சிவாஜி மணி மண்டப திறப்பு விழா

எகிப்தின் கர்ணல் நாசர் அவரை சிறந்த நடிகன் என்றபின்புதான் இந்தியா சிவாஜி கணேசனை நோக்கிற்று.

ராமசந்திரனுக்கு பாரத் விருது கொடுத்து அந்த விருதையே டெல்லி கேவலபடுத்தியபொழுதும், சிவாஜிக்கு ஒன்றுமில்லை

பிரான்ஸ் அரசாங்கம் செவாலியே பட்டம் கொடுத்தபின்புதான் இந்திய அரசு பால்கே விருதே வழங்கிற்று.

அந்த மனிதனுக்கு புறக்கணிப்பு என்பது அவன் வாழ்வு முழுக்க நடந்துகொண்டே இருந்தது. அவனை ஏன் அப்படி பழிதீர்த்தார்கள் என இன்றுவரை தெரியாது.

இன்று தமிழக முதல்வரும் அவர் மணி மண்டப திறப்பு விழாவிற்கு செல்லவில்லை.

இவ்வளவிற்கும் தன் வீட்டு சிலை திறப்பு விழாவில் “அண்ணை தவிர என் தாயில் சிலையினை திறக்க யாருக்கு உரிமை இருக்கின்றது?” என சொல்லி அந்த எம்ஜிஆரை அழைத்து கவுரவபடுத்தியவர் அந்த சிவாஜி

அந்த எம்ஜிஆர் வழிவந்த கட்சியின் முதல்வர்தான் இன்று சிவாஜி மணிமண்டபம் செல்ல மறுக்கின்றார்.

எல்லாம் காலம் ஆடும் விளையாட்டுகள்.