சியாமா பிரசாத் முகர்ஜி
இந்தியா எப்படி சுதந்திரம் பெற வேண்டும் என போராடியோர் பலர் உண்டு, ஆனால் சுதந்திர இந்தியா எப்படி ஒரே இந்தியாவாக இருக்கவேண்டும் என கனவுகண்டு போராடியோர் சிலரே
அந்த சிலரால்தான் இன்று தேசம் ஒரே இந்தியாக வலுவான இந்தியாவாக இருக்கின்றது. ஒரு கையின் விரல் விட்டு எண்ணிவிட கூடிய அந்த சிலரில் நேதாஜிக்கும், பட்டேலுக்கும் இணையான இடத்தில் இருப்பவர் அந்த தேசாபிமானி
இன்று இந்தியா காஷ்மீரை தன்னோடு சேர்த்து வலுவான இந்தியாவாக ஒரே இந்தியாவாக இருக்க அந்த மனிதனே காரணம், சுருக்கமாக சொன்னால் அவர் ஒருவரேதான் காரணம்
சியாமா பிரசாத் முகர்ஜி, இந்தியாவின் இரண்டாம் இரும்பு மனிதர்
அவர் வங்கத்து பிறப்பு, 1901ல் பிறந்தவர், பெரும் படிப்பாளி, லண்டனுக்கு சென்று பாரிஸ்டர் பட்டமெல்லாம் பெற்றவர் , கல்கத்தா பல்கலை கழகத்தில் துணைவேந்தராக இளம் வயதிலே அமர்ந்தவர், மக்களிடம் அவருக்கு இயல்பாகவே பெரும் மதிப்பு இருந்தது, காங்கிரஸில் தன்னை இணைத்து நாட்டுபணிக்கு வந்தார்
5 குழந்தைகளை விட்டுவிட்டு இளம் வயதிலே மனைவி மறைந்தாலும் அவர் மறுமணம் செய்யவில்லை, தேசபணியில் தன்னை அர்பணித்தார்
1930, 40களில் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் தனித்து நின்று வங்க மாகாணத்தின் நிதி அமைச்சர், எதிர்கட்சி தலைவர் என்றானார்
இக்காலகட்டத்தில் முஸ்லீம் லீக் மெல்ல மெல்ல தனிநாடு கோரிக்கையினை எழுப்பியது, காங்கிரஸ் அதனை பெரிதாக கண்டிக்காத நிலையில் அதனலிருந்து விலகி இந்துமகாசபையோடு தொடர்பில் இருந்தார்
மக்கள் செல்வாக்கு அவருக்கு அமோகமாக இருந்தது, 1944ல் இந்து மகா சபை தலைவருமாக அமர்ந்தார்
1945க்கு பின் இந்தியாவில் இடைகால அரசு அமைக்கபட்டது, வங்க மக்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றவரும் , பேராசிரியருமான அவருக்கு நேரு தொழில் மற்றும் வணிகதுறை பதவியினை வழங்கினார்
அந்த பணியினை அவர் செவ்வனே செய்தபொழுதுதான் தேசபிரிவினையின் கொடூரங்கள் தெரிய ஆரம்பித்தன, தேசம் பிரியும்பொழுதே எரிந்த இந்தியாவினை கண்டு மனம் நொந்த முகர்ஜி நேருவோடு சேர்ந்துதான் தேசத்தை கட்டி எழுப்ப விரும்பினார்
ஆனால் தவறுக்கு மேல் தவறாக காஷ்மீரை முன்னிட்டு மிக தவறான ஒப்பந்தம் ஒன்றை 1950ல் அன்றைய பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானோடு செய்தார் நேரு
அது இந்தியாவின் இந்துக்களை மட்டுமல்ல பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்களை கண்டுகொள்ளாத ஒப்பந்தம் அதைவிட கொடுமையாக இங்கே சிறுபான்மையாகவும் பாகிஸ்தானில் பெரும்பான்மையாகவும் இருக்கும் இஸ்லாமியருக்கு சாதகமான ஒப்பந்தம்
நேருவுக்கு சிறுபான்மையினர் பற்றிய கவலை அதிகம் இருந்ததே அன்றி பெரும்பான்மை இந்துக்கள் பற்றி துளியும் கவலை இல்லை
