சிலை காக்கும் அதிகாரி பொன் மாணிக்கவேல்
ஒவ்வொரு இனத்திற்கும் தனிபெரும் அரசன் என்றொருவன் இருப்பான், அம்மக்கள் அவனை அப்படி கொண்டாடுவார்கள், அவன் சம்பந்தமான பொருட்களை கண் போல் பாதுகாப்பார்கள்
காலம் மாறினாலும், அந்நாடு வீழ்ச்சி அடைந்தாலும் அந்த பெருமையின் அடையாளத்தை அழியவிடமாட்டார்கள்
அரசன் அடையாளம் என்று அல்ல, தங்கள் வரலாற்று சின்னங்களை எல்லாம் அப்படி பாதுகாப்பார்கள்
தமிழருக்கு ராஜராஜசோழன் மாபெரும் அடையாளம், சந்தேகமில்லை அவன் காலத்தில் அவன் தென்கிழக்கு ஆசியாவின் ஒரே மன்னன். அரசனுக்கெல்லாம் அரசன்
தஞ்சை தரணி அவனால் பெரும்புகழ் பெற்றது. அவனின் கற்கோவில் உலக அதிசயமானது
அப்படிபட்ட அந்த ராஜராஜனின் ஐம்பொன் சிலை 60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனது
அவனின் சிலை என்றல்ல, அக்கால மன்னரும் சிற்பிகளும் அரும்பாடுபட்டு உருவாக்கிய அழகு சிலைகள் பெரும்பாலும் கடத்தபட்டன
எப்படி வந்தது இந்நிலை ?
ஆலயங்கள் அக்காலத்தின் மன்னர்கள் அல்லது ஜமீன்களின் கட்டுபாட்டில் இருந்தவரை அவற்றின் பாதுகாப்பும் பராமரிப்பும் மிகசரியாக இருந்தன
ஆனால் மக்களாட்சியில் அது சாத்தியமின்றி போயிற்று, போதாகுறைக்கு நாத்திகவாதம் வேறு ஆலயங்களின் எதிர்காலத்தை கேள்வி கேட்டது
சிலைகளை உடைத்து ரோடுபோடுவோம் என்று முழங்கினார்களே தவிர, அதனை செய்ய எவ்வளவு கஷ்டம் என்பதையோ, இனி அப்படி செதுக்கவே முடியாது என்பதையோ உணரவில்லை
அச்சிலையின் அருமை தெரியவில்லை மாறாக அதன் அருகே நின்ற பிராமணுக்காக சிலையினை மறந்தார்கள், அக்கலையினை கண்டுகொள்ள மறுத்தார்கள்
ஆனால் அச்சிலைகளின் அருமையும், பெருமையும் வெள்ளையனுக்கு தெரிந்தது
வெள்ளையனிடம் ஏராளமான பணமும் நவீன ஆயுதமும் உண்டே தவிர, தொன்மை என்பது இல்லை. பழம் பொருள் என எதுவுமில்லை
கல்லை செதுக்க கூட அவனால் முடியும், ஆனால் காலப்பழமை கிடைக்குமா? நடக்குமா?
அந்த பழம்காலம் என்ற அடையாளம் அவனிடம் இல்லை, இதனால் அக்காலத்திலே கல்லிலே அல்லது ஐம்பொன்னிலே கலைவண்ணம் கண்ட தமிழரின் சிலை பெருமை அவனுக்கு தெரிந்தது
சில்லறைகளை தட்டிவிட்டு எத்தனை கோடி கொடுத்தும் வாங்கிகொள்ள துடித்தான், விளைவு இங்கு சிலை கடத்தல் ஆரம்பமானது
தன் வரலாற்றை கொஞ்சமும் நினைத்துபார்க்காத , தன் முன்னோர்கள் வரலாற்றை அறவே நினையாத இனம் தமிழினம், அதில் இருந்த சில்லுண்டிகள் துணை போயினர்
ஏராளமான சிலைகள் 1960ல் இருந்தே கடத்தபட்டன, இங்கு கண்டுகொள்ள யாருமில்லை. அர்ச்சகர் ஆவது எந்த சாதி என சண்டையிட்டார்களே தவிர அச்சனை சிலை என்னாயிற்று என யாரும் கேட்கவில்லை
இப்படி ஏராளமான சிலைகள் கடத்தபட்டது, அப்படி கடத்தபட்டதுதான் மாமன்னன் ராஜ ராஜன் சிலையும் அவன் மனைவி உலகமகாதேவி சிலையும்
அது எங்கிருந்தது என்றால், கடத்தியவன் குஜராத்திக்கு விற்றிருக்கின்றான் குஜராத்தி வம்சாவளி மியூசியத்திற்கு கொடுத்திருக்கின்றது
தமிழரின் தனிபெரும் அரசனின் ஐம்பெரும் சிலை, குஜராத்தில் இப்படி சிக்கி இருக்கின்றது
இங்கு திராவிட கண்மணிகளி சிமென்ட் சிலை, போராளிகள், சாதி சங்க தியாகி சிலைகள் ஊரெல்லாம் நிறுவபட அருமையான ஆலய சிற்பங்களும் சிலைகளும் காணாமலே போய்கொண்டிருந்தன
