சுத்த பைத்தியக்கார கட்சியாக இருக்கும் போலிருக்கின்றது

 சசிகலா வழக்கில் வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். ஆட்சி அமைக்க ஆளுநர் விரைவில் அழைப்பார் : தம்பிதுரை

இதுதான் அதிர்ச்சியில் மூளை கலங்கி பைத்தியம் ஆவது என்பது

இனி எங்கு சென்று முறையிடுவார்? ஐநா சபையிலா?


Image may contain: 2 people

“என் போக்கில நாட்டுமருந்து கடையும், வீடியோ கடையும் வச்சிருந்தேன்..

என்ன முதல்வராக்குரேன்னு சவால் விட்டு, ஆசைகாட்டி , கடைசியில இப்படி பெங்களூர் ஜெயில்ல அடச்சிட்டீங்களே நட்டு மாமா

ஏன் இப்படி செஞ்சீங்க நட்டு மாமா…

இன்னொருக்கா அப்பல்லோவிற்கு போகாமயா இருந்துருவீங்க நட்டு மாமா???..” .


அதிமுகவில் இருந்து பன்னீர்செல்வத்தை நீக்கினார் சசிகலா, ஏராளமான பணிகளும், உடல்நல சிக்கலும் இருப்பதால் 4 வாரம் கழித்து சிறைக்கு வர அவகாசம் கேட்டு மனுதாக்கல்

அட, இவ்வளவு பெரும் தண்டனை பெற்றவரை கட்சியிலிருந்து நீக்குவார்களா? அல்லது தண்டனை பெற்றவர் இன்னொருவரை நீக்குவாரா?

சுத்த பைத்தியக்கார கட்சியாக இருக்கும் போலிருக்கின்றது

அது என்ன ஏராளமான பணி? எங்கு இருக்கின்றது? போயஸை காலி செய்வதா? அதனை அரசு பார்த்துகொள்ளும்

உடல்நலத்திற்கு என்ன? இவர்தானே 4 வருடம் ஆட்சி செய்யும் அளவிற்கு உடல்நலம் உள்ளது என ஆளுநரிடம் சென்று நின்றவர்.

அப்படி உடல்நலம் சரியில்லை என்றால் சிறையில் எய்ம்ஸ் டாக்டர்கள் பார்த்துகொள்ளமாட்டார்களா? ஒருவேளை அப்பல்லோவில் படுத்துகொள்ளும் திட்டம் இருக்குமோ?

விரைவில் இவரை ஆம்புலன்ஸில் போட்டு பெங்களூருக்கு கொண்டு செல்வார்கள் போல தெரிகின்றது.


 

ஜெயா இருக்கும் பொழுது இதே குன்ஹாவின் தீர்ப்புக்கு எதிராக தாடி வளர்த்து, அழுது புலம்பிய அதே அதிமுக‌

இன்று அதே தீர்ப்பில் சசிகலா உள்ளே செல்லும்பொழுது வெடி வெடித்து கொண்டாடுகின்றனர் என்றால்,

எந்த அளவிற்கு வெறுப்பினை சம்பாதித்திருக்கின்றார் என அவரே அறிந்துகொள்ளும் நேரம் இது.

இன்னும் அவர் பொதுசெயலாளராக இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கின்றது?

இப்பொழுதும் ஜெயாடிவியில் என்ன சொல்வார்கள் தெரியுமா?

“சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயா விடுதலை ஆனதால் தொண்டர்கள் உற்சாகம், தமிழகமெங்கும் கொண்டாட்டம்..”


 மிஸ்டர் சைமன், பாருங்கள் கடைசியாக தமிழகத்தை ஒரு கன்னட நீதிபதிதான் காப்பாற்றியிருக்கின்றான்

இந்தியாவில் இணைந்திருப்பது எவ்வளவு நல்லதென்று இப்பொழுதாவது புரிகின்றதா?

இதுதான் இந்திய தேசியம்..