சீனர்களின் சாப்ஸ் ஸ்டிக்ஸ்
செல்லும் இடங்களுக்கு இலையோடு செல்வது பழம் தமிழர் வழக்கம், இரு குச்சினை கொண்டு செல்வது சீனர்கள் வழக்கம்
குச்சிக்கும் அவர்களுக்கும் அப்படி என்ன பிடித்தமோ தெரியவில்லை, அவர்களும் குச்சி, கையிலும் இரு குச்சி. அதில் சங்கிலி போட்டு இணைத்தால் புரூஸ்லி ஸ்டைலில் சுற்றி சண்டையிடலாம்
சங்கில கழற்றபட்ட மெல்லிய குச்சி என்றால் அப்படியே விரலில் சொருகி சாப்பிட தொங்கலாம்
அவர்களோடு சாப்பிட செல்லும் இடங்களுக்கு எல்லாம் இதே இம்சை, அவர்களுக்கென்ன அவர்கள் விரலில் அந்த இரு குச்சிகளும் அமித்ஷாவும் மோடியும் போல இணைந்து சுழலுகின்றன, ஒரு பருக்கை சோறினை கூட அவர்களால் எடுக்கமுடிகின்றது.
நாட்டிய பேரொளி பத்மினியின் விரல் அபிமான முத்திரைகளை மட மட மாற்றி பிடிப்பது போல , நொடிக்குள் விரலுக்குள் குச்சி ஜாலம் செய்கின்றார்கள்.
நமது விரலிலோ அக்குச்சிகள் சசிகலா பன்னீர் போலவோ, அழகிரி ஸ்டாலின் போலவோ ஆளுக்கொரு பக்கம் செல்கின்றன, பெரிய கோழிதுண்டினை கூட கடப்பாரை கொண்டு உருட்டியது போல உருட்ட முடிகின்றதே தவிர வாய்க்கு கொண்டுவரமுடியவில்லை.
இறுக்கி பிடித்து முயற்சித்தால் பெரிய துண்டு நழுவிய வேகத்தில் குச்சி கண்ணுக்கு வருகின்றது, அது அடுத்திருப்பவர் கண்களை குறிவைப்பதும் பெரும் ஆபத்து.
தொடக்க காலத்தில் சீனர்களின் கண்களும் பெரிதாக இருந்திருக்கலாம், இந்த குச்சி குத்தி குத்தியே ஏதோ ஒரு தலைமுறையில் கண்கள் இடுங்கியிருக்கலாம்.
நாம் மெது…..வா..க தடுமாறி லோக்கல் இண்டியன் ரயில் போல சாப்பிடுவதற்குள் அவர்கள் சீன புல்லட் ரயில் வேகத்தில் முடித்துவிடுகின்றார்கள்.
தமிழர்கள் எவ்வளவு மாறிவிட்டோம், வாழை இலை என எங்காவது வெளிநாட்டில் அடம்பிடிக்கின்றோமா? கும்பா பாத்திரத்தில் பழங்கஞ்சி என் உறுஞ்சிகின்றோமா?
சமத்து தமிழர்கள் நாம், ஆனால் சீனர்கள் அப்படி அல்ல கோட் சூட் போட்டாலும் இந்த கட்டுபட்டி தனம் போகவில்லை அல்லது அவர்கள் போகவிடவில்லை.
நாம் அக்குச்சிகளை வைத்து மேஜை நடனம் ஆடும்பொழுது, மஞ்சள் நிற சீன நங்கைகளின் சிரிப்புதான் பெரும் அவமானம்.
அது கூட சிக்கலில்லை, சீன நங்கைகள் அழகு ஆனால் பற்கள் வித்தியாசமாக இருக்கும், பதிலுக்கு நாம் ஸ்நேகா ஸ்டைலில் புன்னகைத்தாலே அவமானத்தில் முகத்தை திருப்பிகொள்வார்கள்.
அல்லது நம் பெரிய கண்களை திருவிளையாடல் சிவாஜிகணேசன் போல உருட்டினால் அதோடு அழுதுவிடுவார்கள், பயந்து அல்ல. அவர்கள் கண்கள் பற்றி அவர்களுக்கே தாழ்வு மனப்பான்மை உண்டு.
ஆனாலும் நமக்கு இலையிலும் சாப்பிட தெரியும், குச்சி சாப்பாடும் சாப்பிட தெரியும் என காட்டவேண்டாமா?
என்ன ஆனாலும் சரி, வழியில் ஒரு சீன கோயில் முன்பு சபதம் எடுத்தாகிவிட்டது, நானும் அக்குச்சியினை கையாள பழகுவேன், அவர்களை போல நூடுல்ஸ் புரட்டுவேன் என குச்சி தட்டி சொல்லியாகிவிட்டது
களத்தில் இறங்கவேண்டும்
இனி அந்த குச்சிகளை வைத்து உண்ண பழக வேண்டும், சசிகலா கையில் தம்பிதுரையும் பொன்னையனும் ஆடுவது போல அக்குச்சிகளை கையாள பழக்க வேண்டும்.
டீயினை தவிர இனி எல்லா உணவுகளையும் அந்த குச்சியினாலே பொறுக்கி தின்ன பழகவேண்டும்.
அப்படி முழு பயிற்சி எழுத்துவிட்டே இனி அவர்களுடன் அடுத்த சாப்பாட்டிற்கு செல்ல வேண்டும்.
ஏய் சீன தெய்வமே , அகத்தியர், பாஹியான், யுவான் சுவாங், போதி தர்மர் கால ஒப்பந்தங்களை நினைவு கூர்ந்து இந்த இந்தியனுக்கு குச்சி அருள் புரிவாயாக..