சிறையில் மயங்கி விழுந்தார் இளவரசி : செய்தி
சசிகலா உறவுகளில் தினகரனை தவிர யாரும் சசிகலாவினை சந்திக்கவில்லை, தினகரனுக்கு மட்டும் பொறுப்பு கொடுத்ததால் குடும்ப பிரச்சினை வெடித்தது, உச்சகட்ட மோதலில் குடும்பம், சிறையில் மயங்கி விழுந்தார் இளவரசி : செய்தி
இது ஒரளவு யூகிக்க கூடிய விஷயம், சிறைக்கு தினகரனை தவிர யாரும் சென்றதாக தெரியவில்லை
குறிப்பாக திவாகரன், மகாதேவன் போன்ற பூதங்களையும் இன்னும் பல பாலதுவாகரர்களையும் காணவே இல்லை
இதுதான் குடும்ப அரசியலின் சோகம், எல்லோரையும் உள்ளேவிட்டால் சிக்கல் இப்படித்தான் வெடிக்கும், எல்லோருக்கும் பதவி கொடுத்தால் கட்சி தாங்காது
ஜெயா இருக்கும் வரை, மறைமுகமாக ஆட்சி செய்யும் வரை ஒற்றுமையாக இருந்த குடும்பம், அதிகாரம் கிடைத்தவுடன் எப்படி மோதிகொள்கின்றது பார்த்தீர்களா?
கட்டுபடுத்தும் வித்தை தெரியாமல் தவித்துகொண்டிருக்கின்றார் சசிகலா
கலைஞர் எப்படி சமாளித்தார், ஸ்டாலினை மட்டும் முன்னிறுத்திவிட்டு எப்படி மற்றவர்களை ஓரம்கட்டினார் என தினகரனுக்கோ கடும் கோபம்
அந்த பொறாமையில்தான், நிம்மதியாக கட்சியில் இருக்கும் ஸ்டாலினை பார்த்து திட்டி தீர்த்துகொண்டிருக்கின்றாரோ?
இதுதான் மறைமுக அரசியலுக்கும், நேரடி அரசியலுக்கும் உள்ள வித்தியாசம்
சசிகலா கும்பல் மறைமுக அரசியலில் கை தேர்ந்தது, ஆனால் நேரடி அரசியல் அவர்களுக்கு வராது, சுட்டு போட்டாலும் வராது
கலைஞர் எல்லா வகை அரசியலிலும் கை தேர்ந்தவர், அதனால்தான் அவரால் அசால்ட்டாக தாண்டி வர முடிந்தது
ரகசியமாக சங்கரமடம் செல்லும் தினகரன், அதற்கு பதில் அப்படியே ரகசியமாக கோபாலபுரம் சென்று குடும்ப அரசியலை கட்டுபடுத்துவது எப்படி என ஆலோசனை பெற்று வரலாம்
கலைஞரை தவிர இன்றைய நிலையில் அந்த சிக்கலுக்கு அவர்களுக்கு ஆலோசனை வழங்க யாராலும் முடியாது…..