சில நேரங்களில் பெரும் சோகம் மனதை கவ்வுகின்றது

தேர்தல் முடிவு போரடித்துவிட்டது, சுவாரஸ்யமே இல்லை. மசூசூதனன் கோஷ்டி அடிதடி செய்கின்றதாம். உண்மையில் அது பன்னீருக்கும் ஓபிஎஸ்க்கும் பாஜக‌ அடிக்க வேண்டிய அடி.

இவ்வளவு செய்தும் வெற்றிபெற முடியவில்லை என்றால் சக்தி அவ்வளவுதான்

திமுக தரப்ப்பு இன்னும் வாய்திறக்கவில்லை. ராமசந்திரன் கட்சி தொடங்கி திண்டுக்கல்லில் வென்றபொழுது இரண்டாம் இடத்தை காமராஜர் கட்சிதான் பிடித்திருந்தது, மூன்றாம் இடமே திமுகவிற்கு இருந்தது

கலைஞர் அதிர்ந்தார் அதன் பின் என்னவெல்லாமோ செய்து கட்சியினை நிமிர்த்தினார், அதெல்லாம் இனி திரும்புமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்

நமக்கு இந்த கார்வோட்டும் கலையில் ஏக சிக்கல். உண்மையில் மாட்டுவண்டி அவ்வளவு சுகமானது எதிரில் சுவரோ, பள்ளமோ இருந்தால் மாடு அவ்வளவு சமத்தாக நடந்துகொள்ளும்

இந்த கார் எனும் எந்திரத்திற்கு ஒரு மண்ணும் தெரிவதில்லை, அதுபோக்கில் எங்கெல்லாமோ செல்கின்றது.

எதும் தெரியாமல் மிதித்துவிட்டால் சீமான் போல் கத்துகின்றது, சில நேரம் தமிழக காங்கிர்ஸ் போல் எங்கு செல்கின்றோம் என தெரியாமலே செல்கின்றது

அருகில் டிரெயினர் என இருக்கும் நபர் வேறு தமிழக பாஜகவினை மோடி பார்ப்பது போல் பார்த்து கொண்டிருக்கின்றார்

சில நேரங்களில் பெரும் சோகம் மனதை கவ்வுகின்றது,

ஆனால் இப்படி முடங்கிவிட்டால் தங்க தலைவி காருக்கு எப்படி டிரைவர் ஆக முடியும்? என்ற ஒற்றை சிந்தனையில் பாகுபலிக்கு வருவது போல‌ பெரும் பலம் வந்துவிடுகின்றது.


’மத்தியில் ஆளும் பா.ஜ.க நோட்டாவை விட குறைவான வாக்குப் பெறுவதா?’ – சுப்பிரமணியன் சுவாமி வேதனை

இவர் என்ன நேற்றுத்தான் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தாரா?

இங்கு என்றைக்கு பாஜக டெப்பாசிட் வாங்கியது? குமரி மாவட்டம் தவிர‌

ஏதோ பாஜக என்பது இங்கு ஆண்டாண்டு காலம் ஆண்ட கட்சி போலவும், இது பெரும் சறுக்கல் என்பது போலவும் வேதனைபடுகின்றாராம்

பாஜக போட்டியிட்டதே நோட்டாவுடனும், நாம் தமிழர் கட்சியுடன் தானே, இதில் இவ்வளவு கிடைத்ததே பெரிய விஷயம்

என்னாச்சி சாமிக்கு? ஒருவேளை சுயநினைவு திரும்பிவிட்டதோ?