சீனிவாச ராமானுஜம்
உலகின் ஒப்பற்ற கணிதமேதையான, இந்தியாவின் கணித அறிவு அடையாளமான சீனிவாச ராமானுஜத்தின் நினைவு நாள் இன்று
அவன் வரலாற்றை படியுங்கள், அவரை போல ஒரு ஏழை குடும்பத்துக்காரர் இல்லை
அவருக்கு சாப்பாட்டுக்கே வழி இல்லை. அவ்வளவு வறுமை
நிச்சயம் பெரும் படிப்புமில்லை, பிரமணாள் படித்தவர் ஆங்கில புலமை மிக்கவர் என்பதும் அவர் விஷயத்தில் பொய் அன்னார் ஆங்கிலத்தில் பெயில்
அவரின் வறுமையும் கணித ஆர்வமும் எப்படி இருந்திருக்கின்றது என்றால் இப்படி புலம்பியிருக்கின்றார்
“உணவு மட்டும் கொடுங்கள், கணித முடிவுகளை கொட்டுகின்றேன், மூன்றுவேளை உனக்குத்தான் எனக்கு சிரமம் கணிதம் அல்ல” என அவன் வெள்ளையர் முன் நின்ற வரலாறு கண்களை குளமாக்கும் காட்சிகள்
அச்செய்தி சொல்வதென்ன?
நிச்சயமாக பிராமண சூது, பிராமணன் ஆண்டான், சுரண்டினான் என்பதெல்லாம் முழுக்க ஏற்கும் விஷயம் அல்ல, அன்றே ஏழை பிராமணரும் ஏராளம் இருந்திருக்கின்றார்கள்
ராமானுஜத்தின் அறிவு அவருக்கு ஏற்றம் கொடுத்தது, அந்த திறமை அவரை வாழவைத்தது. அதே நேரம் பிராமண சமூகத்து கட்டுபெட்டிதனமும் அவரை இறுதிகாலத்தில் பாடாய் படுத்தியிருகின்றது
இந்த நாளில் வரும் சிந்தனைஇதுதான்
அந்த ஏழை ராமானுஜத்தை அடுத்தநாட்டுக்காரன் கண்டறிந்து உலகறிய செய்தான்
பிராமணரில் மகா ஏழைகள் அன்றும் இருந்திருக்கின்றார்கள், இன்றும் இருக்கின்றார்கள்
இன்றிருக்கும் ஏழை பிராமணரிலும் ராமானுஜம், விஸ்வேசரய்யர் இன்னபிற மேதைகள் ஒளிந்திருக்கலாம்
ஆனால் பிராமணன் என்ற ஒற்றை விஷயத்திற்காக வாய்ப்பு மறுக்கபட்டு அவர்களை எல்லாம் இத்தேசம் கொலை செய்துகொண்டிருக்கின்றது
அவர்களை காப்பாற்ற யாருமே இல்லை
அதில் தப்பி பிழைக்கும் சிலர் இன்றும் அதே வெள்ளையனிடம் ஓடுகின்றார்கள், அவனும் அணைத்துகொள்கின்றான்
அவர்கள் சுந்தர் பிச்சையாகவும் இன்னும் பலராகவும் உலகில் எங்கோ உயரத்தில் இருக்கின்றார்கள்
ஏழை பிராமணர் நிலை அன்றும் அப்படித்தான் இருந்திருக்கின்றது, ஆச்சரியமாக இன்றும் அப்படித்தான் இருக்கின்றது
ஆனால் பிராமணன் ஆண்டான், பிராமணன் சுரண்டுகின்றான், பார்ப்பான அதிகாரம் என்ற அரசியல் மட்டும் இங்கு ஓயவே இல்லை