சிலரை தவிர எல்லா தலைவர்களுக்கும் வெள்ளையனுடன் ஒரு புரிதல் இருந்தது

வாஜ்பாய் வெள்ளையனிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தது உண்மையா என பலர் கேட்டுகொண்டிருக்கின்றார்கள்

ஒரு விஷயம் புரிந்துகொள்ள வேண்டும்

வெள்ளையனை தீவிரமாக எதிர்த்த போராட்டம் கட்டபொம்மனில் தொடங்கி வஉசியுடன் முடிந்தது, நேதாஜி இந்தியாவிற்கு வெளியே இருந்து போராடியவர் , இந்தியாவிற்குள் ஓலைபட்டாசு கூட வெடித்தவர் இல்லை

வெள்ளையன் யாரெல்லாம் தனக்கு நேரடி ஆபத்து என உணர்ந்தானோ அவர்களை விட்டு வைக்கவில்லை, லஜபதி ராய் முதல் பகத்சிங் வரை அப்படித்தான்

வஉசி வெள்ளையனின் அடிமடியில் கை வைத்தவர் என்பதால் செக்கிழுக்க வைக்கபட்டார்

ஆனால் காந்தியும், நேருவும் கவுரவமாக நடத்தபட்டார்கள், காரணம் என்னவென்றால் நேரடியாக தனக்கு ஆபத்து இல்லாதவர்களை வெள்ளையன் விட்டே வைத்திருந்தான்

இவர்கள் பெரும் போராட்டம் நடத்தியவர்கள் அல்ல மாறாக சட்ட மறுப்பு, சத்தியாகிரகம் , உப்பு காய்ச்சுதல் போன்ற ஒருமாதிரி போராட்டம் நடத்தினார்கள்

அதாவது வெள்ளையன் ஆள ஒத்துழைக்கவில்லையே தவிர அவன் நாட்டை விட்டு போகும் அளவு காரணங்களை இவர்கள் செய்யவில்லை

வெள்ளையனுடன் பலருக்கு புரிந்துணர்வு இருந்தது, காந்திக்கும் நேருவுக்கும் இருந்தது அப்படியே சாவர்க்கர் கோஷ்டிக்கும், வாஜ்பாய்க்கும், ஜின்னாவிற்கும் கூட இருந்தது

இன்னும் நீதிகட்சி, திராவிட தலைவர்கள் எல்லாம் சுதந்திரமே வேண்டாம் என சொல்லும் அளவு வெள்ளையனோடு நெருக்கமாக இருந்தார்கள்

காந்தியின் இந்த புரிந்துணர்வே தேசம் உடைய காரணம், அவர் கொஞ்சம் முரண்டு பிடித்திருந்தால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது

வஉசி, நேதாஜி , பாரதி , பகத்சிங் போன்ற சிலரை தவிர எல்லா தலைவர்களுக்கும் வெள்ளையனுடன் ஒரு புரிதல் இருந்தது

புலிகளுக்கும் சிங்களனுக்கும் இருந்தது போல ஒருவிதமான புரியாத போக்கு இருந்தது

இதனால் வாஜ்பாய் மட்டும் கடிதம் எழுதினார், காந்தி நேரு எல்லாம் தீரர்கள் என சொல்வதில் அர்த்தமில்லை