சீமான் & கோ மாற்று மின் பெருக்க கண்டுபிடிப்பு…
என்ன கஷ்டம் இருந்தாலும் வாய்விட்டு சிரிக்க வைக்கும் கலை சீமான் கோஷ்டிகளை தவிர யாருக்கும் வராது
மின்சார உற்பத்தி எப்படி என இங்கு சொல்கின்றார்கள் பாருங்கள், ஓடும் ரயிலின் இரு புறமும் காற்றாடி வைப்பார்களாம் , அதிலிருந்து மின்சாரம் தயாரிப்பார்களாம்,, அது யூனிட்டுக்கு 25 பைசா என கூவி கூவி விற்பார்களாம்
இது சாத்தியமா? இப்படி ஒரு வாய்ப்பு இருந்தால் அமெரிக்கா முதல் ஜெர்மனி வரை ஏன் வரவில்லை என்றால், அவர்கள் அறிவு அவ்வளவுதான் நாம் தமிழர்கள் என சீறுவார்கள்
சவுதியில் வெயில் அதிகம் என்பார்கள், இனி நம்பத்தான் வேண்டி இருக்கின்றது
ராட்சத காற்றாடிகளை சுழற்றி மின்சாரம் தயாரிப்பதற்கும், சைக்கிள் டைனமோவில் மின்சாரம் தயாரிப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை தெரியா இவர்களை ஒன்றும் செய்ய முடியாது
இருந்தாலும் இவர்களிடம் அவர்கள் பாணியிலே கேட்க வேண்டும், தில்லு முல்லு படத்தில் தேங்காய் சீனிவாசன் கேட்பாரல்லவா? அப்படி
“ஏன் இப்படி ரயில் ஓரத்தில் பேன் வைக்க வேண்டும், விமானம், ஹெலிகாப்டர் , ராக்கெட் பறக்கும்பொழுது அதன் அருகில் பேன் வைத்தால் நிறைய மின்சாரம் கிடைக்குமே??”