சி.சுப்பிரணியம், ப.சிதம்பரம் வரிசையில் நிதி அமைச்சரான தமிழர்

சி.சுப்பிரணியம், ப.சிதம்பரம் வரிசையில் நிதி அமைச்சரான தமிழர் எனும் பெருமையினை பெறுகின்றார் நிர்மலா சீத்தாராமன்

நிச்சயம் சவாலான பதவிதான், ஆனால் அவர் அனாசயமாக சாதிப்பார் என்பது தெரிகின்றது

ராஜாஜி, காமராஜர் போன்ற அகில இந்திய அடையாளமாக அவர் வரலாம்

இந்தியாவின் இரண்டாம் பெண் நிதியமைச்சர் என்ற பெருமையினை பெற்றுவிட்டா நிர்மலா, அவர் பாரதியின் மாநிலமான தமிழ்நாட்டுக்காரர் என்பது மகிழ்ச்சி மற்றும் நெகிழ்ச்சி

ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம், பாரதிய ஜனதா கட்சியின் தன்மையினை உணர்ந்து சொல்லலாம்

வருங்காலத்தில் தமிழர் ஒருவர் பிரதமராகும் வாய்ப்பு உண்டென்றால் அது பெண் பிரதமராக இருக்க கூடும்..

வாழ்த்துக்கள் நிர்மலா மேடம், நாடு உங்களிடம் நிறைய எதிர்பார்க்கின்றது

// பாருங்கள், வீட்டில் ஊறுகாய் தயாரித்து கொண்டிருந்த கரம் ஒன்று நாட்டுக்கே பட்ஜெட் தயாரிக்க போகின்றது

எப்படிபட்ட பெண் விடுதலை?, பெரியார் மண் இதை சாதித்தது, இது பெரியாரின் கனவு என ஒரு பயலாவது கிளம்புகின்றானா?

மாட்டான், அவனுக்கு தமிழக பெண் உயர்ந்தால் பெரியாரால் மட்டுமே உயரவேண்டும் என்ற சுயநலம் மிக அதிகம்//