சீமான் முதல்வராகட்டும் அப்புறம் உங்களுக்கு இருக்குண்ணே…

Image may contain: 2 people, people smiling

“அண்ணே பிரபாகரனை விமர்சிங்க, ஆனால் அவர் ஏன் துப்பாக்கி தூக்கினார் தெரியுமா? சிங்களன் அட்டகாசம், அதனை நீங்கள் சொல்லவே இல்லை

பிரபாகரன் மட்டும்தான் துப்பாக்கி தூக்கினாரா? வேறு எல்லோரும் வேறு எதனை தூக்கினார்கள்?

சும்மா சொல்லாதீங்கண்ணே, பிரபாகரன் மட்டும்தான் துப்பாக்கி எடுத்தார், அவருக்கு மட்டும்தான் தைரியம் இருந்தது, வேற ஒருத்தனும் எடுக்கவே இல்லை

இந்த குட்டி மணி, தங்கதுரை?

யார்ணே அது வீரப்பன் கூட இருந்தாங்களா?

சிவகுமரன்?

அவர் யார்ணே சினிமா நடிகரா?

இந்த சபாரத்னம், உமா மகேஸ்வரன், பத்மநாபா?

அப்படி யாருமே இல்லண்ணே, தைரியமாக துப்பாக்கி தூக்கிய ஒரே தமிழன் பிரபாகரன் தான்

சரி போராளிகள்தான் தெரியவில்லை, இந்த சிந்தனையாளர்கான ராஜனி, நீலன் திருச்செல்வம், அமிர்தலிங்கம் போன்றோராவது தெரியுமா?

தெரியாது

அவங்கெல்லாம் எப்படி செத்தாங்கண்ணு தெரியுமா?

போர்ல அதெல்லாம் சஜம்ணே

அடேய் அவங்க சிங்கணால் கொல்லபட்டால் நியாயம், புலிகளே கொன்றால் என்னடா நியாயம்?

அண்ணே எப்படியும் சாக போறாங்க, யார் கொன்னா என்னண்ணே விடுங்க‌ , அண்ணே நேதாஜி துப்பாக்கி தூக்கல அப்படித்தான்

அடேய் நேதாஜி நாட்டுக்கு வெளிய இருந்து போராடுனார், காந்திக்கு குண்டு அனுப்பினாரா? இல்ல ஜெர்மன் ஜப்பான் காரன்கிட்ட பகைச்சாரா? அந்த மனுஷன உங்க கூட சேர்த்து பேசினால் குரலவளைய கடிச்சிருவேன் ஓடிரு

ஹிஹிஹிஹி நான் சொல்ல வந்தது என்னண்ணா?

என்னதாண்டா சொல்ல போறே?

இருந்த ஒரே ஒருத்தர் பிரபாகரன், அவரை கைதூக்கிவிட்டது புரட்சி தலைவர்

ஓஹோ அப்புறம்?

ஈழதமிழர் நாடு அடைந்து பிரபாகரன் எனும் தமிழர் ஆண்டுவிடுவார்னு இந்தியா ஓடிபோய் தடுத்தது, இந்தியா தலையிடலண்ணா எப்பவோ நாடு கிடைச்சிருக்கும்

சரி இந்தியா எப்போ தலையிட்டது?

சரியா தெரிலண்ணே, ஆனா முழு இலங்கையும் புலிகள் பிடிச்சிருவாங்கண்ணு பயந்து ஓடி போய் தடுத்துட்டு

ஓஓ அப்படியே புலிகள் இந்தியாவினை பிடிச்சி, அப்புறம் பாகிஸ்தானை, சீனாவை எல்லாம் பிடிச்சிருவாங்கண்ணு பயந்து, அப்படித்தானே

ஆமாண்ணே அதே தான்

அடேய், ஒண்ணும் தெரியலண்ணா ஓடிப்போயிரு, வடமாராட்சில பிரபாகரனை சிங்களபடை சுற்றி முள்ளிவாய்க்கால் போல சங்கு ஊதும்போதுதாண்டா இந்தியா உள்ள போச்சுது

அதுசரிண்ணே, போய்ட்டு வந்திரவேண்டிதான, எதுக்கு அங்க அமைதிபடை போகணும்?

பின்ன, சிங்களன் போட்டு அடிக்கிறான், புலிகளால சமாளிக்க முடியல இங்க அகதிகளா மக்கள் ஓடிவாரங்க, அதனால சண்டை நிறுத்தம் செய்ய அமைதிபடை போனது

இல்லண்ணே, அது ஆக்கிரமிப்பு படை, கற்பழிப்பு படை, சாத்தானின் படை

ஏண்டா அங்க சண்டை யாருக்க்கும் ? யாருக்கும்?

சிங்களன் தமிழனை அடிச்சான், தமிழன் திருப்பி அடிச்சான் சமரசம் செய்ய இந்திய படை போனது

அப்படியானால் புலிகள் யாருக்கு துணை செய்திருக்க வேண்டும்?

