சீமான் டெல்லிக்கு செல்லவில்லை ஏன்?
டெல்லியில் விவசாயிகள் அம்மண போராட்டம்
பச்சை தலைப்பாகை, ஆற்றுக்குள் போராட்டம், கருவேலமர ஒழிப்பு என கிளம்பிய வைகோ, டெல்லியில் ஒருமுறை இந்த விவசாயிகளை பார்த்துவிட்டு சிறைக்கு ஓடிவிட்டார்..
ராஜபக்சேக்காக ராஞ்சிக்கு சென்றவர், இந்த விவசாயிகளுக்காக டெல்லியில் குட்டிகரணம் அடித்திருக்கவேண்டும், ஆனால் ஒரே முறை பார்த்துவிட்டு ஓடிவந்துவிட்டார் ஏன்?
தமிழன் எந்த மூலையில் கத்தினாலும் ஓடுவேன் எனும் சீமானும் டெல்லிக்கு செல்லவில்லை ஏன்?
ஆக இந்த போராட்டத்தின் கிளைமேக்ஸ் காட்சி பலருக்கு முன்பே தெரிந்திருக்கலாம் எனும் ஐயம் எழுகின்றது, குறிப்பாக வைகோவிற்கு
போராட்ட்டதில் தலைப்பாகை அவிழ்த்தால் தாங்கலாம், வேறு எதனையும் அவிழ்த்துவிட்டால் என்ன செய்வது எனும் பயத்தில்தான் சிறைக்குள் இருக்கின்றாரோ?
அரசியலில் கிட்டதட்ட அப்படித்தான், அதற்காக டெல்லி வீதியிலுமா என்ற ஒரு சங்கோஜம் அவருக்கும் இருக்குமல்லவா? அவரும் மனிதன் தானே..