சும்மா மோடிக்கு கருப்பு தினம் அது இது என வெறுப்பேற்றாதீர்கள்
சும்மா மோடிக்கு கருப்பு தினம் அது இது என வெறுப்பேற்றாதீர்கள்
இப்பொழுது ஒன்றும் கெட்டுவிடவில்லை, நோட்டுக்களை மாற்றிகொள்ள கொஞ்சம் குழப்பம் ஆனது மற்றபடி பணம் இல்லை என்றோ, பணத்தை தரமுடியாது என்றோ சொல்லவில்லை
ஆனால் இப்படியே திட்டிகொன்டிருந்தால் மோடிக்கு கோபம் வந்து பழிவாங்க நினைத்துவிட்டால் என்னாகும்?
நாட்டை திவால் ஆக்கிவிட்டால் முடிந்தது விஷயம், இந்திய பணம் குப்பை ஆகும், அடுப்பெரிக்க மட்டும் பயன்படுத்தலாம் கூடவே வங்கி பணங்கள் அவ்வளவுதான்
இது பல நாடுகளில் நடந்த விஷயம்
இந்தியாவில் அப்படி நடக்க எவ்வளவு நேரமாகும்? அதனால் மோடி எங்கள் பணத்தை எடுக்க எங்களை அலையவிட்டார், ஏடிம்மில் தூங்கினோம் என்ற கோஷத்தை உடனே நிறுத்துங்கள்
இல்லாவிட்டால் ஆத்திரத்தில் மோடி நாசமாக்குதல் என்றால் என்ன என இனி காட்டுகின்றேன் என தமிழிசையினை நிதியமைச்சராக்கிவிட்டால் என்ன செய்வீர்கள்?
நாடு திவாலாகும் , இந்திய பணம் நொடியில் குப்பையாகும், எவ்வளவு அழுதாலும் மிஞ்சாது
ஆக இருக்கும் 2 வருடத்தினையும் அவரை நிம்மதியாக கழிக்கவிடுங்கள், கோபபடுத்தாதீர்கள்
அதுதான் எல்லோருக்கும் நல்லது.