சின்ன சின்ன செய்திகள்….

விசாரணையின் போது நிர்மலாதேவி எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்தார் – அதிகாரி சந்தானம்

அய்யய்யோ என்ன சொல்கின்றார் இவர்? தினதந்தியில் இப்படி செய்தி வந்தால் நாடு தாங்குமா?

எல்லா தகவலையும் தந்தார் என சொன்னால் போதாதா? ஒத்துழைத்தார் என்றால் தமிழக பத்திரிகைகள் உருவாக்கி இருக்கும் பிம்பம் என்ன தெரியுமா?

சந்தாணத்திற்கு அந்த 4 மாணவிகளே பரவாயில்லை போலிருக்கின்றது


ஜாதி ரீதியாக சமூகத்தை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஆமாம், சமூகத்தை இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என்றுதான் பிளவுபடுத்தவேண்டும்

அது நியாயம், அது தர்மம், அதுதான் நாட்டுபற்று.

அதை விட்டு சாதி ரீதியாக பிளவுபடுத்தினால் அது மாபெரும் அநீதி