சிரியாவில் இவ்வளவு சாவு நடக்கின்றதே, ஐ.நா என்ன கிழித்தது?
சிரியாவில் இவ்வளவு சாவு நடக்கின்றதே, ஏன் ஒருவரும் கண்டுகொள்ளவில்லை, ஐ.நா என்ன கிழித்தது என ஆளாளுக்கு கேட்கின்றார்கள்
ஐ.நா என்று கிழித்தது? அது அமெரிக்க அடிமை
உலகில் பல நாடுகள் உள்நாட்டு சண்டையால் அழிகின்றன, சில இனங்கள் கேட்பாரற்று நசுக்கபடுகின்றன
இலங்கையில் அது தொடங்கியபொழுது கேட்பார் யாருமில்லை, 1983ல் கொழும்பு பற்றி எரிந்தபொழுது எந்த நாடு கண்டித்தது? ஒரு நாடுமில்லை
இந்தியாதான் களமிறங்கி அந்த கலவரத்தை நிறுத்திற்று , அன்றைய அமைச்சர் நரசிம்மராவ் நேரடியாக சென்று எச்சரித்தார்
பின் போராளிகளுக்கு பயிற்சியும் இந்தியா அளித்தது
இதோ சிரிய அரசை எதிர்த்து 12 இயக்கம் களத்தில் நிற்கின்றது, உருவாக்கியது யார் சாட்சாத அமெரிக்கா.
ஏன் 12 குழு? அதுதான் தந்திரம் பல குழுக்கள் இருந்தால்தான் எதிரி திணறுவான்
காஷ்மீருக்குள் பாகிஸ்தான் அனுப்பும் குழு எத்தனை வகை? காரணம் இதுதான்
இந்தியா இதே திட்டத்தில் இலங்கைக்கு அனுப்ப, பிரபாகரனோ சக இயக்கத்தை கொன்றார், ஏனென்றால் போராட்டம் திசை திரும்புமாம், சொல்லிவிட்டு இந்தியாவினையும் பகைத்தார்
அதன் பின் என்னாயிற்று? 4 குழுக்களை சந்திக்க சிரமபட்ட சிங்களம் , ஒரே குழுவாக புலிகள் சிக்கிய பின் அழகாக சுற்றி வளைத்தது
வடமாராட்சியில் புலிதலைவர் பல்லாயிரம் மக்களோடு சிக்க, ராஜிவ் களம்புகுந்தார்.
பல ஆயிரம் மக்கள் உணவின்றி வாட உலகின் எதிர்ப்பை மீறி, ஐ.நா அனுமதியின்றி இலங்கையில் உணவுபொருள் வீசினார் ராஜிவ், மகா துணிச்சலான விஷயம் அது
புலிகள் ஒருநாளும் வெற்றிபெறமாட்டார்கள், இந்தியாவன்றி ஈழமக்களை காக்க யாருமில்லை என்ற செய்தியினை ராஜிவின் செயல் செய்தது
அந்நேரம் அமெரிக்க படைகளை கேட்க தயாராக இருந்தான் சிங்களன், இந்தியா சமயம் பார்த்து புகுந்து தடுத்தது
பின் என்னாயிற்று அமைதிபடையோடும் மோதி அடுத்த தவறை செய்தனர் புலிகள். அத்தோடு ராஜிவ் கொலையும் நடந்தது
அதுதான் முள்ளிவாய்க்கால் அழிவின் தொடக்கம்
இதோ சிரியாவில் ஒரு இயக்கம் சக இயக்கத்தை கொன்று, என்நாட்டு போரில் நீ ஏன் வந்தாய் என டிரம்பிற்கு ஒரு குண்டும், புட்டீனுக்கு ஒரு குண்டும் அனுப்பினால் என்னாகும்?
அதன் பின் அந்த சனியனை யார் அடித்தாலும், மிதித்தாலும், துண்டு துண்டாய் வெட்டினாலும் உலகம் கண்டுகொள்ளுமா? நிச்சயம் இல்லை சனியன் ஒழியட்டும் என அமைதியாகும்
இதுதான் முள்ளிவாய்க்காலில் நடந்தது. இதனை சொன்னாலும் புரியாமல் இனம், வீரம், கலைஞர் துரோகி என சொல்லிகொண்டே இருப்பவனை ஒரு நாளும் திருத்த முடியாது.