சீனா உலகினை ஆண்டே தீருவது என முடிவெடுத்து விட்டது

No automatic alt text available.

சீனா உலகினை ஆண்டே தீருவது என முடிவெடுத்து பல காரியங்களை செய்துகொண்டிருப்பது ஒன்றும் ரகசியமல்ல, செங்கிஸ்கான், குப்ளே கான் காலங்கள் போல சீனா உலகின் மிகபெரும் சக்தியாக மாறவேண்டும், அதில் நிலைக்க வேண்டும் என மாபெரும் திட்டம் தீட்டுகின்றார்கள்

அவர்களுக்கென்ன தேர்தலா? கட்சியா? வாக்கு வங்கி அரசியலா? மதமா? சாதியா? ஒரு சிக்கலும் இல்லை, நினைத்ததை செய்யும் நிலையான அரசு அது

வல்லரசு ஆகவேண்டும் என்றால் ராணுவ ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாக வியாபார வசதிகளும் வேண்டும்

அமெரிக்கா உலகெங்கும் 200க்கு மேற்பட்ட ராணுவ முகாம்களை வைத்திருக்கின்றது என்றால் எதற்காக? எல்லாம் தங்கள் வியாபார வழிதடங்களை பாதுகாப்பதற்காக‌

சோவியத் யூனியன் இதை செய்ய தவறித்தான் தங்கள் இடத்தை இழந்தது, சீனா அதில் கவனமாக இருக்கின்றது

கடல் வழியாக உலகை இணைக்கும் முத்து மாலை திட்டம் அவர்களிடம் இருப்பது போல, நிலம் வழியாக மேற்குலகை இணைக்கும் திட்டமும் உண்டு

ரோமர் காலத்தில் எல்லா சாலையும் ரோமை நோக்கி என்றொரு பழமொழி உண்டல்லாவா, அப்படி இப்பொழுது ஆசியாவின் எல்லா சாலையும் ஷாங்காய் நோக்கி என கிளம்பி இருக்கின்றார்கள்

ஆசியாவின் எல்லா நாடுகளையும் அதன் துறைமுகங்களையும் சீனாவோடு இணைக்கும் நுட்பமான சாலை அது

One belt one road என சொல்லி அந்த மாபெரும் திட்டத்தை முன்னெடுக்கின்றார்கள், பழைய பட்டுசாலையின் நீட்சி அது

என்ன பட்டுசாலை என்றால்? செங்கிஸ்கான் காலத்திற்கு முன்பே சீனாவிலிருந்து இந்தியாவின் வடக்காக வந்து துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு செல்லும் வியாபார சாலை அது

யுவான் சுவாங், பாகியான் எல்லாம் அப்படித்தான் வந்தார்கள்

கிழக்கையும் மேற்கையும் இணைத்த சாலை அது, அலெக்ஸாண்டர் அதைத்தான் குறிவைத்து அடித்தான், கைபற்றினான்

எல்லா வல்லரசுக்களுக்கும் அன்று அதில் கண் இருந்தது, அரேபிய வியாபாரம் அதை நம்பித்தான் ஒரு காலத்தில் இருந்தது

இன்று மாறிவிட்ட காலத்தில் அதனை மீட்டெடுக்க சைனா விரும்பி காயினை நகர்த்துகின்றது, ஏற்கனவே ரஷ்யா வழியாக ஐரோப்பாவிற்கு ரயில் விட்டாயிற்று

இப்பொழுது கிர்கிஸ்தான், ஆர்மீனியா, பாகிஸ்தான் வழியாக செல்லும் சாலைகளை அமைக்க நேற்றைய ஷாங்காய் மாநாட்டில் கோரியிருக்கின்றார்கள்

எல்லா நாடுகளும் ஒப்புகொண்டிருக்கின்றன, ரஷ்யாவிற்கு சீனா முக்கிய எண்ணெய் பங்காளி என்பதால் அதை தவிர்க்க முடியவில்லை ஒப்புகொண்டாயிற்று

மற்ற நாடுகள் எல்லாம் ஆகட்டும் என ஒப்புகொள்ள, மோடி மட்டும் நாகரீகமாக எதிர்த்திருக்கின்றார், இந்திய நிலைப்பாடு அது இந்த சாலை நாளை யுத்தம் என வரும் பட்சத்தில் சீனாவிற்கு பெரும் அனுகூலமாக இருக்கும் என்பது இந்திய கணக்கு

ஏன்? யுத்தம் என வந்தால் அதே சாலையினை இந்தியா கைபற்றினால் அதே ஆபத்து சீனாவிற்கும் உண்டல்லவா என மாற்றி யோசித்தாலும், சீன பலத்தின் முன்னால் இந்தியாவிற்கு அந்த வாய்ப்பு இல்லை என இந்தியா உணர்ந்திருக்கின்றது

காஷ்மீர் வழியாக செல்லும் பாதையினை நாங்கள் எதிர்க்கின்றோம், நீங்கள் ஆப்கன் வட பகுதி வழியாக பாகிஸ்தானுக்கு சென்றால் ஆட்சேபனை இல்லை என சொல்ல்விட்டு வந்துவிட்டார் மோடி

பாகிஸ்தானின் கணக்கே இந்த சாலை வந்தால் இந்தியாவிற்கு செக் வைத்தது போல் இருக்கும் என்பதுதான், சீனாவின் வியாபார கணக்கில் ராணுவ கணக்கும் உண்டு

இந்தியா எதிர்ப்பு தெரிவித்தாகிவிட்டது, இனி என்னாகும் என்பது அடுத்தால்தான் தெரியும்

ஆயினும் செங்கிஸ்கான் காலத்திற்கு பின் உலகாள கிளம்பிவிட்டது அந்த இனம் என்பது மட்டும் உலகிற்கு தெரிய ஆரம்பித்தாயிற்று