சீமான் அள்ளிவிடுவதில் ஆச்சரியமில்லை
மலேசியா, சிங்கப்பூர் அரசுகள் பொங்கலுக்கு விடுமுறை அளிக்கின்றன : கொதிக்கும் சீமான்
சீமான் அள்ளிவிடுவதில் ஆச்சரியமில்லை, அவர் அப்படித்தான்
மலேசியாவில் இந்தியர்கள் குறிப்பிட்ட இனம், மொத்த இந்தியருக்குமான விடுமுறையாக தீபாவளி அளிக்கபடுகின்றது
பத்துமலை தைபூசம் அக்கோயில் அமைந்திருக்கும் மாநில விடுமுறையே அன்றி மலேசிய தேசிய விடுமுறை அல்ல
ஆயினும் தமிழர்களுக்கான பிரதிநிதுத்தவமாக அது பார்க்கபடுகின்றது
குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாழும் சீக்கியர்கள் குருநாணக் ஜெயந்தி விடுமுறை கேட்டபொழுது மலேசிய அரசு இசையவில்லை
ஆக மொத்த மலேசிய இந்தியருக்குமான ஒரே விடுமுறை தீபாவளி மட்டுமே
இதோ அங்கிள் சைமன் பொங்கிகொண்டிருக்கின்றார், மலேசியாவில் பொங்கலுக்கு விடுமுறையாம்
எவ்வளவு பெரிய பொய் இது
முன்பு மலேசிய தமிழர்கள் அப்படி கேட்டதாக சொல்வார்கள், பல இன மக்கள் வாழும்நாட்டில் குறிப்பிட்ட இனத்திற்கு பல விடுமுறைகள் அளிக்க சட்டமில்லை, தீபாவளி தைபூசம் போதும் என சொல்லிவிட்டார்கள்
சீமான் அங்கிருந்து எப்படி அளந்துவிடுகின்றார் பார்த்தீர்களா?
ஒரு மைக் கிடைத்துவிட்டால் உலகில் உள்ள எல்லா பொய் பேசும் ஆவிகளும் அன்னாருக்குள் புகுந்துவிடுகின்றன..
பொங்கலுக்கு உலகில் எந்த நாடும் விடுமுறை அளிப்பதில்லை என்பதுதான் உண்மை.
இவரோ ஐரோப்பாவில் தேசிய விடுமுறை, கனடாவில் விடுமுறை, வெள்ளை மாளிகையினை பொங்கலுக்கு வெள்ளையடித்தவன் தமிழன் அதனால் அது வெள்ளை மாளிகை எனும் ரேஞ்சிக்கு அள்ளி விடுகின்றார்
காரணம் எல்லா நாட்டிலும் வாழும் தமிழர்களோடு, தெலுங்கர் மலையாளி, சீக்கியர், வங்காளி என கலந்தே வாழுகின்றனர்
எங்கும் எந்த நாட்டிலும் தமிழர் மட்டும் வாழவில்லை.
தீபாவளிக்கு கொடுத்தால் சிக்கல் இல்லை
பொங்கலுக்கு கொடுத்தால் ஓணம், பைசாகி, சங்கராந்தி என வருடத்தில் பாதி விடுமுறையாகவே கழிந்துவிடும்
சீமானை போல வேலை வெட்டிக்கு செல்லாமல் வாழ்த்து தெரிவித்துகொண்டே இருக்கலாம் என அந்நாடுகள் அஞ்சுகின்றன..
ஒரு காலமும் சீமான் உண்மையினை பேசபோவதில்லை என சபதம் எடுத்தால் யார் என்ன செய்ய முடியும்?