சுதந்திர இந்தியாவில் “திருப்பூர் குமரன்” ….

https://youtu.be/4LhdzO6LJRc

கொஞ்சம் ஓங்கி அடித்திருந்தால், சுதந்திர இந்தியாவில் “திருப்பூர் குமரன்..” வரலாறு திரும்பியிருக்கும்

மதுகடை வேண்டாம் என கூக்குரலிடுபவர் ஒரு பெண், இந்திய சட்டபடி பெண்ணை பெண் காவலர்களை கொண்டுதான் கையாள வேண்டும், இந்த அதிகாரி அதனையும் செய்யவில்லை

அவர் பேசி பார்த்ததாக தெரியவில்லை, ஏதோ சாலையோரம் ஒரு விலங்கு நிற்பதை போலவும், அதற்கு சொன்னால் புரியாது என்பது போலவும் அடியில் இறங்கியிருக்கின்றார்

அப்படி அந்த பெண்கள் நகர மறுத்தால் பெண் காவலர் உதவியுடன் நகர்த்தலாம், கைது செய்யலாம், அதனை விட்டு மிருகத்தனமாக அடிப்பது எல்லாம் ஏற்றுகொள்ளமுடியாதது, இது அப்பட்டமான சட்ட மீறல்.

நம் வீட்டு பெண்ணை இப்படி ஒரு அதிகாரி அடித்தால் விடுவோமா? மனம் எப்படி பதறும், அப்படி இந்த காட்சிகளை கடந்து செல்ல முடியவில்லை

அந்த சகோதரிக்கு நியாயம் கிடைத்தே தீரவேண்டும், இல்லாவிட்டால் அதிலே தப்பிவிட்டோம் என்ற தைரியத்தில் மிருகதனமான அடிகள் இன்னும் பல சகோதரிகள் மீது விழலாம்

ஆர்,கே நகரில் வோட்டுக்கு பணம் கொடுத்தாலோ, இல்லை அந்நிய தீவிரவாதிகளுக்கு கொடிபிடித்தாலோ அடிக்க வேண்டிய அடியினை மதுக்கடை வேண்டாம் என சொல்லும் பெண்கள் மீது அடிக்கவேண்டிய அவசியம் என்ன?

காவல்துறையினர் மீது எப்பொழுதும் எல்லோருக்கும் மரியாதை உண்டு, அரசியலை தாண்டி அவர்கள் மீது எல்லோருக்கும் அனுதாபம் உண்டு

ஆனால் இப்படி ஒருசிலரின் பொறுப்பற்ற நடவடிக்கையால் காவல்துறைகே களங்கம் வருகின்றது

காவல்துறை தலமை இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று ஏதாவது செய்து தன் களங்கத்தை துடைக்கட்டும், காரணம் இவர் சட்டத்தை மீறி, தன் பொறுப்பினை மீறி காட்டுமிராண்டிதனமாக நடந்திருப்பது உலகெங்கும் தமிழக காவல்துறையின் மரியாதையினை குலைத்திருக்கின்றது

அந்த அதிகாரியின் செயல் அந்த பிரிட்டிஷ் அதிகாரிகளை விட கொடியது, அவர்களாவது அந்நியர்கள், இவரோ சொந்த நாடு

அந்த சகோதரிக்கு ஆறுதலை சொல்லிகொள்ளலாம், மதுகடை மூட போராடியது ஒருவித சுதந்திர போராட்டம், திருப்பூர் குமரனை போல அந்த சகோதரியின் உறுதியும் தைரியமும் வாழ்த்துகுரியது.

டெல்லியில் ஏன் மோடி வாய்திறக்கவில்லை என கத்துபவனில் எவனாவது , காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் பழனிச்சாமி இப்படி தமிழக காவலரால் தமிழச்சி தாக்கபட்டதற்கு அமைச்சக விளக்கம் என்ன? என கேட்டானா?

ஒருவனும் கேட்கமாட்டான், இதுதான் தமிழகம்

சிம்பு பாடிவிட்டார், டெல்லியில் ஏதோ நடந்தது என சொல்லும் பெண்ணிய உரிமைகாப்பாளர்கள் யாரேனும் பொங்கியதாகவும் தெரியவில்லை, அவர்களை திரட்ட சிம்பு பாட்டு எழுதவேண்டும்.

இந்த அட்டூழியத்திற்கு காவல்துறையின் அமைச்சரான மாண்பு மிகு பழனிச்சாமி வாய்திறந்து ஏதும் சொல்லித்தான் ஆகவேண்டும், ஆனால் இந்த பெண் எதிர்க்கும் டாஸ்மாக்கிற்கும் அவரல்லவா பொறுப்பு? பின் என்ன சொல்வார்?

அந்த அதிகாரிக்காவது உரிய தண்டனையினை அந்த அமைச்சர் வழங்கட்டும்

பாதிக்கபட்ட , அந்த தமிழச்சிக்கு நமது ஆழ்ந்த ஆறுதல்கள். உங்களுக்காக எழும் ஒவ்வொரு ஆதரவு குரலும் அந்த அதிகாரியின் கன்னத்தில் விழும் அறைகளே

அது ஏராளமாக விழுந்துகொண்டே இருக்கின்றது…