சும்மா காவேரியினை திற என கத்துவதோடு சரி

காவேரி தொடர்பாக வரைவு திட்டம் தாக்கல் செய்ய இரு வார அவகாசம் கேட்ட மத்திய அரசிற்கு கண்டனங்கள் எழுகின்றன‌

கன்னட தேர்தல் முடியும் வரை என பகிரங்கமாகவா கேட்க முடியும்?

சரி ஒருவேளை கோர்ட்டில் எதிர்கட்சியான காங்கிரசை அழைத்தால் என்ன சொல்லியிருக்கும்

இதேதான் சொல்லியிருக்கும் என்பதுதான் விஷயம்

இதோ மத்திய அரசு காலம் தாழ்த்துகின்றது, இங்கு அன்று ஐபிஎல் அரங்கை அடித்து நொறுக்க கிளம்பிய கும்பல் இப்பொழுது எங்கிருக்கும் என தெரியாது

இப்பொழுதும் இங்கு யாராவது பழனிச்சாமி அரசின் பதில் நடவடிக்கை என்ன என கேட்பார்களா என்றால் நிச்சயம் இல்லை

இந்த ராமதாஸ் எதற்கெடுத்தாலும் மாதிரி போடுவார். அரசு பட்ஜெட் என்றால் இவர் ஒரு பட்ஜெட் போட்டு என்னமோ செய்துகொண்டிருப்பார்

இப்படியும் சில அரசியல்வாதிகள் உண்டு

ஆனால் காவேரி விவகாரத்தில் யாருக்கும் மாதிரி கூட வரைய முடியவில்லை.

அவ்வளவு சிக்கலான விவகாரம் போல.

மத்திய அரசு நீதிமன்றத்தில் வரைவு கொடுப்பது இருக்கட்டும், இங்கு ஏன் ஒருவரும் இப்படி பகிரலாம் என திட்ட வரைவு கொடுக்கவில்லை

இப்படியும் பகிரலாம் என ஒருவர் இங்கு வரைவு தயாரித்திருக்கின்றாரா?

நிறைவேற்றபட கூடிய திட்டம் எப்படி இருக்க வேண்டும் என மாதிரி வரைவு தயாரிக்க தமிழகத்தில் நல்ல அரசியல்வாதி உண்டு என நினைக்கின்றீர்கள்?

அவ்வளவு விவரமாக ஒருவரும் இல்லை. சும்மா காவேரியினை திற என கத்துவதோடு சரி