இந்தியபடைக்கு

பின் ஏன் சண்டையிட்டார்கள்? அப்படி செய்திருந்தால் இந்த சர்சை எல்லாம் வந்திருக்குமா? புலிகள் இந்திய சண்டை நடந்தபின்புதான் இம்மாதிரி செய்திகள் வந்தன

ம்ம் ம்ம் இந்தியபடை அங்கேயே இருந்தா
பின் எப்படிண்ணே தனியா நாடு வாங்குறது, அதான் அடிச்சோம், மானமுள்ள இனம்ணே

ஏது இந்தியா எதிரிநாடு அதனால் உறவே கிடையாது, இந்திய ராணுவத்தோடு சண்டையிடுவோம் ஆனால் இந்தியாவின் தமிழகத்தில் ரகசியமாக வந்து போவோம், தங்கி இருப்போம் என்பதா? இதா மானம்? மானம்ணா என்னணு தெரியுமாடா? சரி, அடிச்சீங்க நாங்க வந்துட்டோம், பின் நீங்களே சிங்களன அடிச்சி நாடு பிடிச்சிருக்க வேண்டியதான, நாங்கதான் அதன்பின் அந்த பக்கமே வரலியே

அடிச்சோம்ணே, எங்க வீரவரலாறு படிங்க‌

என்னடா கிழிச்சீங்க, சந்திரிகா அடிச்ச அடியில யாழ்பாணத்த போட்டு ஓடிட்டீங்க, அதன் பின் என்றாவது அதை மீட்க முடிந்ததா?

ம்ம்ம் அது தந்திரம்ணே

மண்ணாங்கட்டி, தோற்றால் தந்திரமா? ஏதோ முழு இலங்கையும் நீங்க பிடிச்சு வைத்திருந்தது போலவும் இந்தியா வந்து கெடுத்தது போலவும் பேசிகிட்டிருக்க?

அப்படி இல்லண்ணே இந்தியா கெடுத்துட்டு, சிங்களனுக்கு ஆயுதம் எல்லாம் கொடுத்துட்டு

ஏன் நீங்களும் உலக நாடுகள்கிட்ட கேட்கலாமே, ஒரு நண்பனும் இல்லையா? சிங்களனுக்கு உலகமே கொடுக்க உங்களுக்கு ஏன் ஒரு பயலும் இல்ல?

உலகத்துக்கே எங்கள பார்த்து பொறாமைண்ணே

அட மண்டையா, சரி என்னடா செய்திருக்கணும்?

நாடு கொடுத்து பிரபாகரன அதிபர் ஆக்கிருக்கணும்

ஏன்?

அவர் துப்பாக்கி தூக்கி போராடுனார்ணே, குறிதவறாம சுட்டாரு

அவர் பாண்டிபஜார்ல குறிதவறாம சுட்டது ஊருக்கே தெரியும், ஏண்டா துப்பாக்கி தூக்கினவனுக்கு எல்லாம் நாடுண்ணா, உலகத்துல எத்தனை ஆயிரம் நாடு இருக்கும் தெரியுமா? ஆணானபட்ட அராபத்தே சுயாட்சிக்கு வந்தார், நீங்கெல்லாம் அவரை விட பெருசாடா?

அட போங்கண்ணே, எங்க வீரம் வேற அதுக்கு நாடு கொடுத்தே தீரணும்

எது பொட்டபுள்ள மேல குண்டு கட்டி அனுப்புறதா?

அது தந்திரம்ணே

ஓஹோ, அப்போ இந்தியா என்ன செய்திருக்கணும்?

அப்படி கேளுங்கண்ணே, புலிகள் இலங்கை ராணுவத்தை ஜெயிச்சா கண்டுக்காம இருக்கணும், புலிகள் தோற்றா ஓடி வந்து காப்பத்தணும்

ஆனா காப்பாத்திட்டு இந்தியா சொன்னத ஏத்துக்க மாட்டீங்க?

நாங்க ஏன் ஏத்துக்கணும், தேசிய இனம்ணே. அதனால நாங்க இந்தியா சொன்னத எல்லாம் கேட்கவே மாட்டோம், ஏன் இந்தியாவில் கொலை எல்லாம் செய்வோம், மீறி இந்திய ராணுவம் வந்தா அடிப்போம், யாரையும் கொல்வோம் அதெல்லாம் போராட்டம்ணே

ஓஹோ, பின் எப்படி இந்தியா வரும்?

வரணும்னே, எங்களுக்கு ஆபத்துண்ண வரணும் காப்பாத்தி விட்டு போய்ட்டே இருக்கணும், நாங்க என்ன செய்தாலும் கண்டுக்க கூடாது

ஒரு பெரிய நாடு ஒரு சுண்டையாய் நாட்டுல கடுகு மாதிரி இருந்த குரூப் பின்னால இப்படி போகுமாடா? போன இந்தியா எங்கயாவது தலைகாட்ட முடியுமா? பாகிஸ்தான் டெரரிஸ்ட் எல்லாம் டீ குடிக்க கூப்பிடமாட்டானா?

அண்ணே நீங்க தமிழின துரோகி, உங்கள குறிச்சி வச்சிருக்கோம், சீமான் முதல்வராகட்டும் அப்புறம் உங்களுக்கு இருக்குண்ணே”