சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை தமிழில் வெளியிடுவது நிறுத்தம்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை தமிழில் வெளியிடுவது நிறுத்தம்: மொழி பெயர்ப்புக்கு தமிழக அரசு உதவும் – சி.வி.சண்முகம்

அதாவது தீர்ப்புகளை தமிழில் வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கின்றது உச்சநீதிமன்றம்

நிச்சயம் இது திமுகவுக்கான வாய்ப்பு அவர்கள் தங்க தமிழ்செல்வனுக்கு எண்ணெய் குளியல் செய்து வாயில் கொழுக்கட்டை ஊட்டி மகிழ்ந்துகொண்டிருப்பதால் வாய்ப்பினை பிடித்தவர் ராமதாஸ்

ஆனாலும் அவர் இப்போது பாஜக கூட்டணி என்பதால் முணுமுணுப்போடு நிறுத்தினார்

விஷயத்தை தாமதமாக‌ பிடித்த சட்டதுறை அமைச்சர் சன்முகம், “அது.. இது. ம்ம்… தமிழக அரசு மொழிமாற்றம் செய்யும், ….வலியுறுத்துவோம்…” என சமாளித்தார்

எனினும் இது பற்றி ஏன் உங்களுக்கு முன்பே ராமதாஸ் சொன்னார், நீங்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை என்ற நிருபரின் கேள்வியில் சிக்கிவிட்டார் சன்முகம்

அன்னார் என்ன சொன்னார்

ராமதாஸ் சொன்னபின்புதான் இந்த விஷயமே எனக்கு தெரிந்ததது என்றார்

ஆக தமிழக சட்ட அமைச்சர் பதவியினை ராமதாஸிடம் கொடுத்துவிடலாம் என அமைச்சரே சொல்லிவிட்டார் பார்த்தீர்களா?