சீமான் பல இடங்களில் பேசியது….
நாயக்கர்கள் சிங்களரோடு சேர்ந்து இலங்கையில் தமிழர்களை அழித்தார்கள் என சீமான் பல இடங்களில் பேசினார், கேட்டால் பண்டாரநாயக்கே,சேன நாயக்கே எல்லாரும் இலங்கை சிங்கள நாயக்கர் கலப்பு, அதனால்தான் அப்படி, நாயக்கன் திருப்பதி கோவிலுக்கு வருவது அப்படித்தான் என கடும் அழிச்சாட்டியம்
அங்கிளின் தம்பிகளும் ஆமாம் அப்படித்தான் என எழுப்பிய சத்தம் இன்றுவரை ஓயவில்லை, ஆனால் வரலாற்றினை புரட்டினால் நாயக்கருக்கு முன்பே தமிழ் சிங்கள உறவுகள் இருந்திருக்கின்றன
சிங்கள தமிழ் உறவுகள் என்பது விஜயன் இலங்கை தீவில் கால்வைத்த காலமுதல் உள்ளது என்பது வரலாற்று ஆய்வு.
விஜயனுக்கு பாண்டிய மன்னன் பெண்கொடுத்ததையும், அவனது வம்சத்தில் ஒரு மன்னனுக்கு “பாண்டிகபையன்” அல்லது “பாண்டி அபையன்”எனும் பெயர் வைக்கும் அளவிற்கு அவர்களுக்கு நெருக்கம்,
இன்னும் மதுரை போல அவர்கள் அப்பெயரிட்டு நிர்மானித்த நகரம் தாம் இன்றைய சிங்கள “மாத்தரை”, அவர்கள் உச்சரிப்பில் மதுரை “மாத்தற” ஆனது என்பது வரலாறு, பாண்டியர்களை போலவே அங்கும் முருகபெருமானுக்கு ஆலயம் அதிகம்.
இன்னும் பழம் தமிழர்களான மறவர்கள் பெயரும் சிங்களர் வம்சத்தில் அதிகம், உதாரணம் வேண்டுமானால் “மறவன் அட்டபட்டு” பிரபல சிங்கள கிரிக்கெட் ஆட்டக்காரார்.
இன்னும் முதலியார் போன்ற தமிழ்சாதிகளும் அங்கு கலந்துள்ளன, அதுலத் முதலி போன்ற பெயர்களும் உண்டு
சிங்கள இனவெறியனும், பெரும் கொலைகாரனுமான ஜெயவர்த்தனே தமிழக செட்டியார்கள் வம்சம் என்கின்றது ஒரு ஆய்வு
இப்படியாக பாண்டிய சிங்கள உறவும், பாண்டியர் உதவிக்கு வந்ததற்காக சோழ சிங்கள பகையும் மறக்கமுடியாதது, அக்காலத்தில் சேர,சோழ,பாண்டி மன்னர்களின் மோதல் பிரசித்தி பெற்றது.
உண்மையில் அன்று சோழர்களுக்கும் தெலுங்கர்களுக்குமான உறவு இருந்திருக்கின்றது, பாண்டியர்களுக்கும் சிங்களருக்குமான உறவு இருந்திருக்கின்றது, பின்னாளில் மதுரைக்கு நாயக்கர்கள் வர, பின் நாயக்க சிங்கள உறவும் தொடந்து வந்திருக்கின்றது.
அக்கால சிங்களர்கள் திருப்பதி போலவே தமிழக முருகன் கோயில்களுக்கும் அடிக்கடி வந்திருக்கின்றார்கள், இன்றும் ரகசியமாக வருகின்றார்கள்.
இன்று ஆந்திராவில் இருந்தாலும் திருப்பதி அன்று தமிழன் ஆலயமே, திரு எனும் வார்த்தையே தெலுங்கில் கிடையாது, அது தமிழன் பெயர், தமிழனின் ஆலயம்
மொத்தத்தில் நாயக்க வம்சம் சிங்களனிடம் உறவாடியது என்றால், அது பாண்டிய சிங்கள உறவும், சோழ பாண்டிய பகையின் தொடர்ச்சியே ஆகும். உண்மையில் சோழர்கள் தெலுங்கர்கள் உறவு பல காலம் தொடந்திருக்கின்றது.
தஞ்சை பெரிய கோயிலை காட்டி சென்று உருளும் திடீர் தமிழன் ஒருவனாவது மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் வருவானா என்றால் வரமாட்டான், இவ்வளவிற்கும் தமிழ் வளர்த்த சங்கம் இருந்தது மதுரையில் தான்.
இது இனி இப்படியே தொடருமாயின் பழைய சோழ,பாண்டிய சண்டைக்கும் சர்ச்சைக்கும் தான் இட்டு செல்லும், தமிழை நேசிப்பவர்கள் வரவேண்டிய இடம் எது? தமிழ் வாதாடிய பொற்றாமரை குள மண்டபமா? அல்லது ஈழத்தை வெற்றிகொண்ட நினைவிற்காக கட்டபட்ட தஞ்சாவூர் கோயிலா?
தமிழனின் அடையாளம் தஞ்சாவூர் மட்டுமா?
மற்றபடி சிங்களனை தெலுங்கன் கலந்து தமிழனை கொன்றான், விரட்டினான் என்பதெல்லாம் பாரதிராஜாவின் கற்பனையில் உருவாகி சீமானிடம் வடிவம் பெற்ற வார்த்தைகள்.
35 வருடங்களுக்கு முன்பு வரை இலங்கை தமிழரின் பெரும் எதிரிகளாக பெரும் கலவரத்தை நடத்தியவர்கள் ஜெயவர்த்தனேயும் அதுலத் முதலியும்
இருவருமே தமிழக வம்சாவளி என்கின்றன ஆய்வு
இவர்களை எதிர்த்த பிரபாகரனும் தமிழர்
ஆனால் சீமான் சொல்வதென்ன? தெலுங்கர்கள் சிங்களரோடு சேர்ந்து தமிழரை அழித்தனர், நாயக்கர்கள் சதி செய்தனர்
வரலாற்றை தோண்டினால் ஒரு கப்பல் நிறையத்தான் சிங்களன் இலங்கைக்கு வந்திருக்கின்றான், தமிழன் உட்பட கலந்துதான் அந்த இனம் வளர்ந்திருக்கின்றது, சிங்களனிலும் ஏகபட்ட தமிழ் கலப்பு இருக்கின்றது, அதுதான் தமிழருக்கு எதிராகவும் பல இடங்களில் திரும்பியிருக்கின்றது
இந்த உண்மை எல்லாம் அங்கிள் சொல்லவா போகின்றார்,
சீமானின் பொய்மூட்டைகளையும் அவரின் அடிப்பொடிகளின் பெரும் பொய் வீச்சுக்களையும் நம்புவீர்களானல் நிலமை இன்னும் மோசமாகும்.
அங்கிள் சைமன், இந்துக்களுக்கும் இந்தியாவிற்கும் குறிப்பாக முப்பாட்டன் முருகனுக்கும் எதிராக சகீர் நாயக் என்றொருவர் உலகெல்லாம் பேசி சர்ச்சையினை உண்டாக்கியிருக்கின்றாரே அவரும் தெலுங்கனாகத்தான் இருப்பாரோ??