இஸ்லாமியர் தனித்து வாழ ஒரு நாடு, இந்தியாவில் இஸ்லாமியர் பாதுகாப்பாய் வாழ வழிகள் என யோசித்த நேருவுக்கு இந்துக்களுக்கான நாடோ, உரிமையோ, அங்கீகாரமோ கொடுக்க சிந்தனையே இல்லை
இந்துக்களை நேருவின் செய்கை முழுக்க பாதித்தபொழுதுதான், அடுத்த அடியாக காஷ்மீரில் குழப்பத்தை தொடங்கினார் நேரு
பாதி காஷ்மீர் பாகிஸ்தானுக்கு மீதி காஷ்மீரும் இந்தியாவில் இல்லா பகுதி சிறப்பு அங்கீகாரமிக்க பகுதி என அவர் குழப்பி அடித்தபொழுது தேசாபிமானிகளுக்கெல்லாம் கோபமும் ஆத்திரமும் வந்தது
ஒரு நாட்டின் ஒரு பகுதி அப்படி பல சிறப்பு அங்கீகாரத்துடன் இருப்பது நாட்டுக்கு பெரும் ஆபத்து, அது நாட்டின் ஒற்றுமையினை கேள்வியாக்கும், நாடு முழுக்க ஒரே சட்டமும் ஒரே தேசியமும் இருப்பதுதான் நாட்டை காக்கும் வழி என தேசாபிமானிகள் சொன்னாலும் நேரு ஏற்பதாக இல்லை
தேசாபிமானிகளும் இந்து அபிமானிகளும் மனம் நொந்தனர், அதில் பிரசாத் முகர்ஜி முழுக்க மனம் உடைந்தார்
இனி இந்துக்களுக்கும் இந்தியருக்குமான ஒரு கட்சி இல்லாமல் இனி இந்தியா இல்லை, ஒரே இந்தியா இல்லை, காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக நீடிக்க 370ம் சட்டபிரிவு ஆபத்து என முழங்க தொடங்கினார்
இவர் கருத்தை அப்போதைய அம்பேத்கரும் ஆதரித்தது குறிப்பிடதக்கது, அம்பேத்கர் சட்டபடி சரியாக சொன்னார்
எனினும் நேருவுக்கும் முகர்ஜிக்கும் மோதிற்று, வேறு வழியின்றி 1951ல் இந்து மகாசபை ஆலோசனையில் பாரதீய ஜனசங்கம் என ஒரு கட்சி தொடங்கினார்
அது அப்போது தேர்தலில் போட்டியிட்டு 3 இடம் வென்றது, அதில் ஒருவர்தான் ஷியாமா பிரசாத் முகர்ஜி
அம்பேத்கருக்கு நேரு தேர்தல் வாய்ப்பினை மறுத்தபொழுது இந்த ஜனசங்கம்தான் அவரை மேல்சபையில் அமரவைத்து சமூக நீதி காத்தது
அப்படிபட்ட ஜனசங்கம் இந்துக்களுக்கான எல்லா உரிமைகளையும் மெல்ல மெல்ல கோரிற்று, அப்படியே தேச ஒற்றுமைக்கும் பாடுபட்டது
காஷ்மீரை இந்தியாவின் பாகமாக அல்லாமல் அது தனி ஆளுகையாக நேரு அறிவித்தது தேசாபிமானிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது
காஷ்மீர் மாநில அரசிற்கு தனிக் கொடி, தனிச் சின்னம், தனி பிரதம மந்திரி இருப்பதை முகர்ஜி கடுமையாக எதிர்த்தார். ஒரு நாட்டில் இரண்டு அரசியல் அமைப்பு சட்டமும், தேசிய சின்னமும் இருக்க இயலாது என அவர் முழங்கியதில் அர்த்தம் இருந்தது
அப்பொழுது காஷ்மீர் அரச அனுமதியின்றி யாரும் நுழையமுடியாது, இந்தியாவின் அங்கமான காஷ்மீருக்குள் இந்தியரே நுழையமுடியாது என்பதை மிக கடுமையா ஜனசங்கம் எதிர்த்தது, முகர்ஜி தடையினை மீறி காஷ்மீருக்குள் செல்ல போராட்டத்தை தொடக்கினார்
அப்படி நுழையும்பொழுது காஷ்மீரில் உள்ள லக்கன்பூர் என்ற ஊரில் நுழைந்த சியாமா பிரசாத் முகர்ஜியை, ஜம்மு காஷ்மீர் மாநில காவல் துறை 11 மே 1953இல் கைது செய்தது.
