சின்னபுள்ளைங்க புத்தி

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் அந்த விசித்திரமான விபரீதம் நடந்திருக்கின்றது.

17 வயது மாணவியர் கோவிலில் திருமணம் செய்திருக்கின்றனர்

இதென்ன பெண் கழுத்தில் பெண் தாலிகட்டி, பெண் காலில் பெண்ணே மெட்டிமாட்டி .. என சந்தேகித்த மற்ற பக்தர்கள் அவர்களை விசாரித்திருக்கின்றனர்

வரதட்சணை கொடுமைக்கு இப்படி கொடும் புதிய வழிகாட்டும் போராட்டமாக இருக்குமோ என்ற பயமெல்லாம் பலருக்கு வந்திருக்கின்றது..

அவர்கள் வயது மற்றும் ஒருவிதமான பரிதவிப்பு எல்லாம் உணர்ந்தவர்கள் காவல்துறைக்கு விஷயத்தை சொல்லிவிட்டனர்

காவல்துறை அவர்களை அள்ளி போட்டுகொண்டு சென்று விசாரித்திருக்கின்றது

அதில் இருவரும் தோழியர் என்றும் பள்ளிவகுப்பு முடிந்தபின் பிரிய நேரிடும் என்பதால் இப்படி மணம் செய்து கொள்வதாகவும் சொல்லி அழுதிருக்கின்றனர்

இதுதான் விவகாரம் வேறொன்றுமில்லை என காவல்துறை அவர்களை பெற்றோரிடம் அனுப்பிவிட்டது

சமூகத்தில் நடக்கும் விஷயங்கள் பல சரியல்ல, இதெல்லாம் என்ன வகை மனநிலை என்பது புரியவில்லை

நல்ல வேளையாக அந்த பெண்களுக்கு சண்டாளி Devi Somasundaram என்பவரை பற்றி தெரியவில்லை

தெரிந்தால் “இதெல்லாம் உன்னுரிமை , பெண்ணுரிமை சுப்ரீம் கோர்ட்டே ஒப்புகொண்ட விஷயம், ம்ம் அப்படியே பதிவு அலுவலகம் சென்று பதியுங்கள், தடுத்தால் உதையுங்கள்..” என பலத்த ஆலோசனை சொல்லியிருப்பார்

அம்மணி சகவாசம் இல்லாததால் இரு பெண்களின் வாழ்க்கை தப்பியது

இது பற்றி நண்பர் Senthil Kumar Krishnan என்வரிடம் சொன்னால், “அண்ணே நிறைய இப்படித்தாண்ணே, பையன்கள் என்றாலே நிறைய பொண்ணுக்கு பிடிக்கவே மாட்டேங்குதுண்ணே, பெண்களைத்தான் பிடிக்குது.

அதுக்காக நானெல்லாம் சுடிதாரா போடமுடியும்?

அண்ணே, அவளுகளுக்கென்ன சிக்கல்? கல்யாணம் ஆகிட்டா பிரிந்து விடுவோம் என்பதுதானே?

ஒரே பையனை கல்யாணம் செய்தால் ஏன் பிரிய போகின்றார்கள்? இது அவர்களுக்கு தெரியவில்லையா?

எவ்வளவு பசங்க ரெடியா இருக்காங்க தெரியுமா?..வரதட்சணை என ஒருபிடி மண் கூட வேண்டாம்..

அதெல்லாம் தெரியாம.. இப்படி..சின்னபுள்ளைங்க புத்தி என்பது சரியாகத்தான் இருக்குண்ணே..”