சீன விண்வெளி நிலையம் பூமியில் விழுகின்றது .. அச்சத்தில் விஞ்ஞானிகள்

Image may contain: sky, cloud and outdoorசீன விண்வெளி நிலையம் பூமியில் விழுகின்றது அச்சத்தில் விஞ்ஞானிகள்

அதாகபடட்டது சீனாவின் டியாங்கோக் 1 எனும் விண் கலம் கட்டுபாட்டை இழந்து சுற்றுகின்றதாம் , எப்பொழுதும் பூமியில் விழலாமாம்

விண்வெளி உலகில் இது புதிதல்ல முன்பு ரஷ்யாவின் வோஸ்டாக் விண் நிலையம் ஒன்றும், அமெரிக்காவின் ஸ்கை லேப் எனும் விண் கலமும் இப்படி உலகை மிரட்டியது கொஞ்சமல்ல‌

ஆனால் ஆபத்தில்லாமல் பூமியில் விழுந்தது

சீனா விண்வெளியில் ஆதிக்கம் செலுத்துகின்றது, இந்த விண்கலத்தை அடுத்து இன்னுமோர் விண் நிலையத்தை அமைத்துவிட்டது

இந்த பழைய விண்வெளி கலத்தை கண்டுகொள்ளாமல் இருந்ததால் அது பன்னீர் செல்வம் போல ஒரு மாதிரி விண்வெளியில் சுற்றுகின்றது.

அது தங்கள் கட்டுபாட்டை முழுக்க இழந்துவிட்டதாக சீனா அறிவித்துவிட்டது.

கட்டுபாடு இல்லாத எந்த செயற்கை விண்கலமும் பூமி எல்லையில் வரும்பொழுது உள்ளே விழும்

இந்த விண்கலம் சில டன்கள் எடை கொண்டது , பூமியின் வளிமண்டபத்தில் நுழையும்பொழுது அது எரியும், பூமியினை நெருங்கும்பொழுது கிட்டதட்ட முழுக்க எரிந்திருக்கும்

ஆனால் அப்படி அல்லாமல் முழுவதுமாக எரியாமல் அது பூமியில் மோத வாய்ப்பும் இருக்கின்றது

இதுதான் இப்பொழுது கிலி கிளப்புகின்றது

எங்கே விழுமோ என பதை பதைக்கின்றார்கள்.

இந்த தமிழக அமைச்சரவை மொத்தமாக பங்கேற்கும் ராமசந்திரன் நூற்றாண்டு விழா மேடையில் அது விழுந்துவிட கூடாது என்பதுதான் நம் பிரார்த்தனை

ஆம் அங்கு விழுந்துவிடவே கூடாது, பின் தமிழ்நாட்டை வழிநடத்துவது யார்?