மதுரை மரகத லிங்கமும் காணாமல் போனது, பழனி நவபாஷாண சிலைக்கே சிக்கல் வந்தது
இந்நிலையில்தான் மாபெரும் திருப்பமாக சிலை கடத்தல் துறை அமைக்கபட்டு அதற்கு பொன்மாணிக்க வேல் எனும் நேர்மையான அதிகாரி தலைவராக்கபட்டார்
அவரை பற்றி நமக்கு தெரியாது, ஆனால் அவரின் பணிகள் வாழ்த்துகுரியவை, சிலை கடத்தல்களை தடுப்பது மட்டுமன்றி மீட்கவும் செய்கின்றார்
பல சிலைகள் மீட்கபட்டன, அந்த வரிசையில் இந்த ராஜராஜ சிலையும் அவரால் மீட்கபட்டன
சிலை கடத்தல் நெட்வொர்க் முதல் பல விஷயங்களை நூல்பிடித்து வெளிகொண்டு சிலைமீட்ட முதல் அதிகாரி அவர்தான்
நிச்சயம் அவர் வாழ்த்குரியவர், அவர் பணி தொடரட்டும்
அமெரிக்காவில் மட்டும் கடத்தபட்டு பிடிபட்ட தமிழக சிலைகள் ஏராளம் இருக்கின்றன, கொண்டு செல்லுங்கள் என அமெரிக்காவும் சொல்கின்றது
ஆனால் எந்த ஆலயத்தின் சிலை? அவைகள் கணக்கென்ன? எங்கு எந்த இடத்தில் இருந்தது என்ற தகவல் தமிழகத்திடம் இல்லை
இனி மீட்டு வந்தாலும் அருங்காட்சியகத்தில்தான் இருக்கும், அதற்கென்ன தாரளமாய் இருக்க்கட்டும் இல்லை ஆலயம் அமைக்கபட்டு அமர்த்தபடட்டும்
ராஜராஜசோழன் சிலை மீட்கபட்டது பெரும் மகிழ்ச்சி
உண்மையில் கோவில் என்றால் உடனே பிராமணர் ஒழிக, என்ற வறட்டு கோஷம் எழுந்தது இங்கு பெரும் சோகம்
அக்கால மக்களும் மன்னர்களும் எப்படி அரும்பாடு பட்டு இந்த ஆலயங்களை உருவாக்கி இருக்கின்றார்கள்? அதன் பிரமாண்டம் என்ன? தூண்கள் என்ன?
இனி நம் தலைமுறை தலைகீழாக நின்றாலும் அப்படி ஒரு ஆலயம் உருவாக்கமுடியும்?
மலைமீது பிரமாண்ட ஆலயம் அமைத்திருக்கின்றார்கள், நாம் ஏறி இறங்குவதற்குள்ளே முடியவில்ல்லை, எப்படி கல் மண் சுமந்தார்கள் எப்படி கட்டினார்கள்?
ஆலயங்களை விடுங்கள், அந்த தெப்பகுளங்களை நினைத்தாலே மகா ஆச்சரியம்.
வாழ்வே ஆலயபணி என அக்கால மக்கள் வாழ்ந்து உழைக்காமல் அது சாத்தியமில்லை, அப்படி உழைத்திருக்கின்றார்கள்
அந்த ஆலயங்கள் எல்லாம் தமிழரின் பெருமைகள், அழியா அடையாளங்கள். சும்மா பிராமணன், கட்டுகதை அது இது என முழுக்க புறக்கணிப்பதெல்லாம் மடத்தனம்
ராஜராஜ சோழனின் சிலை மதிப்பு 100 கோடி என்கின்றது மதிப்பீட்டு குழு. அதன் உண்மை விலை பல மடங்கு இருக்கலாம்
இனி அச்சிலை மிக கண்ணும் கருத்துமாக காக்கபட வேண்டும்
இந்த திக, பகுத்தறிவு எல்லாம் இப்பொழுது வந்து அவ்வளவு விலையா? அப்படியானால் சிலைகளை எல்லாம் விற்று மருத்துவமனை , பள்ளி எல்லாம் கட்டலாமே என்பார்கள்
அவனை எல்லாம் தெப்பகுளத்திலே மூழ்கடித்து கொல்ல வேண்டும், காரணம் இப்படி பேசிபேசித்தான் தமிழகத்தையே விற்றுவிட்டார்கள்.
இனியாவது தமிழக பொக்கிஷங்கள் மீட்கபடட்டும். அவை தமிழ் சமூகத்து கலைவடிவங்கள். ஒரு காலத்தில் இச்சமூகம் வாழ்வாங்கு வாழ்ந்தது என்பதற்கான சாட்சிகள்
பழைய மன்னர்களின் ஆர்வத்தையும், சிற்பிகளின் ஆத்மாவினையும் பொன்மாணிக்கவேல் அவர்களிடம் தமிழகம் காண்கின்றது
அவருக்கு தமிழரின் நன்றியுடைய வணக்கங்கள், தொடரட்டும் உங்கள் பணி.
(விரைவில் சாமி சிலை மீட்ட சாமி எங்கள் பழனிச்சாமி என யாராவது கிளம்புவார்கள், அரசியல் அப்படித்தான்
ஆனால் பொன்மாணிக்கவேல் அவர்களின் உழைப்பு வாழ்த்துகுரியது, தமிழக தெய்வங்கள் எல்லாம் அவரை ஆசீர்வதிக்கட்டும்)