சீன ராணுவமே மாறுவேடத்தில் இலங்கையில் கால்பதிக்கும் போல தெரிகின்றது

இலங்கையில் சீன முதலீடுகள் நிறைய உண்டு, இப்பொழுது குண்டுவெடிப்புக்கு பின் சீன சொத்துக்களுக்கு பாதுகாப்பு வழங்க சீன ராணுவமே மாறுவேடத்தில் இலங்கையில் கால்பதிக்கும் போல தெரிகின்றது

முன்பு இந்தியா படையினை அனுப்பியபொழுது அதை புலிகளை வைத்தே விரட்டிய இலங்கை இப்பொழுது செய்வதறியாது தவிக்கின்றது

புலிகளை ஒழிக்க சீனா ஏன் அவ்வளவு உதவியது என்பது இப்பொழுது உள்ளங்கை நெல்லிகனியாக விளங்கலாம்

சீனராணுவம் வருவதை இந்தியா விரும்பாது, அதனால் திரிகோணமலை பக்கம் இந்தியாவும் படைகளை குவிக்கலாம் என எதிர்பார்க்க படுகின்றது

இது நடக்கும் பட்சத்தில் நெல்லை மாவட்டம் ஐ.என்.எஸ் கட்டபொம்மன் கடற்படைதளம் புத்துயிர் பெறும்

1986களில் இலங்கையில் இந்தியா நிரந்தரமாக ராணுவ தளம் அமைக்கும் முடிவில் இருந்தபொழுது இந்த தளம் தொடங்கபட்டது

புலிகளின் அட்டகாசத்தால் இந்தியா வெளியேறியபொழுது அதன் முக்கியத்துவம் குறைந்தது, இனி அது அதிகமான கவனம் பெறலாம்

இனி இந்தியபடை செல்லும்பொழுது புலிகள் இல்லை என்பதால் கற்பழிப்பு படை என சொல்ல யாரும் இருக்கமாட்டார்கள் என்பது குறிப்பிடதக்கது

எனினும் அங்கிள் சைமன் கோஷ்டி இந்தியராணுவம் அங்குசென்றால் தூக்கில் தொங்குவோம் என மிரட்டலாம்

சைமன் எத்தனைமுறைதான் தூக்கில் தொங்குகின்றார்?

ஈழம் அமையவில்லை, ராஜபக்சே இன்னும் கைதாகவில்லை, இந்தியபயணிகள் கப்பல் இலங்கைக்குசெல்லுதல் என பல விவகாரங்கள் பொறுக்க முடியாமல் தூக்கில் தொங்கிய அங்கிள் சைமன் இனி இந்தியராணுவம் இலங்கைக்குசெல்வதை பொறுக்காமல் மறுபடியும் தூக்கில் தொங்குவார்….