சிரிய விவகாரத்தில் புயலுக்கு பின்னரான அமைதி

சிரிய விவகாரத்தில் இப்பொழுது புயலுக்கு பின்னரான அமைதி, இன்னொரு புயலுக்கு முந்தைய அமைதியாக நிலை கொண்டிருக்கின்றது

உண்மையில் அங்கு என்ன நடந்தது என்றால், தீவிரவாதிகளிடமிருந்து முழு சிரியாவினையும் அந்நாட்டு ராணுவம் மீட்டாயிற்று, இத்தோடு சண்டை ஓய்ந்திருக்க வேண்டும்

ஆனால் என்ன நடந்தாலும் சிரியா விவகாரம் ஓய விடமாட்டோம் எங்கள் கை அதில் இருந்துகொண்டே இருக்கும் என காட்ட வந்திருக்கின்றது அமெரிக்கா

என்ன நடந்தாலும் நாங்களும் விடுவதாக இல்லை என வரிந்து கட்டுகின்றன சிரிய‌ ஈரானிய ரஷ்ய கூட்டணி

ரஷ்ய தடுப்பு சாதனங்கள் அட்டகாசமாக செயல்படுவதை கண்டபின் அமெரிக்க தாக்குதல் நடக்கவில்லை, முன்பு ஆப்கனிலும் இராக்கிலும் நொறுக்கியது போல் சிரியாவினை நொறுக்க முடியவில்லை

இப்பொழுது ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை , ஈரான் மீது இறுக்கம் என ஆட்டத்தை மாற்றுகின்றது அமெரிக்கா

சிரியா போரையும் ஈழப்போரையும் ஒப்பிட்டால் சில விஷயம் விளங்கும்

சிரியாவில் சில இயக்கங்கள் ஆட்சி மாற்றத்திற்கும் சில இயக்கம் சிரியாவினை துண்டாடவும் போரிட்டன‌

அவை அமெரிக்காவால் தூண்டபட்டவை, இப்படித்தான் முன்பு ஈழபோராளிகளுக்கும் இந்திய ஆதரவு இருந்தது

இந்த போராளிகளை ஒரு இயக்கம் ஒழித்துவிட்டு நான் மட்டும் என வந்திருக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது, வந்திருந்தால் என்றோ சிரிய அரசு குறிப்பிட ஒரு இயக்கத்தை அழித்துவிட்டு வெற்றிபெற்றிருக்கும்

பல இயக்கம் இருந்ததாலே சிரியா இவ்வளவு சிக்கலானது

இன்றும் அரசபடைகள் வெல்லும்பொழுது அமெரிக்கா வந்து ஏதோ செய்து தன் பிடியினை இறுக்குகின்றது, இப்படித்தான் அன்று வடமராட்சியில் சிக்கிய ஈழமக்களுக்கு இந்தியா உணவு வீசி காப்பாற்றி தன் பிடியினை இறுக்கியது

இப்பொழுதுள்ள நிலையில் ஒரு சிரிய இயக்கம் “ஏய் டிரம்ப் துரோகி உனக்கு வெடிகுண்டு அனுப்புகின்றேன்றேன் என் வீரம் பார்” என அனுப்பினால் என்னாகும்?

ஏ அமெரிக்காவே சிரிய பக்கம் வராதே, எங்கள் நாட்டை நாங்கள் மீட்போம், மீறி வந்தால் உன் அதிபரை கொல்வோம் என கிளம்பியிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

எல்லா நாடுகளும் ஒரே புள்ளியில் இணைந்து போட்டு சாத்தியிருக்கும்

யார் செத்தால் என்ன என மொத்த இயக்கமும் ஒழிக்கபடாதா?

இதுதான் ஈழத்தில்நடந்தது

எந்த போராளி இயக்கமும் இன்னொரு நாட்டு உதவியின்றி வளரவோ வெற்றிபெறவோ முடியாது. உதவும் நாட்டின் சில கோரிக்கைகளுக்கு அவை கட்டுபட்டே தீரவேண்டும் அல்லது சமார்த்தியமாக கையாள வேண்டும்

அராபத் அதனை செய்தார்

அது அல்லாது வளர்த்துவிட்டவனையே கொல்வோம் என்றால் ஈழத்து கதைதான்

உலக நிலவரம் இப்படி இருக்க ஒன்றும் புரியா பதர்கள் ஈழத்தை அழித்தது கலைஞர் என சொல்லிகொண்டே இருக்கின்றன‌

செத்தாலும் அவை திருந்தாது என்பது புரிகின்றது, ஆம் திருந்த கொஞ்சமாவது மூளை வேண்டும்.