சிரியா அதிபர் விமானத்தை ஓட்ட ஒரு தமிழனை நியமித்தார்
இந்த தும்பிகளும், மங்கிகளும் கொஞ்சமும் அறிவில்லாதவை என தெரியும், இல்லாவிட்டால் அவை சைமன் பின்னால் எல்லாம் அலையாது
ஆனால் அடிப்படை அறிவு கூட இல்லாதவை என்பதும், யார் எது சொன்னாலும் கொஞ்சமும் யோசிக்காமல் அப்படியே நம்பி, அதையே ஊரெல்லாம் சொல்லி திரியும் கூட்டம் என்பதும், கொஞ்சமும் அவமானத்திற்கு வெட்கபடாத கூட்டம் என்பதும் இப்பொழுதுதான் தெரிந்தது
புலிகளை பற்றி அவர்கள் “ஆஆஆ ஊஊஊ” என சொல்லும்பொழுதே தெரிந்தது, இவர்களுக்கு ஒரு உண்மையும் தெரியாது என்பது. ஈழபோரை கலைஞர் நிறுத்தவில்லை என சிலர் சொன்னவுடன் இவர்கள் கலைஞரை வறுத்தெடுக்கும்பொழுதே இந்த ஆட்டுமந்தை பற்றி புரிந்தது
ஆனால் இப்படி அவமானபடும் என கொஞ்சமும் நினைக்கவில்லை
அதாவது யாரோ ஒருவர் இந்த இம்சைகளை கலாய்த்திருக்கின்றார், சிரியா கொஞ்சம் சிரிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கமுடிவு செய்தவுடன் கனடா பிரதமர் சிரியரை காக்க வந்த கடவுள் என பொங்க, அந்த யாரோ ஒரு விவரம் தெரிந்தவர்
ஆம், சிரியா அதிபர் விமானத்தை ஓட்ட ஒரு தமிழனை நியமித்தார் அவர் சிரியாவின் கிராமத்தில் விமானத்தை இறக்கி ஆயிரம் பேரை அள்ளினார், இன்னும் 25 ஆயிரம் பேரை மீட்க ‘ஏர் டைட்டானிகா” விமானத்தோடு வருகின்றார் என பதிவிட்டார், அதில் கப்பலும் விமானமும் கலந்த கற்பனை படத்தையும் பதிவிட்டிருந்தார்
உடனே தும்பிகள் பொங்கின, “ஏஏஏ தமிழன் சிரியாவினை மீட்டுவிட்டான்” என சொல்லிவிட்டு அதனை ஷேர் எல்லாம் செய்து என்னவெல்லாமோ அட்டகாசம் செய்தன
சிலர் இதனை ஆங்கிலத்திலும் சீரியசாக மொழிபெயர்க்க உலகமெல்லாம் வாய்விட்டு சிரித்தது
நடந்தது என்ன?
சிரியாவிற்கு படையினை அனுப்பிய நாடு கனடா, அவர்கள் ராணுவமும் களத்தில் உண்டு. சிரிய மக்களும் சவுதி, ஈரான் எல்லாம் அகதிகளாக செல்லமாட்டார்கல். ஐரோப்பா தான் செல்வொம் என அடம்பிடிப்பார்கள். ஐரோப்பிய நாடுகள் எல்லையினை அடைத்தாயிற்று
இதனால் கனடா கொஞ்சம் மக்களை ஏற்பதாக அறிவித்தது, ஏன் என்றால் அதுதான் அரசியல். ஒரு நாட்டின் மக்கள் தங்கள் நாட்டில் அகதிகளாக இருந்தால் அதை வைத்து சம்பந்தபட்ட நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடலாம், ஆட்டலாம்
முன்பு வங்கதேசம், ஈழம் போன்ற நாடுகளில் எல்லாம் இதனையே செய்தது இந்தியா. எல்லா பொதுநலத்திலும் சுயநலமும் உண்டு
இப்பொழுது கனடா 25 ஆயிரம் சிரிய மக்களை ஏற்றுகொள்ள முடிவு செய்தது, 180 பேர் கன்டா ராணுவ விமானம் மூலம் கனடா சென்றனர், இன்னும் 24, 800 பேர் படிபடியாக செல்வார்கள்
இதுதான் விஷயம், இதனை ஒருவர் கலாய்த்து எழுதியதை தும்பிகள் தமிழனின் திறமை பாரீர் என சீரியசாக உலகெல்லாம் சொல்லி திரிந்ததுதான் காமெடி
முதலில் “ஏர் டைட்டானிக்கா” என்றொரு விமானமே கிடையாது, சும்மா சொன்னவுடன் இவர்கள் நம்பியது காமெடி ரகம்
அதைவிட கொடுமை அவ்விமானத்தில் 25 ஆயிரம் பேரை கொண்டு செல்ல போகின்றார்கள் என்பது, இவ்வகை விமானங்கலில் ரஷ்யாவிடம் இருக்கும் அனடாவ் ரக விமானம் பெரிது, அதுவே ஆயிரம் பேருக்கு மேல் கொண்டு செல்ல முடியாது
உலக நிலவரம் இப்படி இருக்க, சிரியாவில் சிறிய ரக ராணுவ விமானங்களை தவிர ஏதும் பறக்கமுடியா நிலையில் இருக்க , ஒரு தமிழன் ஏர் டைட்டானிக்கா ஒட்டி வந்தானாம், நடு ரோட்டில் இறக்கி கனடா, கனடா என டவுன்பஸ் கண்டெக்டர் போல கத்தினானாம், உடனே சிரியர்கள் ஏறினார்களாம் அவன் சட்டென்று கிளம்பி கனடா சென்றானாம்
கனடா பிரதமர் பாராட்டினாராம்
இப்படி காமெடி கதைகளையே சீரியசாக பரப்பும் கும்பல், ஈழ விவகாரங்களை எப்படி எல்லாம் நம்பிகொண்டிருக்கும்.
விஷயம் உலகெல்லாம் சந்தி சிரிக்க ஆரம்பித்துவிட்டதால் அங்கிள் சைமன் அமைதி, இல்லாவிட்டால் “என் அண்ணன் பிரபாகரன் அந்த விமானத்தில்தான் இருந்தான், இப்படி 50 ஆயிரம்பேரோடு கொழும்பில் வந்து இறங்குவான், அன்று நாமும் படையோடு கச்சதீவு கடந்து போவோம்..” என பேச ஆரம்பித்திருப்பார்.
உவரி புனித அந்தோணியார் ஆலயம் எதிரே கப்பல்மேல் விமானம் நிற்பது போல் ஒரு கட்டடம் உண்டு. அதை படமெடுத்து இதுதான் சிரிய மக்களை காக்க தமிழர்கள் அனுப்பும் கப்பலும் விமானமும் என சொன்னால் அதனையும் “தமிழனின் பெருமை பாரீர்” என சொல்ல ஒரு கூட்டம் இருக்கும் போல..
இவர்கள் இருக்கும்வரை சைமனுக்கு எப்படி அரசியல் ஆசை விடும்? விடவே விடாது.
போர் என்றால் என்ன? மக்கள் அழிவு என்றால் என்ன? அகதிகள் என்றால் என்ன? போர் விமானம் என்றால் என்ன? மீட்பு விமானம் என்றால் என்ன? அதன அளவு என்ன என கொஞ்சம் கூட தெரியா இக்கூட்டம்தான் ஈழப்போர் பற்றியும் காங்கிரசும் கலைஞரும் ஈழதமிழரை அழித்தனர் எனவும் சொல்லிகொண்டிருந்தது
அப்படியானால் உண்மை என்ன என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம்