சின்னம்மா வந்து நாற்காலியில.. இன்னும் பிற…

செங்கோட்டையன், தம்பிதுரை, சரஸ்வதி எல்லாம் முன்மொழிந்தாகிவிட்டது.

“சின்னம்மாவா வந்து நாற்காலியில அமரணும்னு காத்துகிட்டிருக்க்கோம்” என நாஞ்சில் சம்பத்ம் சொல்லிகொண்டிருக்கின்றாராம்

“இனி என்னை டிரம்ப் பார்ட்டில கூப்புட்டாக…சீன கம்யூனிஸ்ட் கட்சியில கூப்பிட்டாக, புடின் கட்சில கூப்பிட்டாக அதனையெல்லாம் விட்டுவிட்டு என் கெரகம் இங்க வந்து மாட்டிகிட்டேன்….” என சசிகலா அறிக்கை விட்டு பொறுப்பேற்பதுதான் பாக்கி

கார்த்திகை தினமாம், பொதுவாக முருக பக்தர்கள் கொண்டாடுவார்கள்

ஆனால் அவரை விட, அதாவது உலெகல்லாம் சுற்றி பழம் பெருவதை விட, அம்மா அழுக்கிலிருந்து உருவாகி, அம்மை அப்பனை சுற்றி, முடிந்தால் அம்மையினை மட்டும் சுற்றினால் ஞானப்பழம் கிடைக்கும் என நிரூபித்த பிள்ளையாரே இனி அவர்களின் வணக்கத்திற்குரிய கடவுள்

இனி பிள்ளையார் சதுர்த்தியே அவர்கள் கொண்டாட போகும் பெரும் விழா.


சோதனைகளை கடந்தவர் ஜெயலலிதா, ஒரு காலத்தில் என் பேச்சால் அவர் மனம் புண்பட்டது : ரஜினிகாந்த்

இவருக்கு ஏன் பத்மபூஷன் விருது கொடுத்தார்கள், அப்படி என்ன நடித்தார் என்ற பலகால கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது, இப்படி ஒரு நடிப்பினை யாராலும் நடிக்க முடியுமா?

ஏய் ஆஸ்கர் கமிட்டியே இந்த நடிப்பிற்கு ஏதாவது பார்த்து செய்ய உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்