சீமான், வைகோ போன்ற காமெடியன்கள் வரிசையில் டிடிவி தினகரன்
சீமான், வைகோ போன்ற காமெடியன்கள் வரிசையில் ஒருவர் புதிதாக இணைந்துவிட்டார், கடுமையான காமெடிகளில் அவர் இறங்கியிருக்கின்றார்
அவர் டிடிவி தினகரன்
பொதுவாக உட்கட்சி தகறாறு, கோஷ்டிகளில் குழப்பம் என்றால் பெரும் போராட்டமோ, எதிர்கட்சியுடன் போரோ செய்வது ஒருவகை அரசியல்
தினகரன் அதனை ஸ்டாலினுடன் செய்துகொண்டிருக்கின்றார், இப்படி ஸ்டாலினை சாடினால் கட்சிக்குள் அமைதி நிலவும் என்பது அவர் கணிப்பு
ஸ்டாலினை கடும் வசவுகளால் வம்புக்கு இழுக்கின்றார், அதாவது விஞ்ஞான ஊழல்வாதிகள் என சர்காரிய சொன்னவர்கள் எங்களை எங்களை எப்படி வசைபாடலாம் என்கின்றார், தங்கத்தை தகரம் எடைபோட கூடாதாம்
கலைஞர் மீதும், குடும்பத்தார் மீதும் கொலை சர்ச்சைகள் உண்டு என்றெல்லாம் கடும் சத்தம்
அவர்கள் தங்கமா? இல்லையா என்பது நமக்கு தெரியாது, ஆனால் ஜெயா வீட்டில் கைபற்றபட்ட 10 கிலோ தங்கம் கன்னட நீதிமன்றதில்தான் உள்ளது,
ஸ்டாலினிடம் தகரம்தான் இருக்கலாம்
ஆக அந்த அர்த்தத்தில் தங்கத்தை தகரம் எப்படி பேசலாம் என சொன்னாரோ என்னமோ?
கலைஞர் மீது சர்காரியா வழக்கு கூட தொடுக்க முடியாமல் ஓடினார், இன்னும் 2ஜி வழக்கில் சிபிஐயினால் ஆதாரம் சமர்பிக்கமுடியவில்லை
ஆனால் ஜெயா, சசிகலா பற்றி டெல்லி நீதிமன்றம் சொன்ன வார்த்தைகள் பெரும் அவமானமானவை
இதனை எல்லாம் எப்படித்தான் மறைத்துவிட்டு தினரகரன் பேச்கின்றாரோ தெரியாது, ஜெயாடிவி மட்டும்தான் உலகில் உண்டு என நினைக்கின்றார் போலும்
பல கொலைகுற்றச்சாட்டுகளை திமுக அள்ளிவிடுகின்றார் அன்னார், ஜெயா மர்ம சர்ச்சைகள் வரும் காலத்தில் இவர் திமுக மீது கொலை சர்ச்சை இல்லையா என்பது இவர் என்ன சொல்லவருகின்றார் என்பதை தெளிவாக தெரிகின்றது
ஸ்டாலினை வம்பு இழுத்து ஏதாவது சர்ச்சை செய்து கட்சியில் அமைதி திரும்பாதா? என அன்னார் தவிப்பது தெரிகின்றது
ஆனால் பார்ப்பவர்களுக்கு சிரிப்புதான் வருகின்றது
ஏதோ ஒருபடத்தில் செந்தில் கவுண்டமணியிடன் “என்னை அடிக்கின்றீர்களா இல்லையா? ஏய் சண்டைக்கு வா..” என ஒரு மந்திரவாதி சொல்லி வம்பிழுப்பார்
தினகரனை பார்க்கும்பொழுது அந்த செந்தில்காட்சிதான் நினைவுக்கு வருகின்றது
விரைவில் ஸ்டாலினை சந்திக்கும் இடத்தில் அவர் சட்டையினை கிழித்து வம்புக்கு இழுக்கவும் தினகரன் தயாராகிவிட்டார் என்பது தெரிகின்றது
இன்னும் நிறைய காமெடிகளை தினகரனிடமிருந்து எதிர்பார்க்கலாம்…..
இல்லையென்றால் கிலோ கணக்கான தங்கம் ஜெயா வீட்டிலிருந்து எடுக்கபட்ட தங்கம் ஏலத்திற்கு வரும் நிலையில், சசிகலா 500 கிலோ தங்கம் வாங்கினார் என சர்ச்சை வரும் நிலையில்..
நாங்கள் தங்கம், ஸ்டாலின் தகரம் என வாயினை விடுவாரா? இப்படியா உண்மையினை ஒப்புகொள்வது?
கத்துகுட்டித்தனம் என்றால் இதுதான்,
காலையில்தான் பன்னீரை ஜெயாவிடம் அறிமுகபடுத்தியது தவறு என ஏதோ ஜெயா இவர் வீட்டு வேலைக்காரி போல காமெடி செய்துகொண்டிருந்தார்
இப்பொழுது தங்கம் காமெடி, கூடவே நாங்கள் கொலைகாரர்களா? என சீற்றம் வேறு.
எப்படியோ தமிழ் அரசியல் உலகிற்கு இன்னொரு காமெடியன் கிடைத்த சந்தோஷத்தில் தமிழக அரசியல் களம் மகிழ்கின்றது