சிரியாவில் நடப்பது…
ஏதாவது செய்ய வேண்டும், 4 பேரை கொல்லாவிட்டால் என்ன அமெரிக்க ஜனாதிபதி எனும் வெறியில் இருந்த டிரம்ப் சிரியாவில் செய்துவிட்டார்
ஏவுகனைகளை சிரியா மீது ஏவி பலரை கொன்றது மூலம் சர்ச்சையினை தொடங்கிவிட்டார், ஒரு இறையாண்மை உள்ள நாட்டின் மீது, போர் அறிவிக்காமல் திடீரென தாக்குவது சர்வதேச அடாவடிதனம், சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது
ரஷ்யாவின் எதிர்ப்பினை சமாளிக்கும் விதமாக டிரம்ப், இது விஷயாவு தாக்குதலால் தான் செய்ய நேர்ந்தது, ஆக தவறல்ல என சொல்ல, அவரின் அடிப்பொடிகளான ஐரோப்பிய தேசங்கள் ஆமாம் சொல்கின்றன
ரஷ்யாவும் ஈரானும் விடுவதாக இல்லை, சிரியாவில் ரஷ்ய படைதளமும், கப்பற்படைதளமும் உண்டு
நிலமை எல்லை மீறி செல்லலாம்
டிரம்ப் ஏதோ செய்ய போய், அது எங்கோ திரும்பிகொண்டிருக்கின்றது , போராக கூட வெடிக்கலாம்
சிரியாவில் அரசு விஷவாயு குண்டு வீசிற்றாம், அமெரிக்கா எங்கிருந்தோ காப்பாற்ற வந்து சிரியாவினை தண்டிக்கின்றதாம்
இதனை போன்ற கொடுமையினைத்தான் 2009ல் சிங்களமும் செய்தது, தடை செய்யபட்ட ஆயுதங்களை சிங்களன் பாவித்து தமிழர்களை கொன்றது உண்மை
அப்படி செய்யும்பொழுது, அங்கிருந்து 40 மைல் தொலைவில் இருந்த அமெரிக்க போர்கப்பல் பார்த்துகொண்டுதான் இருந்தது
கொழும்பின் மீதெல்லாம் ஏவுகனை வீசவில்லை
ஏன் என்றால் அதுதான் சர்வதேச அரசியல், யார் சாகவேண்டும்? யார் சாவினை அரசியலாக்க வேண்டும்?, அதில் எப்படி லாபம் பார்க்கவேண்டும் என அவர்கள் தான் முடிவு செய்வார்கள்
அது அப்படித்தான்
இப்பொழுது ரஷ்யா பெரும் கோபத்துடன் சம்பிரதாயத்திற்கு ஐநா சபை செல்கின்றது, நிச்சயம் அது பெரும் திட்டம் வகுத்திருக்கும்
விரைவில் அது தெரியவரலாம்…
அமெரிக்க ஏவுகனைகள் அத்துமீறி சிரியாவினை அடாவடியாக தாக்கும்பொழுது, ரஷ்ய ஈரானிய ஏவுகனைகள் ஏதாவது ஒரு நாட்டை தாக்கமலா போய்விடும்?