சீனா சொல்லவரும் விஷயம் இரண்டு, அன்று மாவோ சொன்னவைதான்

அரசியல் சந்திப்புகள் நடக்கும் இடங்கள் எப்பொழுதுமே கவனிக்கபடுபவை

முன்பு அராபத் அமெரிக்காவின் கேம்ப் டேவிட் எனப்படும் இடத்தில் சந்தித்து பாலஸ்தீன பிரச்சினை பற்றி பேசுவார், கேம்ப் டேவிட் என்றால் தாவீதின் இல்லம் என பொருள்

தாவீது அரசர் யூதர்களின் ஹீரோ என்பதால் இது எங்கள் வீடு என்பது போன்ற அர்த்தத்தில் அந்த கூட்டம் நடந்தது எல்லாம் பழம் கதை

இப்பொழுது யுனான் நகரில் ஜின்பெங்கும் மோடியும் சந்திக்கின்றார்கள்

ஏன் பீஜிங்கில் மோடியினை சந்திக்காமல் யுனானில் சந்தித்தார் ஜின்பெங்

யுனான் என்பது மாவோவின் வாழ்வில் இருந்து பிரிக்கமுடியா நகரம், அவர் வெற்றிபெற்றதும் அரசியல் நடத்தியதும் மாபெரும் சக்தியாக எழும்பியதும் அங்கிருந்துதான்

தான் இன்னொரு மாவோ என்பதுபோல் அமர்ந்து பேசிகொண்டிருக்கின்றார் ஜின்பெங்

இதன் மூலம் சீனா சொல்லவரும் விஷயம் இரண்டு ,மாவோ சொன்ன விஷயங்கள்தான் அவை

முதலாவது இந்தியாவின் அக்சாய் சின் பகுதியிலிருந்து சீனா ஒருகாலமும் வெளியேறாது

இரண்டு தலாய்மாலா ஆதரவினை இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தியே ஆகவேண்டும், திபெத் விவகாரத்தில் தலையிட கூடாது, அருணாசல் பிரதேசத்தில் புத்த சாமிகள் கை ஓங்குவதை அனுமதிக்க கூடாது