சுதந்திரத்தை எப்படி உலகிற்கு அறிவிக்க போகின்றீர்கள்?

சுதந்திரத்தை எப்படி உலகிற்கு அறிவிக்க போகின்றீர்கள்? உங்கள் நாட்டின் சம்பிரதாயம் என்ன என நேருவிடம் கேட்டார் மவுண்ட்பேட்டன்

அதாவது சம்பிரதாய சடங்குகள் ஏதும் உண்டா என்பது மவுண்ட்பேட்டனின் கேள்வி, நேருவிடம் அதற்கு பதில் இல்லை அவர் ஆத்திகர்

ஆத்திகராயினும் பெரும்பான்மை மக்களின் மனம் புண்படாவண்ணம் ஏதும் செய்தாக வேண்டும், காந்தி வேறு ஒரு மாதிரி என எண்ணிய நேரு ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டார்

ராஜாஜி தேர்ந்த சாஸ்திர ஞானி என்பதால் சட்டென சொன்னார், தமிழக வழக்கபடி ஆட்சிமாற்றத்தின் பொழுது ராஜகுரு செங்கோலை புதிய அரசனிடம் கொடுப்பது வழக்கம் அப்படி செய்துவிடலாம் என்றார்

ஆனால் ராஜகுருவுக்கு யாரை பிடிப்பது என்ற கேள்விக்கு அன்று ஆதீனங்களில் மிக பெரும் ஆதீனமான திருவாடுதுறை சன்னிதானத்தை தொடர்பு கொண்டார் ராஜாஜி

அந்த ஆதீனமும் செங்கோல் தயாரித்து இளையசன்னிதானம் பண்டாரசுவாமிகளும் இன்னும் ஓதுவார் மூவரோடும் டெல்லிக்கு அனுப்பியது

அந்த வைபவத்தில் மவுண்ட்பேட்டனிடம் இருந்து செங்கோலை பெற்றார் தமிழத்து திருவாடுதுறை ஆதீனத்தின் இளைய சன்னிதானம் பண்டாரசுவாமிகள்

பின் அதற்கு தீர்த்தம் தெளித்தார், பின்பு அந்த திருச்சிறம்பல பாடல் பாடபட்டது

“வேயுறு தோளிபங்கன்…” என தொடங்கி 11 பாடல் பாடபட்டு “ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே” என முடியும் அந்த திருச்சிறம்பல பாடல் பாடபட்டது.

அந்த “அரசாள்வர் ஆணை நமதே” என்ற வரி முடிந்ததும் செங்கோல் ஆதீனத்தால் நேருவிடம் ஒப்படைக்கபட்டது

சுதந்திர போராட்டத்தில் மட்டுமல்ல, சுதந்திரம் பெறும்பொழுதும் தமிழகத்தாரின் பங்கே பிரதானமாக இருந்தது

இந்த இடத்தில் ராஜாஜி பார்ப்பான்,நேரு பார்ப்பான் என கிளம்பினால் அவர்களுக்கு சொல்லி கொள்வது ஒன்றுதான்

திருவாடுதுறை ஆதீனம் பார்ப்பன மடமும் கிடையாது, அந்த பண்டாரசுவாமிகள் பார்ப்பணனும் இல்லை

மதநெறியில் மூத்தவர்கள் என்ற முறையிலும், அனுதினமும் வழிபாடு செய்து வாழும் தவமுனிவர்கள் என்ற வகையிலே அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டார்கள்

இன்னொன்றை கவனியுங்கள்

நாத்திகராயினும் இந்நாட்டு அரசியல் மாற்றம் இந்து நெறியில் நிகழ நேரு விரும்பியிருக்கின்றார்

ஆக நேரு எது செய்தாலும் சரி, இதுவே பாஜக கோஷ்டி செய்திருந்தால் அய்யகோ மதவாதம் பார்ப்பானியம் என கிளம்பியிருப்பார்கள்

அதை விடுங்கள்

இந்திய வரலாற்றின் மகா முக்கியமான தருணத்தில் மிக முக்கிய நிகழ்வினை ஆற்றியது தமிழகத்தார் என்பதும் இந்த மாபெரும் நாட்டின் ஆட்சிமாற்றத்தை செங்கோல் பிடித்து நடத்தி கொடுத்தது தமிழக திருவாடுதுறை ஆதீனம் என்பதும் ஒவ்வொரு தமிழனும் பெருமைபட வேண்டிய விஷயங்கள்…

(செங்கோலை சுவாமி நேருவிடம் கொடுத்தது இன்றும் படமாக ஆதீனத்தில் உண்டு

தொப்பி இல்லாத நேருவினை பார்த்து அய்யய்யோ இது ராஜாஜி என கத்தினால் அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது)