சிலையினை உடைத்துவிட்டால் சித்தாந்தம் வெளியேறிவிடுமா?
திரிபுராவில் பாஜக வென்றிருக்கலாம், அதற்காக லெனின் சிலையினை தகர்ப்பது எல்லாம் நியாமில்லை
சிலையினை உடைத்துவிட்டால் சித்தாந்தம் வெளியேறிவிடுமா?
எதையுமே சரியாத பின்பற்றாத இந்தியர்கள் கம்யூனிசத்தையும் சரிவர பின்பற்றாமல் இருக்கலாம், காலத்திற்கேற்ற மாற்றம் செய்யாமல் இருந்திருக்கலாம்
அதற்காக லெனின் காட்டிய வழி தவறு என எப்படி சொல்லமுடியும்?
அந்த மாமனிதனின் மானிட நேயமும், தொழிலாளர் உலகிற்கு அவர் காட்டிய வழியும் வரலாற்றில் நிற்கும்.
அக்கிரமத்தின் உச்சகட்டத்திற்கு சென்றுகொண்டிருக்கின்றார்கள் திரிபுரா பாஜகவினர்.
காவிகளுக்கு செங்கொடியின் அருமை எப்படி தெரியும்?
இந்த பாஜகவினருக்கு என்ன சிக்கல்? எதை எடுத்தாலும் இடிக்க வேண்டும் என்பது என்ன சித்தாந்தமோ?
பாபர் மசூதியினை இடிப்பார்கள், லெனின் சிலையினை இடிப்பார்கள், தமிழகத்தில் இடிக்க வேண்டிய சிலைகளை மட்டும் விட்டு விடுகின்றார்கள்.
இங்குதான் இடிக்க வேண்டிய சிலை ஏராளம் இருக்கின்றது