கொண்டது

தமிழனுக்கு மட்டுமல்ல மலையாளம், சிங்களம் உட்பட பல சகோதர இனங்களுக்கு இன்றுதான் புத்தாண்டு

அப்படியே ராஜபக்சே கோஷ்டிக்கும் ஒரு வாழ்த்து

இப்பக்கம் நயன் தாரா என்பவரை தவிர எல்லா மலையாளிகளுக்கும் குறிப்பாக நித்தியா மேனன், லஷ்மி மேனன் உட்பட எல்லோருக்கும் சித்திரை விஷூ வாழ்த்துக்கள்

பிழைத்து போகட்டும், “மாற்றான் தோட்டத்து மயிலுக்கும் தோகை உண்டு” என்பதால் நயனுக்கு சிரிக்காமல் முறைத்து கொண்டே கொஞ்சம் வாழ்த்துக்கள்…