இதே ஜூன் 23ம் நாளில், 1953இல் காய்ச்சலால் சிறையில் அவர் மரணமடைந்தார் என காவல் துறை அறிவித்தது
தேசம் கொந்தளித்தது, அவர் சாவில் மர்மம் இருந்ததை எல்லோராலும் அறிய முடிந்தது, காய்ச்சலில் இருந்தவரை மருத்துவமனையில் சேர்க்காமல் மருத்துவ அறிக்கை இல்லாமல் இறந்ததாக சொன்னது பொய் என கலவர சூழல் உருவாயிற்று
அவர் மரணம் பற்றி விசாரிக்க ஒரு ஆணையம் அமைக்கபட வேண்டும் என்பதையும் நேரு மறுத்தார், கடைசிவரை பிரசாத் முகர்ஜியின் மரணம் மர்மமாய் இருக்கவேண்டும் என அவர் விரும்பியதை நடத்தியும் காட்டினார்
இன்றுவரை அவர் மரணம் மர்மமே
அவரின் மரணம் மர்மமாக இருந்தாலும் அவர் ஏற்றிவைத்த நெருப்பு அணையவில்லை, அதனை வாஜ்பாய் போன்றவர்கள் வங்கத்தில் இருந்து வந்து முன்னெடுத்தனர்
பாரதீய ஜனசங்கம் நாட்டின் பாதுகாப்பையும் நலனையும் விட்டுகொடுக்காமல் தொடர்ந்து போராடியது, எவ்வளவோ சாவுகள், கொலைகள், அடக்குமுறைகள், மிரட்டல்களுக்கு இடையிலும் அது போராடி வளர்ந்தது
நேரு, இந்திரா என பிரமாண்ட பிம்பங்கள் செய்த தவறுகளையும் இந்து துவேஷங்களையும் சுட்டிகாட்டி போராடி அது வியாபித்தது
1980களில் அது பாரதீய ஜனதா கட்சியாக பரிணமித்தது
1997ல் கூட்டணியுடனும், 2014ல் அசுர பலத்துடனும் ஆட்சிக்கு வந்து இன்று எதிரிகளே இல்லா பிரமாண்ட கட்சியாக நிற்கின்றது
அக்கட்சியின் நிறுவணர் இந்த ஷியாமா பிரசாத் முகர்ஜி
அவர் கண்ட கனவுபடிதான் மோடி அரசு காஷ்மீரின் சிறப்பு சட்டத்தை ரத்து செய்தது,அவர் கனவுபடிதான் மோடியின் ஆட்சியில் ஒரே தேசமாக இந்தியா எழும்பி ஒளிவீசுகின்றது
புதிய இந்தியாவுக்கு அடிதளமிட்டு, வலுவான ஒரே இந்தியா உருவாக தன் உயிரையும் கொடுத்து, இன்று தேசாபிமான கட்சியில் தேசம் பாதுகாப்பாக நிலைக்க வழிசெய்த “பாரத தேசத்தின் அடிக்கல்” ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு இன்று நினைவுநாள்
இதே நாளில்தான் காஷ்மீர் இந்தியாவின் அங்கம் என சொல்லி அவர் செத்தார், மர்மமாக செத்தார்
அன்று அவரின் சாவு எளிதில் கடந்து செல்லபட்டது, நேரு எனும் பிரமாண்ட பிம்பத்தை எதிர்க்கவோ உண்மை சொல்லவோ யாருமில்லை
தேசத்துக்கும் இந்துக்களுக்கும் துரோகம் ஒன்றையே செய்த காங்கிரஸ் தன் பிரமாண்ட பலத்தால் இந்திய வரலாற்றில் கொடும் பக்கங்களை எளிதாக கடந்தது
உலகில் நடந்த கலவரங்களிலே மிக பெரிதானதும், 19ம் நூற்றாண்டின் உலகின் மிகபெரிய படுகொலைகளான இந்து படுகொலைகளையும் அது மறைத்து வைத்தது
காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி எனசொல்லி அங்குசெல்ல முயன்ற முகர்ஜியின் மர்ம மரணத்தை கூட அது எளிதாக கடந்தது
ஆனால் சத்தியத்தையும் உண்மையினையும் தேசாபிமானிகளின் ஆன்ம பலத்தையும் அதனால் கடக்க முடியவில்லை
சத்தியத்தின் தராசில் காங்கிரஸ் மெல்ல மெல்ல கரைந்து முள் பாரதீய ஜனதா பக்கம் சரிந்தது, அந்த நியாயத்தில் இன்று காஷ்மீருடனும் இந்துக்களுக்கான விழிப்புடனும் தேசம் உலக அரங்கில் முன்னால் நிற்கின்றது
இந்தியாவின் இந்த பலமான அடிக்கல்லாக தன்னையே புதைத்தவர் அந்த முகர்ஜி, தன்னை எரித்து தேச விளக்கு ஏற்றியவர் அந்த உத்தமர் முகர்ஜி
தேசத்தின் அஸ்திபாரம் என கொண்டாடும் அவரின் நினைவுநாளில் இந்நாடு எக்காலமும் ஒரே தேசமாக வலுவான தேசமாக நிற்க தேசாபிமானிகள் தலமையில் நல்லோரெல்லாம் உறுதியேற்று கொண்டிருக்கின்றார்கள்
ஜெய் ஹிந்த், பாரத மாதாவுக்கு ஜே..