சீமானோடு தோளில் கைபோட்டவர் ஆட்சிதான் நடக்கின்றது?
இலங்கை அரசு தமிழக மீணவர்களை இப்பொழுது பழிவாங்கும் விதம் மிக கொடுமையானது
முன்பு எல்லை கடந்தால் சுடுவார்கள், அடிப்பார்கள் அத்தோடு விரட்டிவிடுவார்கள் அல்லது சிறையில் அடைத்து பின் விடுவிப்பார்கள்.
மோடி ஆட்சியில் துப்பாக்கி சூடு இல்லை, ஆனால் அதனை விட மிக பயங்கரமான விஷயத்தில் சிங்களம் இறங்கி இருக்கின்றது
மிகுந்த ராஜதந்திர திட்டத்தினை முன்னெடுக்கின்றார்கள், அதாவது எல்லைகடக்கும் மீணவனை கைதுசெய்து விட்டுவிடுவார்களாம், ஆனால் அவர்களின் படகுகள் இலங்கைக்கு சொந்தமாம்
சில படகுகளை கைபற்றியும் விட்டார்கள், விவகாரம் வெடிக்கின்றது, காரணம் படகுகளின் விலை மிக அதிகம். மீணவர்கள் போராட கிளம்பிவிட்டனர்
தமிழ்நாடடினை தமிழன் ஆண்டால் இந்த சிக்கல் நொடியில் தீரும் என்றனர் தமிழ்தேசிய உணர்வாளர்கள், சீமான் உட்பட
இப்பொழுது ஆட்சி யாரிடம் உள்ளது? சாட்சாத் பச்சை தமிழன் பன்னீர் செல்வம்.
அரசின் கட்டுபாடு யாரிடம் உள்ளது?, பச்சை தமிழச்சி சசிகலா
சசிகலா யாரின் கட்டுபாட்டில் இருக்க்கின்றார், தமிழன் நடராஜன் கட்டுபாட்டில்
ஆக முதல்வரும் தமிழன், ஆளும் கட்சியின் தலமையும் தமிழச்சி, அந்த தமிழச்சியின் கணவனும், மறைந்திருக்கும் சக்தியும் தமிழன்
அந்த தமிழன் காலில்தான் சீமான் திருமண கோலத்தில் விழுந்துகிடந்தார், அந்த தமிழனோடுதான் விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபம் எல்லாம் அமைத்தார்
ஆக இப்பொழுது சீமானோடு தோளில் கைபோட்டவர் ஆட்சிதான் நடக்கின்றது?
ஆனால் மீணவர் நிலை?
முன்பு சீமான் சொல்வார், தமிழன் முதல்வராக இருக்கும்பொழுது தமிழக மீணவனை கைதுசெய்தால் தமிழகத்தில் இருக்கும் சிங்களர்களை விடமாட்டோம்
சரி அவன் படகை பிடுங்குகின்றான், இங்கு சீமான் அந்த சிங்களன் வாயிலுள்ள மசால் வடையினை கூட பிடுங்கவில்லை
சரி அங்கு சிங்களன் படகினை பிடுங்கும்பொழுது, பச்சை தமிழன் முதலமைச்சர் என்ன செய்கின்றார்?
சசிகலாவிற்கு பல பேனர்களை வைத்து பூங்கொத்தோடு காத்து கிடக்கின்றார்.
காவேரி அப்படியே காய்ந்து கிடக்கின்றது.
இதற்கு தமிழன் இல்லாதோர் என சொல்லபட்டவர்களின் ஆட்சி எவ்வளவோ பரவாயில்லை